search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youths arrest"

    சரவணம்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    போலீசாரின் தீவிர விசாரணையில் சின்னவேடம் பட்டியில் 3 பேர் சிக்கினர்.

    விசாரணையில் அவர்கள் கணபதி ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்த மோகித் குமார் (22), உக்கடம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த நதிஷ் குமார்(26), மணியகாரம்பாளையத்தை சேர்ந்த நவீன் குமார்(22) என்பது தெரிய வந்தது.

    இவர்களில் மோகித் குமார், நவீன்குமார் இருவரும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஆவார்கள். நதிஷ் குமார் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மோகித் குமார், நவீன் குமாரிடம் கொடுத்துள்ளார்.

    அவர்கள் காரில் வைத்து கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

    3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா, 1 கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், கைதான 3 பேரும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தவர்கள் ஆவர்.

    கோவையில் கஞ்சா விற்று வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இதனால் கஞ்சா விற்பனை முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஓன்றிரண்டு பேர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    சில மாணவர்கள் தவறான நண்பர்களின் பழக்கத்தால் கஞ்சாவுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாத நிலைக்கு சென்று விடுகின்றனர்.

    எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் யார்- யாருடன் நண்பர்களாக பழகுகின்றனர்? வெளியில் அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது? என்பதையும் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ஓட்டேரியில் டீக்கடைக்காரரை கொலை செய்ய கத்தியுடன் சென்ற வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் நேற்று இரவு பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரோந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் கையில் எதையோ மறைத்தப்படி நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்தார். சந்தேகம் அடைந்து அவர்களை நிற்குமாறு கூறினார். உடனே 2 வாலிபர்களும் தப்பி ஓடினார்கள். போலீசார் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கீழே விழுந்து கையில் காயம் அடைந்தார்.

    அவர்கள் துணியில் 2 கத்திகளை மறைந்து வைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பிறகு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த சரத், சுதாகர் என்பதும் ஓட்டேரியில் டீக்கடைக்காரர் ஒருவரை கொலை செய்ய சென்றதும் தெரியவந்தது.

    நேற்று காலை சரத் ஓட்டேரியில் சசிகுமார் நடத்தும் டீக்கடையில் வடை சாப்பிட்டு உள்ளார். அப்போது அவருக்கும் டீ மாஸ்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் டீக்கடைக்காரர் சரத்தை திட்டி முகத்தில் சுடுதண்ணீரை ஊற்றி விடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சரத் தனது நண்பர் சுதாகரிடம் கூறியுள்ளார். அதையடுத்து அவர்கள் டீக்கடைக்காரரை கொலை செய்ய முடிவு செய்து கத்தியுடன் சென்று உள்ளனர். அப்போது தான் ரோந்து போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

    இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவிகளை திருமணத்துக்காக கடத்திச் சென்ற புகாரில் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
    கம்பம்:

    கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது மாணவி தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி பள்ளி முடிந்து அவர் வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து கம்பம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.

    விசாரணையில் மதுரை திடீர்நகரைச் சேர்ந்த அவரது தோழி நூர்நிஷா (22) என்பவருடன் சென்றது தெரிய வந்தது. நூர்நிஷாவின் நண்பரான மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் காதர் அவுலியா (21) என்பவரும் மாணவியும் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பகுதியில் குடியிருந்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் கண்டித்து அவரை அனுப்பி விட்டனர். இதனால் மாணவியை திருமணம் செய்து கொள்வதற்காக நூர்நிஷா உதவியுடன் காதர் அவுலியா கடத்திச் சென்றுள்ளார்.

