search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Driver murder"

    • போலீசார் சவாரிக்கு அழைத்த செல்போன் அழைப்பு குறித்து துப்பு துலக்கினர்.
    • கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள குறவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி (வயது 37). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி சத்யா. இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு சதீஷ் (2) மகன் உள்ளார்.

    நேற்று மாலை சிவமணி வீட்டில் இருந்த போது சவாரிக்கு வரவேண்டும் என்று செல்போன் அழைப்பு வந்தது. இதனை நம்பிய சிவமணி தனது மனைவியிடம் சவாரிக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு சென்றார்.

    அதன்பின்னர் இரவு முழுவதும் சிவமணி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்யா செல்போனை தொடர்பு கொண்ட போது அது ஒலித்து கொண்டே இருந்தது. போனை சிவமணி எடுக்கவில்லை.

    பதறி போன சத்யா தனது உறவினர்கள் உதவியுடன் சிவமணியை தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இன்று காலை சிவமணி எஸ்.புதூர்-ராமாபுரம் வாழைத்தோப்பில் சருகில் பிணமாக கிடந்தார். இதனை அந்தவழியாக சென்ற விவசாயிகள், பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிவமணியின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அதோடு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போலபரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர்.

    இதுபற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்துசென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் சவாரிக்கு அழைத்த செல்போன் அழைப்பு குறித்து துப்பு துலக்கினர். அப்போது கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது.

    உடனே போலீசார் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அந்த பெண்ணின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அந்த பெண் மாயமாகி விட்டார். அந்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை மடக்கி பிடித்தால் உண்மை நிலவரம் தெரியவரும்.

    எனினும் சிவமணி எதற்காக கொலை செய்யபட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார், கூலிபடையினரால் சிவமணி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை செய்யப்பட்ட மணி மீது வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • பாதிக்கப்பட்ட நபர்கள் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள நாராயணபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மணி என்ற வெள்ளை மணி (வயது 24). ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மணி வீட்டில் இருந்து வைகை வடகரை பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அருள்தாஸ்புரம் வைகை ஆற்றங்கரை பகுதியில் மணி நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி அவர்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    உடனே அந்த கும்பல் துரத்தி சென்று மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இன்று அதிகாலை அரிவாள் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் ரீகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட மணி மீது வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நபர்கள் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2010-ம் ஆண்டு அமைந்தகரை, மாங்காளி அம்மன் கோவில் அருகே சவாரி ஏற்றுவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் கருணாநிதியுடன் தகராறு ஏற்பட்டது.
    • இந்த மோதலில் செல்வக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை, செனாய் நகர் வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது28). ஆட்டோ டிரைவர்.

    கடந்த 2010-ம் ஆண்டு அமைந்தகரை, மாங்காளி அம்மன் கோவில் அருகே சவாரி ஏற்றுவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் கருணாநிதியுடன் தகராறு ஏற்பட்டது.

    இந்த மோதலில் செல்வக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.

    இதுதொடர்பாக வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி கருணாநிதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    திருச்சி அருகே நள்ளிரவில் இரண்டாவது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபு (வயது 38). இவரது மனைவி உஷா (30). இரண்டாவது மனைவியான இவருக்கு மித்ராஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

    முதல் மனைவி ரேணுகா 2 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்ததையடுத்து பிரபு 2-வது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு இரட்டைக் குழந்தைகளான 10 வயதில் தேவா என்ற மகனும் தேவி என்ற மகளும் உள்ளனர்.

    பிரபு, துறையூரில் லோடு ஆட்டோ டிரைவராக பணி வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் துறையூரில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பியவர், மனைவியுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதையடுத்து அதனை தொடர்பு கொண்டு பேசிய பிரபு, சற்று நேரத்தில் வந்து விடுகிறேன் என மனைவியிடம் கூறி விட்டு வெளியே புறப்பட்டு சென்றார். இரவு முழுக்க காத்திருந்த உஷாவிற்கு, அதிகாலை பிரபு ரோட்டில் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது.

    இதைக்கேட்டு உஷா அலறியடித்துக்கொண்டு ஓடினார். ஆலத்துடையான்பட்டியிலிருந்து எம்.ஜி.ஆர். காலனி செல்லும் சாலையில் பிரபு ரத்தக்காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவலளித்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார், துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், முசிறி டி.எஸ்.பி. தமிழ்மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    முதுகு, நெஞ்சு, கழுத்து பகுதிகளில் கத்திக்குத்துக் காயங்களுடன் பிரபு படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. இதற்கிடையே திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பிரபுவின் மனைவி உஷா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    திருச்சியிலிருந்து மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை பதிவு செய்தனர். கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடும்ப பிரச்சனையா அல்லது தொழில் போட்டியால் ஆட்டோ டிரைவர் பிரபு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாணியம்பாடி:

    ஆம்பூர் அடுத்த சோளூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுமித்ரா இவர்களுக்கு 1 மகள் உள்ளார்.

    பாஸ்கர் நேற்று தனது குடும்பத்தினருடன் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன கொள்ளகுப்பம் பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது ஆட்டோவில் சென்றார்.

