search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchi Airport"

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.44 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்றிரவு திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த நசீர்கான் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர், ரூ.8.44 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பில், சவுதி ரியால் வெளிநாட்டு பணம் வைத்திருந்ததும், அதனை கடத்தி செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் நசீர்கானிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் ரூ.16 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த அசாருதீன், உள்ளாடைக்குள் மறைத்து ரூ.3.10 லட்சம் மதிப்புள்ள 101 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் சென்னையை சேர்ந்த முகமது அஜீஸ் என்பவரும் ரூ.6.61 லட்சம் மதிப்புள்ள 183 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடத்தல் தங்கங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு விமானம் ஒன்று புறப்பட இருந்தது. முன்னதாக அதில் செல்ல இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது யாசிம் (வயது 36) என்பவர் டாலர்,யூரோ என இந்திய மதிப்பில் ரூ.8.03 லட்சம் வெளிநாட்டு பணம் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திருச்சி விமான நிலையத்தில் புதுக்கோட்டை பயணியிடம் இருந்து ரூ.13 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் போக்குவரத்துடன், சரக்கு போக்குவரத்தும் உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுபோல் தங்க நகை கடத்தல் உள்ளிட்ட செயல்களும் அதிரிகரித்துள்ளது.

    ஆனாலும் சுங்கத்துறை அதிகாரிகள் நவீன ஸ்கேனிங் உள்ளிட்ட கருவிகள் மூலம் தங்கம் கடத்தலை தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு விமான பயணியிடம் வெளி நாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இதில் செல்வதற்காக வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை போட்டனர்.

    அப்போது சிங்கப்பூர் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த புதுக்கோட்டையை சேர்ந்த தனபால் என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவரது பைக்குள் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த பையில் 200 அமெரிக்க டாலர்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 41 ஆயிரத்து 600 ஆகும். இந்த பணம் தனபாலுக்கு எப்படி கிடைத்தது, யார் மூலம் பெற்றார், அந்த பணத்தை சிங்கப்பூருக்கு யாருக்காக எடுத்து சென்றார்? என தனபாலிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை தங்கம், போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருச்சி விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது சென்னையை சேர்ந்த அருண் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர் ரூ.2.32 லட்சம் மதிப்புள்ள 75 கிராம் தங்கத்தை செயினாக செய்து மறைத்து எடுத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அருணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் சென்னை பயணியிடம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×