    மைனர் வயதுடைய பள்ளி மாணவியை கடத்திச் சென்ற கார் டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். உடந்தையாக இருந்த அவரது தோழி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    தேனி மாவட்டம் கம்பம் குரங்கு மாயன் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பாததால் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் அவரை தேடி வந்த போது கே.கே.பட்டி சாலையில் ஒரு வாலிபருடன் அவர் நின்று கொண்டு இருந்தார். அந்த வாலிபர் சுருளிப்பட்டியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் கார்த்தீஸ்வரன் (வயது 23) என்பதும், மாணவியை திருமணத்துக்காக அழைத்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மாணவியை மீட்டு போலீசார் அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். கார்த்தீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு ஓட்டலுக்கு செல்லாமல் ஆட்டோவில் சுற்றியதாக, டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். #delhiwomanmolestation
    கும்பகோணம்:

    வங்கி பணி பயிற்சிக்காக டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ரெயில் மூலம் கடந்த 2-ந்தேதி கும்பகோணத்துக்கு வந்து இறங்கினார்.

    பின்னர் தான் தங்கும் ஓட்டலுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினார். அந்த ஆட்டோ டிரைவர், இளம்பெண் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்லாமல் பல இடங்களுக்கு சுற்றி வந்தார். சந்தேகம் அடைந்த இளம்பெண், ஆட்டோ டிரைவரிடம் இது எந்த இடம் என்று கேட்டுள்ளார்.

    தொடர்ந்து அவர் கேட்டு வந்ததால் ஆட்டோ டிரைவர் செட்டிமண்டபம் பை பாஸ் ரோட்டில் அந்த பெண்ணை இறக்கி விட்டு சென்று விட்டார். நள்ளிரவில் தனியாக நடந்து வந்த இளம்பெண்ணை பார்த்ததும் அங்கு நின்ற 2 வாலிபர்கள் அவரிடம் நைசாக பேசி, மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறினர். இதை நம்பி இளம்பெண்ணும் அவர்களுடன் சென்றார்.

    ஆனால் அந்த வாலிபர்கள் ஆள்நடமாட்டமில்லாத இடத்துக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். தனது நண்பர்கள் 2 பேரையும் அழைத்தனர். 4 வாலிபர்களும் அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர். பிறகு 4 பேரும், ஆட்டோவில் இளம்பெண்ணை ஓட்டல் அருகே கொண்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வசந்த், தினேஷ், புருசோத்தமன், அன்பரசு ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ரெயில் நிலையத்தில் இருந்து இளம்பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் யார்? என்பது மர்மமாக இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து அந்த ஆட்டோ டிரைவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

    கும்பகோணம் நகரில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்த போது அதில் 4, 5 ஆட்டோக்கள் மட்டும் நள்ளிரவு நேரத்தில் சென்றது தெரியவந்தது. இதனால் அந்த ஆட்டோ டிரைவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் ஒரு ஆட்டோ டிரைவரை பற்றி மட்டும் துப்பு துலங்கவில்லை.

    இதற்கிடையே திருவிடைமருதூர் திருப்பணிபேட்டையில் ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ மட்டும் வித்தியாசமாக உருமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இது பற்றி சக ஆட்டோ டிரைவர்கள் அவரிடம் கேட்டனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்ற ஆட்டோ டிரைவர்கள் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த ஆட்டோவை கைப்பற்றி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த ஆட்டோ டிரைவர் பெயர் குருமூர்த்தி (வயது 25) என தெரியவந்தது.

    இதனால் குருமூர்த்தியை போலீசார் விசாரணைக்காக கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி தான் அந்த இளம் பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று 1 மணி நேரமாக சுற்றி திரிந்ததும் நள்ளிரவில் நடுரோட்டில் அந்த பெண்ணை இறக்கி விட்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் குருமூர்த்தியை கைது செய்தனர்.

    கைதான குருமூர்த்தி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். கடந்த மாதம் தான் எனது தாய் கடன் வாங்கி இந்த ஆட்டோவை எனக்கு வாங்கி கொடுத்தார்.

    நான் இரவு பகலாக உழைத்து வந்தேன். இந்த நிலையில் தான் கடந்த 2-ந்தேதி நள்ளிரவு டெல்லியை சேர்ந்த இளம்பெண் என் ஆட்டோவில் ஏறி அவர் தங்கும் ஓட்டலுக்கு செல்லுமாறு கூறினார். அவர் பேசிய ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி எனக்கு புரியாததால் அவரிடம் அதிக பணம் வசூலித்து விடலாம் என்று பேராசை பட்டேன்.