    சின்ன கொள்ளகுப்பம் பகுதியில் ஆட்டோ சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர் கும்பல் மீது மோதுவதுபோல் சென்றுள்ளது.

    இதனை அந்த 7 பேர் கும்பல் தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 7 பேர் கும்பல் பாஸ்கரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கினர்.இதில் பாஸ்கர் படுகாயமடைந்தார்.

    அவரை மீட்ட உறவினர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாஸ்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பாஸ்கர் தரப்பில் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார், சூர்யா, வெள்ளையன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பிரியாணி பிரச்சினையில் ஸ்ரீரங்கம் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள பிச்சாண்டவர் கோவிலை சேர்ந்தவர் அப்துல்லா (வயது35). ஆட்டோ டிரைவராக இருந்தார். நேற்று திருவானைக்காவலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அப்துல்லா சவாரி ஏற்றிச்சென்றார்.

    அப்போது திருவானைக்காவல் டிரங்ரோட்டில் மண்டபத்தின் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் சவாரிக்கு வந்த ஒரு பெண் 30 பொட்டலம் பிரியாணி வாங்க டோக்கன் வாங்கியுள்ளார். ஆனால் மண்டபத்திற்கு சென்று பார்த்துபோது 28 பொட்டலங்களே இருந்துள்ளது. இதனால் மீண்டும் பிரியாணி கடைக்கு சென்று அந்த பெண் பிரியாணி கடை மேனேஜரிடம் கேட்டுள்ளார்.

    அப்போது கடையில் இருந்தவர்களுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே வெளியில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் அப்துல்லா அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதை கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அம்பேத்கார் நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கடைக்காரர்களுக்கு ஆதரவாக பேசி அப்துல்லாவிடம் தகராறு செய்துள்ளார்.

    பிரியாணி பிரச்சினை பெரிதாவதை பார்த்த அந்த பெண் அங்கிருந்து பயந்து கொண்டு சென்றுவிட்டார். இதற்கிடையே நாகராஜூம், அப்துல்லாவும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனது நண்பர்கள் தயாளன் என்ற ஸ்ரீராம், முன்னா,கோகுல்நாத் என்ற பாரதி ஆகியோரை அழைத்து வந்த நாகராஜ் அப்துல்லாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

    இதில் அப்துல்லா மயங்கி விழுந்தார். உடனே 4 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனர். அடிபட்டு கிடந்த அப்துல்லாவை அவரது நண்பர் முஸ்தபா அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது முதலில் கீழே விழுந்ததால் காயம்பட்டதாக டாக்டரிடம் கூறும்படி முஸ்தபாவிடம் அப்துல்லா கூறியுள்ளார். இதனால் டாக்டர்கள் உரிய சிகிச்சையை உடனே அளிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

    ஆனால் 4 பேரும் நெஞ்சில் மிதித்ததால் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அப்துல்லா பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரியாணி கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை பார்த்தபோது அதில் நாகராஜூம் அவரது நண்பர்களும் அப்துல்லாவை அடித்து உதைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதன்படி நாகராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது நண்பர்களான தயாளன், முன்னா, பாரதி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    பிரியாணி பிரச்சினையில் தலையிட்டு கடைசியில் அப்பாவி ஆட்டோ டிரைவர் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. கொலை செய்யப்பட்ட அப்துல்லாவிற்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஆட்டோ டிரைவரை கொல்ல அரிவாளுடன் வந்த கும்பலில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    சென்னை, மூலகொத்தளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் வண்டியை நிறுத்தி சவாரி ஏற்றி வந்தார்.

    இந்த நிலையில் ஆட்டோவில் சவாரி ஏற்றுவது தொடர்பாக அர்ஜூனனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் ஆனந்த் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவரிகளிடம் மற்ற ஆட்டோ டிரைவர்கள் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

    இதற்கிடையே நேற்று இரவு 7 பேர் கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மூலகொத்தளம் பகுதியில் சுற்றினர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் 3 வாலிபர்கள் மூலகொத்தளத்தில் உள்ள சுடுகாட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர்.

    இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது சுடுகாட்டுக்குள் பதுங்கி இருந்த 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், டேனியல், வடிவேல் என்பது தெரிந்தது.

    சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் அர்ஜூனனை கொல்ல திட்டமிட்டு வந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி கண்டன்(வயது40). ஆட்டோ டிரைவர். மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மணிகண்டன் அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் விசாரணை நடத்தி சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவை சேர்ந்த பாப்புலிங்கம் மகன் முத்து என்ற இசக்கிமுத்து (20), வேல்பாண்டி மகன் நெல்லப்பா (18), மரியஜோசப் என்பவரின் மகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மந்திரம் மகன் மணிகண்டன், ராஜா மகன் ஷியாம் சுதர்சன் வினோ ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வந்தனர்.

    இதனிடையே போலீசார் சாத்தான்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் அவர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டி தப்ப முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் ஷியாம் சுதர்சன் மனோ என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மந்திரம் மகன் மணிகண்டனை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். #tamilnews
    பூந்தமல்லி அருகே சவாரி ஏற்றும் தகராறில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோட்டு என்கிற சத்தியகிரிராவ் (வயது30). ஷேர் ஆட்டோ டிரைவர்.

