என் மலர்
நீங்கள் தேடியது "Neelankarai watchman attack"
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ராமராஜ்.
கடந்த 8-ந் தேதி இரவு விடுதிக்குள் 2 வாலிபர்கள் திடீரென புகுந்தனர். அவர்கள் அங்கு தங்கி இருந்த சுற்றுலா பயணிகளை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட முயன்றனர்.
இதனை ராமராஜ் தடுக்க முயன்றார். உடனே மர்ம கும்பல் அவரை கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ராமராஜுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. இதனை வைத்து வெட்டுவாங்கேனி பகுதியை சேர்ந்த நாகராஜ், பெரிய நீலாங்கரை குப் பத்தை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.