    இதற்காக அவர் கூறிய ஓட்டலுக்கு உடனே செல்லாமல் நகரின் பல இடங்களில் சுற்றி திரிந்து அழைத்து சென்றேன். அப்போது அந்த பெண் தனது செல்போனில் கூகுள் மேப் மூலமாக நான் தவறான பாதையில் செல்வதை கண்டு பிடித்து விட்டார். பின்னர் என்னை ஆட்டோவை நிறுத்துமாறு கூச்சல் போட்டார்.

    நான் கூறிய ஓட்டலுக்கு அழைத்து செல்லாமல் வேறு பாதையில் செல்வதாக என்னை திட்டினார். இதனால் பயந்து போன நான் அந்த பெண்ணை நள்ளிரவு நேரத்தில் செட்டிமண்டபம் பைபாஸ் ரோட்டில் இறக்கி விட்டு அவரிடம் பணம் கூட வாங்காமல் அங்கிருந்து உடனே சென்று விட்டேன்.

    பின்னர் மறுநாள் தான் நான் ஆட்டோவில் இறக்கி விட்ட பெண் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். மேலும் அந்த பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர் என்பதை அறிந்து பயந்து போனேன். இதனால் போலீசிடம் இருந்து தப்பிக்க எனது ஆட்டோவில் சிறு சிறு மாற்றம் செய்தேன். இருந்த போதிலும் போலீசார் என்னை எப்படியோ பிடித்து விட்டனர். மற்றபடி எனக்கு இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார் டெல்லி பெண்ணை எங்கிருந்து ஏற்றி சென்றாய்? எந்த வழியாக சுற்றி அழைத்து சென்றாய்? என்று அந்தந்த பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  #delhiwomanmolestation
    கும்பகோணத்திற்கு பணி நிமித்தமாக வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று 4 வாலிபர்கள் கற்பழித்துள்ளனர். #DelhiWomanMolested
    கும்பகோணம்:

    இந்தியாவில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருவது மக்களிடம் அதிர்ச்சியையும் கோபத்தையும், தூண்டியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

    அதேபோல் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் தான் டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கோவில் நகரமாக போற்றப்படும் கும்பகோணத்தில் 4 காமக் கொடூரர்களால் நடந்துள்ளது.

    கும்பகோணத்திற்கு பணி நிமித்தமாக வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று 4 வாலிபர்கள் கதற கதற கற்பழித்துள்ளனர்.

    டெல்லி இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக உள்ளது.

    டெல்லியில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் 23 வயது நிரம்பிய இளம்பெண்ணுக்கு பதவி உயர்வுக்கான பயிற்சி கும்பகோணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்தது.

    இதற்காக டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தார். அந்த இளம்பெண் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு கடந்த 2-ந் தேதி திருச்செந்தூர் விரைவு ரெயிலில் இரவு 10.30 மணிக்கு வந்துள்ளார்.

    பின்னர் டெல்லியில் இருந்து ஏற்கனவே கும்பகோணத்தில் அந்த வங்கிக்கு பயிற்சிக்கு வந்திருந்த தனது தோழிகளுக்கு தொடர்பு கொண்டு ரெயில் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அந்த சமயத்தில் மழை பெய்வதால் சிறிது நேரம் ரெயில் நிலையத்தில் காத்திருக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் நீண்டநேரம் காத்திருந்த அந்த இளம்பெண் தன் தோழிகளிடம் தொடர்புக் கொண்டு அவர்கள் தங்கி உள்ள ஓட்டல் விவரங்களை கேட்டுள்ளார்.

    நள்ளிரவு 12 மணி ஆகியது. ரெயில் நிலையத்தில் ஆட்டோ எதுவும் இல்லாததால் மழையில் நனைந்தவாறு ரெயில் நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்துள்ளார். அப்போது ரெயில் நிலையத்தில் யாரோ ஒருவரை இறக்கி விட வந்த வெளியூர் ஆட்டோவை கையசைத்து நிறுத்தி அதில் ஏறி தான் செல்ல வேண்டிய ஓட்டல் விவரங்களை ஆட்டோ டிரைவரிடம் கூறியுள்ளார்.