    இவர் ஆவடியில் உள்ள ஒரு ஆட்டோ நிறுத்தும் இடத்தில் சங்க செயலாளராக இருந்து அங்கேயே ஆட்டோ ஓட்டி வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை பாரிவாக்கம் கங்கையம்மன் கோவில் குளம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய சத்தியகிரிராவை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோக்களில் சவாரி ஏற்றும் தகராறில் சத்தியகிரிராவ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக ஆட்டோ டிரைவர்களான அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்த பூபாலன், சென்னீர்குப்பம் கபீர், பாலாஜி, திருமுல்லைவாயல் ஜார்ஜ் விஜய்பாபு, ஆவடியைச் சேர்ந்த அஜித் என்கிற ஜெகன்நாதன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு அம்சம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது அம்சம்மாள் கர்ப்பிணியாக உள்ளார். அவர் பிரசவத்துக்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து அருகில் உள்ள மற்றொரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார். இதனிடையே தனது மகனுக்கு மணிகண்டனால் ஆபத்து இருப்பதாக ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் தாய் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.

    அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் தனது மாமனார் ஊரான ஸ்ரீவைகுண்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

    சமீபத்தில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மீண்டும் சாத்தான்குளத்துக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். எனினும் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று மணிகண்டனை வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் மந்தரம் மகன் மணிகண்டன், ஷியாம், முத்து என்ற இசக்கிமுத்து, செல்லப்பா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கொலையாளிகள் பேய்குளத்தில் இருந்து தப்பி செல்ல இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று காலை அவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதில் சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவை சேர்ந்த பாப்புலிங்கம் மகன் முத்து என்ற இசக்கிமுத்து (20), வேல்பாண்டி மகன் நெல்லப்பா (18), மரியஜோசப் என்பவரின் மகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மந்திரம் மகன் மணிகண்டன், ஷியாம் ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
    சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திர காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி அம்சம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது அம்சம்மாள் கர்ப்பிணியாக உள்ளார். அவர் பிரசவத்துக்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து அருகில் உள்ள மற்றொரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார்.

    இதனிடையே தனது மகனுக்கு மணிகண்டனால் ஆபத்து இருப்பதாக ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் தாய் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் தனது மாமனார் ஊரான ஸ்ரீவைகுண்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

    சமீபத்தில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மீண்டும் சாத்தான்குளத்துக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் அங்கு வந்தனர்.

    அவர்கள் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனால் அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். எனினும் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று மணிகண்டனை வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இந்த சம்பவம் காரணமாக பஜாரில் பரபரப்பும், பதட்டமும் உண்டானது. அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு சாத்தான்குளம் டி.எஸ்.பி. பாலச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிந்தனர். தப்பி ஓடி தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    பள்ளிப்பாளையம் அருகே காதலியை பார்க்க வந்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள பெரும்பாறை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 27). மினி ஆட்டோ டிரைவர்.

    இந்த நிலையில் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஈகாட்டூர் பகுதியை சேர்ந்த பெண்களும், ஆண்களும் பள்ளிப்பாளையம், வெப்படை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூல்மில்லுக்கு தினமும் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். பெரும்பாலானோர் தறிப்பட்டறையிலும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    மினி ஆட்டோவை ஓட்டுவதை விட்டு விட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மராஜ் வெப்படையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அதே ஆலையில் பணிபுரிந்து வந்த ஈகாட்டூர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்துக்குமார்(36) என்பவருடைய மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

    இது பற்றி முத்துக்குமாருக்கு தெரியவந்தது. மகளுக்கு 17 வயதே ஆவதால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தர்மராஜை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த பெண், தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்து விட்டதாகவும், தன்னை கண்டித்து அடிப்பதாகவும் கூறி அழுதுள்ளார்.

    இதையடுத்து காதலியை பார்ப்பதற்காக தர்மராஜ் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு ஈகாட்டூருக்கு சென்றார். அப்போது பெண்ணின் தந்தை முத்துக்குமார் வீட்டின் வாசல் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்ததார். இதனால் தர்மராஜ் வீட்டுக்குள் செல்ல முடியாமல் அங்கும், இங்குமாக சுற்றிச் சுற்றி வந்தார். ஆள் நடமாட்டத்தை உணர்ந்த முத்துக்குமார் கண்விழித்து பார்த்தபோது, தர்மராஜ் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அவர் போதையில் இருந்ததாக தெரிகிறது. ஏன்? எதற்கு? இங்கு வந்தாய் என கேட்டபோது, முன்னுக்குப்பின் கூறினார்.

    இதனால் முத்துக்குமாரும், உறவினர்களும் சேர்ந்து மரக்கட்டையால் தர்மராஜை தாக்கினர். கை, கால், இடுப்பு, நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்கப்பட்டார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார், பெண்ணின் தந்தை முத்துக்குமார் மற்றும் உறவினர்கள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×