search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women health Problem"

    கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கான சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.

    அடினோமையாசிஸ் என்றால் என்ன:-

    கர்ப்பப்பையில் மூன்று பகுதிகள் இருக்கும் வெளியே உள்ள பகுதி சீரோசா என்றும் உள்ளே உள்ள உள்பகுதி எண்டோமெட்சியம் என்றும் மத்தியில் உள்ள பகுதி மையோ மெட்ரியம் என்றும் பிரிக்கப்படுகிறது.

    கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியம் சிதைந்து மையோமெட்ரியம் பகுதிக்கு சென்று கட்டியாக மாறுவது.

    அடினோமையோசிஸ் வகைகள்:-

    1. கர்ப்பப்பை முழுவதும் பாதிக்கப்படுவது டிபியூஸ் வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் பெரும்பான்மையான பகுதி பாதிக்கப்படு கிறது.

    இன்னொரு வகைக்கு லோக்கலைஸ்டு வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் எல்லா பகுதியும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் குறிப்பாக கர்ப்பப்பையின் பின்பகுதியை பாதிக்கிறது.

    அடினோமையோசிஸ் ஒரு பெண்ணிற்கு இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது.



    இந்நோயின் அறிகுறி:-

    அதிக இரத்தப் போக்கு ஏற்படுதல், அடிவயிற்றின் வலி குறிப்பாக மாதவிடாயின் போது அடி வயிற்றில் வலி ஏற்படுதல், குழந்தை பேறுயின்மை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுதல், அடி வயிற்றில் கட்டி தென்படுதல்

    இதனுடைய பரிசோதனை முறைகள்:-

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் MRI ஸ்கேன் மற்றும் பையாப்சி (Biopsy) மூலம் உறுதிபடுத்தி கொள்ளலாம்.

    சிகிச்சை முறைகள்:-

    ஆரம்ப காலத்தில் மருந்து மாத்திரை மூலம் சரி பண்ணிபார்க்கலாம். இதில் சரியாகவில்லை என்றால் முன்பு (Open) சாதாரண முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இப்போது அடினோ மையோசிஸ் கட்டிகள் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது.

    ஏற்கனவே நிறைய குழந்தைகள் இருந்தும் தாங்கமுடியாத வலி, அதிகபடியான இரத்தப்போக்கு இருந்தால் சில சமயங்களில் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    அதுவும் இப்பொழுது நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.

    சுசிலா மருத்துவமனை, பாவூர்சத்திரம்
    கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
    கர்ப்ப காலத்தில் உடல் நலன் மீது அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் நலம்தான் சிசுவின் நலனும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

    ‘‘நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான மூன்று தூண்கள் இருக்கும். அதைத்தான் மூலம் என்று சொல்கிறோம். வயிற்றுக்கும் ரத்தத்தால் ஆன இத்தூண்களுக்கும் தொடர்பு இருக்கிறது. உள் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும்போது அந்த அழுத்தம் மூலத்தில் பரவி அதனை உப்பிப்போக வைக்கும். அப்படியாக கர்ப்ப காலத்தின் போது உள் வயிற்றில் அழுத்தம் அதிகரித்துக் காணப்படும். கர்ப்பப்பை பெரிதாக பெரிதாக வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் அழுத்தம் அதிகமாகும்.

    இதனால் மூல நோய் இல்லாதவர்களுக்கு அது வரக்கூடும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு அதன் படிநிலை அதிகரிக்கக்கூடும். மலம் கழித்த பின் ஆசனவாயில் ரத்தம் வருதல் மற்றும் ஆசனவாய் ஓரத்தில் சில வீக்கங்கள் தெரிவது ஆகியவை இதற்கான ஆரம்பகால அறிகுறிகளாகும்.



    இப்படியான அறிகுறிகள் தெரிய வரும்போது பயப்படத் தேவையில்லை. முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் மலச்சிக்கலின் காரணமாக மலம் கழிப்பதற்காக முக்க வேண்டி வரும். இதனால் மூலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைத்து விட்டாலே மலச்சிக்கல் இருக்காது.

    கர்ப்ப காலத்தில் தாய்க்கு இரத்த சோகை வருவது மிகவும் இயல்பானதுதான். ஏனென்றால் குழந்தைக்கு புதிய அணுக்களை தயாரிப்பதற்காக தாயின் ரத்தம் செலவிடப்படும். இதனால் இரும்புச் சத்து முற்றிலும் குறைந்து போய் விடும். 30 சதவிகிதம் வரை கர்ப்பிணிகளுக்கு இரத்தசோகை ஏற்படலாம். இதைத்தவிர அவர்களுக்கு மூலநோய் இருக்கும் நிலையில் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்தசோகை அதிகரித்து விடும்.
    தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
    கழுத்தில் மூச்சுக்குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

    தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர்.

    இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.

    சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.

    அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.



    தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

    50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும்.

    மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.

    டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.

    ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
    பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள்.
    பெண்கள் உடல் சார்ந்த சில நோய்களையும், ஆரோக்கியப் பிரச்சனைகளையும் அதனால் அதிகரிக்கும் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அப்படி பெண்கள் சந்திக்கும் சில நோய்களில் சினைப்பை புற்றுநோயும் ஒன்று. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உடலின் எந்த உறுப்பையும் விட்டுவைக்காமல் தாக்கும் குணம் கொண்டது புற்றுநோய்.