    முதன்முறையாக கும்பகோணம் வந்ததால் அந்தப் பெண்ணுக்கு சரியான வழி தெரியவில்லை. அந்தப் பெண் இந்தியில் பேசிக்கொண்டே வந்ததால் அந்த ஆட்டோ டிரைவர் அதிக பணம் வசூலிக்கலாம் என எண்ணி அந்த பெண்ணை வெவ்வேறு பாதைகளில் சுற்றி சுற்றி வந்துள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் தன்னுடைய பாதையில் திசை மாறி செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் இன்னும் சிறிது தூரத்தில் ஓட்டல் வந்துவிடும் என கூறிக்கொண்டு தொடர்ந்து ஆட்டோவில் சுற்றி சுற்றி வந்துள்ளார். பயந்துபோன இளம்பெண் டெல்லியில் உள்ள தன்னுடைய தமிழ் தெரிந்த நண்பருக்கு தொடர்பு கொண்டு அழுதுள்ளார். இதனால் அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்தப் பெண்ணை செட்டி மண்டபம் பைபாஸில் நள்ளிரவில் நடுவழியில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.

    அதன் பிறகு அந்தப் பெண் தன்னுடைய டிராலி பேக்கை எடுத்துக்கொண்டு மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் சாலையில் நடந்து வந்துள்ளார்.

    அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நான்கு பேரில் ஒருவர் அந்தப் பெண் தனியாக நடந்து வருவதைக் கண்டு அந்த பெண்ணிடம் தமிழில் பேசியுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணிற்கு தமிழ் புரியாததால், ஆங்கிலத்தில் அந்த நபரிடம் ஓட்டல் வழியை கேட்டுள்ளார். உடனே அந்த வாலிபர் நான் மோட்டார் சைக்கிளில் வந்து இறக்கிவிடுவதாக கூறி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அந்தப் பெண்ணை ஏற்றுக்கொண்டார். அந்தப் பெண்ணிற்கு பின்னால் மற்றொரு வாலிபரும் ஏறிக்கொண்டார்.

    இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு நாச்சியார்கோவில் பைபாஸ் ரோட்டிற்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மற்ற 2 பேரையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்து அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து கதற கதற கற்பழித்துள்ளனர். அந்த இளம்பெண் 2 மணி நேரம் , அந்த 4 காம கொடூரர்களுடன் போராடியுள்ளார்.

    அப்போது இளம்பெண் வலி தாங்காமல் கூச்சலிட்ட போது கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் மிருகத்தை விட கொடூரமாக அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

    அதன் பின்னர் அந்தப் பெண்ணை 4 வாலிபர்களில் ஒருவர் அழைத்துக் கொண்டு நாச்சியார்கோவில் மெயின் ரோட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அந்தப் பெண்ணும் வாலிபரும் ஏறிக்கொண்டனர். ஆட்டோவில் அழுதுக் கொண்டே வந்த அந்த பெண்ணிடம் தாங்கள் செய்ததை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர். அதனை அந்த ஆட்டோ ஓட்டுனர் கேட்டபடி வந்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே ஆட்டோவை நிறுத்தி அந்த வாலிபர் கீழே இறங்கினார். பின்னர் ஆட்டோ டிரைவரிடம் செல்போனை மறந்து வைத்து விட்டு வந்ததாகவும் உங்களுடைய செல்போனில் தன்னுடைய நண்பருக்கு போன் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து செல்போன் எண்ணை கூறும் படி அந்த ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.

    அந்த வாலிபர் தன்னுடைய நண்பனின் செல்போன் எண்ணை கூறும் போது அதனை அந்தப் பெண் தன்னுடைய மனதில் பதிந்து வைத்துக்கொண்டார். பின்னர் செல்போனில் பேசி அந்த வாலிபர் தன்னுடைய நண்பனிடம் மோட்டார் சைக்கிளை எடுத்து பழைய மீன் மார்க்கெட் வரும்படி கூறியுள்ளார். அதன்படி அங்கு வந்த தன்னுடைய நண்பனின் மோட்டார் சைக்கிளில் ஏறி கொண்டு ஆட்டோ டிரைவரிடம் அந்தப் பெண் கூறும் ஓட்டலுக்கு அழைத்து சென்றுவிடுமாறு கூறிவிட்டு அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று உள்ளனர். ஓட்டலில் அந்த இளம்பெண் இறங்கியவுடன் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அந்தப் பெண் தன்னை வந்து இறக்கிவிட்ட ஆட்டோ எண்ணை குறித்து வைத்துக் கொண்டார்.

