என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "foreign money seized"
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் இலங்கை புறப்பட இருந்த பயணிகளை சுங்கத்துரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு வாலிபரின் பின்புற இடுப்பு பகுதி அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவரை தனியாக அழைத்து சென்று சோதித்தனர்.
அப்போது யூரோ நோட்டுக்களை இடுப்பில் சுற்றி வைத்து டேப் போட்டு ஒட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த வாலிபரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரது பெயர் சரவணன் (28). இலங்கையை சேர்ந்தவர்.
இதேபோல் நேற்று நள்ளிரவில் சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது யாசின் (33) என்பவர் தனது உள்ளாடைக்குள் ரியால், தினார், யூரோ நோட்டுக்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
இருவரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். #ChennaiAirport
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். அதனால் சந்தேகமடைந்து லிங்கேஸ்வரனை சோதனை செய்தபோது அவரின் கைப்பை, மற்றும் பேண்டில் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து இருந்தது தெரிந்தது.
அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.5½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லிங்கேஸ்வரனிடம் விசாரணை நடக்கிறது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்றிரவு திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த நசீர்கான் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர், ரூ.8.44 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பில், சவுதி ரியால் வெளிநாட்டு பணம் வைத்திருந்ததும், அதனை கடத்தி செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் நசீர்கானிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்