    இதுகுறித்து ஓட்டலில் தங்கியிருந்த தன்னுடைய தோழிகளிடம் கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்த கொடூர பாலியல் பலாத்காரம் சம்பவம் வெளியில் தெரியாமல் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் போலீசாரிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

    டெல்லியில் இருந்து தன்னுடைய பெற்றோர் வரும் வரை புகார் கொடுக்க மாட்டேன் என மறுத்து விட்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    எந்த தகவலும் இல்லாததால் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் வெளியே தெரிய தொடங்கியது.

    இதனைப்பார்த்த ஆட்டோ டிரைவர் தன்னுடைய ஆட்டோவில் வந்த பெண்ணாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் தகவல் தெரிவித்தார். அவர் அளித்த தகவல்களை போலீசார் வாங்கி வைத்துக் கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் கும்பகோணம் வந்தனர். அவர்களிடம் அந்தப் பெண் நடந்தவற்றை விவரமாகக் கூறியுள்ளார். மேலும் தன்னை கொன்று விடுமாறு தன்னுடைய பெற்றோரிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

    அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள் தன்னுடைய மகளுக்கு நேர்ந்த கொடூர பாலியல் வன்கொடுமை நினைத்து கண்ணீர் விட்டு கதறினர்.

    இனி இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் வேறு எந்த பெண்ணிற்கும் நடக்கக் கூடாது. எனவே போலீசில் புகார் கொடுக்கும் படி தன்னுடைய மகளை வற்புறுத்தினர். அதன் பேரில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் போலீசில் புகார் அளித்தார். அப்போது கட்டிய மனைவியிடமும், விபச்சார பெண்களிடமும் கூட செய்வதற்கு கூறப்படுகின்ற மிகக் கொடூரமான செயலை செய்ய சொல்லி அந்தப் பெண்ணை வற்புறுத்தி கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்தப் பெண் கூறுவதை பதிவு செய்த பெண் போலீசார் அந்தப் பெண் பட்ட கஷ்டத்தை நினைத்து கண்ணீர் விட்டு அழுதனர்.

    அப்போது அந்த பெண் போலீசாரிடம் தான் வந்து ஓட்டலில் இறங்கிய ஆட்டோ பதிவு எண்ணையும், தான் மனதில் பதிந்து வைத்திருந்த அந்த வாலிபர் கூறிய செல்போன் எண்ணையும் அரைகுறையாக போலீசாரிடம் கூறியுள்ளார். அதன்பிறகு அந்த ஆட்டோ எண் யாருடையது என விசாரித்தபோது ஏற்கனவே போலீசாரிடம் தகவல் தெரிவித்த ஆட்டோ டிரைவரின் ஆட்டோ எண் என தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரை வரவழைத்து அவரது செல்போனில் அந்த வாலிபர் பேசிய செல்போன் எண்ணை கண்டுபிடித்து அந்த எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    அந்த செல்போன் யாருடையது என்பதை வைத்து போலீசாருக்கு துப்பு துலங்கியது.

    கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மகன் (வயது 21), என்பவருடையது என தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவரும் அவருடைய நண்பர்களான கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (24), செட்டி மண்டபம் நகரைச் சேர்ந்த சிவாஜி மகன் புருஷோத்தமன் (19), கும்பகோணம் அலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் ( 19) ஆகிய 4 பேரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

    அதனைத் தொடர்ந்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் நேற்று 4 வாலிபர்களை கைது செய்தார்.

    அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 366 இளம்பெண் கடத்தல், 376 பாலியல் பலாத்காரம், 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் கும்பகோணம் முதலாம் எண் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து திருச்சி மத்திய சிறைக்கு அந்த 4 பேரையும் கொண்டு சென்றனர்.

    கோயில் நகரம் என போற்றப்படும் இந்த கும்பகோணம் நகரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற ஆசிரியர் ஒருதலை காதலால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

    அதேபோல் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் கடையில் வேலை பார்த்த சிறுமி கடையில் வேலை பார்க்கும் ஊழியரே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு பள்ளி ஆசிரியராக வேலை பார்க்கும் பெண்ணை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது காரில் கடத்திச் சென்று காதலிக்குமாறு வற்புறுத்திய சம்பவம் நடந்தது.

    தற்போது வெளி மாநிலத்தில் இருந்து மொழி தெரியாத ஊருக்கு வேலைக்கு வந்திருந்த இளம்பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் வன்முறை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பிழைப்பிற்காக வெளிமாநிலத்தில் இருந்து வந்த இளம்பெண்ணின் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட சம்பவத்துக்கு மாதர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த மிருக செயலில் ஈடுபட்ட அந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பலரும் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்தனர். #DelhiWomanMolested
    திண்டுக்கல் அருகே கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ரெங்கநாதபுரம் மலைக் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    முன்னுக்கு பின் முரணான பதில் அளிக்கவே அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்தினர். அதில் 3 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனைடுயத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனை வைத்திருந்த ஆர்.எம்.காலனியை சேர்ந்த பாண்டியராஜன் (30), கண்ணன் (27), கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமிகாந்தன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு அம்சம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது அம்சம்மாள் கர்ப்பிணியாக உள்ளார். அவர் பிரசவத்துக்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து அருகில் உள்ள மற்றொரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார். இதனிடையே தனது மகனுக்கு மணிகண்டனால் ஆபத்து இருப்பதாக ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் தாய் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.

    அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் தனது மாமனார் ஊரான ஸ்ரீவைகுண்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

    சமீபத்தில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மீண்டும் சாத்தான்குளத்துக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். எனினும் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று மணிகண்டனை வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் மந்தரம் மகன் மணிகண்டன், ஷியாம், முத்து என்ற இசக்கிமுத்து, செல்லப்பா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கொலையாளிகள் பேய்குளத்தில் இருந்து தப்பி செல்ல இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று காலை அவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதில் சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவை சேர்ந்த பாப்புலிங்கம் மகன் முத்து என்ற இசக்கிமுத்து (20), வேல்பாண்டி மகன் நெல்லப்பா (18), மரியஜோசப் என்பவரின் மகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மந்திரம் மகன் மணிகண்டன், ஷியாம் ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேக்காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் சிதம்பரம் போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    சிதம்பரத்தில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டைக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 17 பயணிகள் இருந்தனர்.

    சோழத்தரம் அருகே கோதண்டவிளாகம் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது குமாரகுடியை சேர்ந்த வினோத் (22), தேசிங்குராஜன் (22) ஆகியோர் சாலையோரத் தில் நின்று கொண்டு அரசு பஸ்சை நிறுத்தும்படி சைகை காட்டினர்.

    ஆனால், அந்த பஸ் அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்தும், தேசிங்குராஜனும் ஓடி சென்று ஏன் பஸ்சை நிறுத்தவில்லை என்று டிரைவரிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    உடனே பஸ்சில் இருந்த பயணிகள் வேகமாக கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது தொடர்பாக பஸ் டிரைவர் சரவணன் சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பஸ்சை உடைத்த வினோத், தேசிங்குராஜன் ஆகியோர் குமாரக்குடி அருகே உள்ள வாய்க்கால் ஓரம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அங்கு மரத்தடியில் பதுங்கி இருந்த வினோத், தேசிங்குராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    வேலை பார்த்த கடையிலேயே மளிகை சாமான்களை திருடி விற்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை கீழமாசி வீதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 51). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் செல்லூரைச் சேர்ந்த குமரவேல்பாண்டி (45), நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிமாறன் (50) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

    சில மாதங்களாக கடையில் இருந்த பலசரக்கு சாமான்கள் குறைந்து வந்தது. இதனால் ராஜபாண்டிக்கு சந்தேகம் எழுந்தது. அவர் விசாரித்தபோது, கடையில் வேலை பார்த்த குமாரவேல் பாண்டி, மணிமாறன் ஆகியோர் 95 கிலோ மளிகை சாமான்களை திருடி வெளியில் விற்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேல்பாண்டி, மணிமாறனை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 5 கிலோ மளிகை சாமான்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    செவ்வாப்பேட்டை அருகே வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையில் ஈடுபட்ட சென்னை வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செவ்வாப்பேட்டை:

    செவ்வாப்பேட்டை எம்.ஜி.கே. நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி தனசேகர். இவரது மனைவி பவானி. கடந்த வாரம் வேப்பம்பட்டை அடுத்த கந்தன் கொல்லை பகுதியில் சென்றபோது பவானி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நகை பறிப்பில் ஈடுபட்டது சென்னை சூளையை சேர்ந்த பிரகாஷ் என்கிற பூனை பிரகாஷ், வியாசர்பாடியை சேர்ந்த அருண்குமார் என்பது தெரிந்தது.

    இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் பிரகாசை கைது செய்தனர். அருண்குமார் ஏற்கனவே எம்.கே.பி. நகரில் நடந்த வழிப்பறி வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது தெரிந்தது.கைதான பிரகாசிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது.

    பவானியிடம் நகை பறிக்கும் சம்பவம் நடந்த போது தண்ணீர்குளம் பகுதியில் அனிதா என்பவர் விபத்தில் சிக்கி இருந்தார். அவரது செல்போன் மாயமாகி இருந்தது. இதுபற்றி அனிதா போலீசில் புகார் செய்தார். விசாரணையில் கொள்ளையர்களான பிரகாசும், அருண்குமாரும் அதனை பயன்படுத்தியது தெரிந்தது.

    இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்த போது பவானியிடம் நகை பறித்ததை ஒப்புக் கொண்டனர்.

    இதுகுறித்து கைதான பிரகாஷ் போலீசாரிடம் கூறும்போது, ‘‘பவானியிடம் நகை பறித்து தப்பி வந்த போது தண்ணீர்குளம் பகுதியில் அனிதா விபத்தில் சிக்கி கிடந்தார். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம். அப்போது அவரது செல்போனை திருடி சென்று விட்டோம். இதனால் நாங்கள் சிக்கிக்கொண்டோம்.

    கொள்ளையில் ஈடுபடுவதற்காக காக்களூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தோம்’’ என்று கூறியுள்ளார். கைதான பிரகாசின் கூட்டாளிகள் யார்? யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நீலாங்கரையில் வழிப்பறி கொள்ளையை தடுத்த விடுதி காவலாளியை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ராமராஜ்.

    கடந்த 8-ந் தேதி இரவு விடுதிக்குள் 2 வாலிபர்கள் திடீரென புகுந்தனர். அவர்கள் அங்கு தங்கி இருந்த சுற்றுலா பயணிகளை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட முயன்றனர்.

    இதனை ராமராஜ் தடுக்க முயன்றார். உடனே மர்ம கும்பல் அவரை கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ராமராஜுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. இதனை வைத்து வெட்டுவாங்கேனி பகுதியை சேர்ந்த நாகராஜ், பெரிய நீலாங்கரை குப் பத்தை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் இலங்கை புறப்பட இருந்த பயணிகளை சுங்கத்துரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது ஒரு வாலிபரின் பின்புற இடுப்பு பகுதி அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவரை தனியாக அழைத்து சென்று சோதித்தனர்.

    அப்போது யூரோ நோட்டுக்களை இடுப்பில் சுற்றி வைத்து டேப் போட்டு ஒட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த வாலிபரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரது பெயர் சரவணன் (28). இலங்கையை சேர்ந்தவர்.

    இதேபோல் நேற்று நள்ளிரவில் சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த முகமது யாசின் (33) என்பவர் தனது உள்ளாடைக்குள் ரியால், தினார், யூரோ நோட்டுக்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    இருவரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். #ChennaiAirport
    ×