    அப்படி பல்வேறு வகைகளும், பெயர்களும் கொண்ட புற்றுநோய்களில் பாலினம் சார்ந்து தாக்கும் புற்றுநோய்களும் சில உண்டு. குறிப்பாக, பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள். இதில் பெண்களின் உயிரையே பறிக்கும் அளவு அச்சுறுத்தும் காரணியாக சினைப்பை புற்றுநோய் உலக அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.

    பெரும்பாலான சினைப்பை புற்றுநோய், சினைப்பையின் புற உறை காரணமாக வருகிறது. சில தீவிர நிகழ்வுகளில் இடுப்பறைக்குள் உள்ள பிற உறுப்புகளான அண்டக்குழாய், கருப்பை, சிறுநீர்பை, பெருங்குடல் போன்ற இடங்களுக்கும் பரவகாரணமாகிறது .

    சினைப்பை புற்றுநோய்க்கான காரணங்கள்?

    சினைப்பை புற்றுநோயை விளைவிக்கக்கூடிய காரணிகளில் குடும்ப வரலாறு(Family history) முக்கிய பங்கு வகிக்கிறது. நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவர் சினைப்பை புற்றுநோய் அல்லது மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில், இவர்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.

    மரபியல் காரணியாக, BRCA1 மற்றும் BRCA2 வகை மரபணு மாற்றம் ஏற்படும் பெண்கள் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு 50 சதவீதம் வரை இருக்கிறது. பொதுவாக, 65 வயதுக்கு அதிகமாக இருக்கும் பெண்கள், குழந்தைப் பேறின்மை அல்லது குழந்தைப்பேறு சம்பந்தமான சிகிச்சைகள் மேற்கொண்ட பெண்கள் மற்றும் மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் சினைப்பை புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படும் ஆபத்து கொஞ்சம் அதிகரிக்கிறது.

    இதுதவிர, பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பதும் சினைப்பை புற்றுநோய்க்கு காரணமாகிறது. சினைப்பை புற்றுநோய்க்கான தோற்றங்களும், அறிகுறிகளும் ஆரம்ப நிலையில் அடிக்கடி மறைந்து விடும் தன்மையுள்ளவை அல்லது மிக நுட்பமாகவும் தோன்றலாம். இதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது, காலம் கடந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது.

    இடுப்பு வளையத்தில் வலி, முதுகு வலி, உடலுறவின்போது வலி, உடலின் கீழ் பகுதியில் வலி ஆரம்ப நிலையில் தோன்றும் அறிகுறிகள்.புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படத் தொடங்கும். எப்பொழுதும் உப்புசமாக இருப்பதாக உணர்தல், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் நலமற்று உணர்தல், வீக்கமான வயிறு, சிறிது உணவு உண்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு அல்லது பசியின்மை, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தேவை அல்லது சிறுநீரை வழக்கத்துக்கு மாறாக கட்டுப்படுத்த முடியாமை, மூச்சுத்திணறல் போன்றவையின் மூலம் கண்டுகொள்ளலாம்.

    சினைப்பை புற்றுநோய் இருப்பதை பரிசோதனையில் எப்படி கண்டுபிடிப்பார்கள்?

    முதலில் CA125 என்ற புரதத்தின் அளவை பரிசோதனை செய்து, பின்னர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்வது. பரிசோதனையின் முடிவுகள் சினைப்பை புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தால் நோயாளி ஒரு மகளிர் நலவியல் புற்றுநோய் நிபுணரை அணுகி, மற்ற பல தேவையான  பரிசோதனைகளையும் கண்டறியும் முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    சினைப்பை புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன?

    சினைப்பை புற்றுநோய் சிகிச்சைக்கான வழிமுறைகள் நோயின் தன்மை மற்றும் பாதிப்பு சார்ந்து இருக்கும். புற்றுநோய் நிபுணர் ஒற்றைமுறை அல்லது பல்வேறு சிகிச்சை முறைகள் இணைந்த ஒரு சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது பொதுவான அணுகுமுறை.

    சில தீவிர நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு கர்ப்பப்பை, அண்டக்குழாய், கருப்பை, கருப்பை. அருகிலுள்ள நிணநீர் முடிச்சுகள் மற்றும் உதரமடிப்பு ஆகியவற்றையும் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியதிருக்கும். இது முழு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்று அறியப்படும். கீமோதெரபி சிகிச்சையில் நோயாளிகளுக்கு குறிப்பாக கார்போப்ளாடின் மற்றும் பாக்லிடாக்செல் ஆகிய மருந்துகளின் கலவை நரம்புகள் ஊடாக செலுத்தப்படும்.

    புற்றுநோய் அணுக்களுக்கு ஈஸ்ட்ரோஜென் கொண்டு செல்லப்படுவதை தடுத்து அவற்றின் வளர்ச்சியை குன்றச்செய்ய ஹார்மோன் சிகிச்சை சேர்த்து செய்யலாம்.இனப்பெருக்க அமைப்பில் புற்றுநோய் இருப்பதற்கான சுவடுகள் தென்பட்டால் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் சில சமயங்களில் கதிர்வீச்சு சிகிச்சையை பயன்படுத்தலாம், அனால் அதை மட்டும் தனியாக பயன்படுத்தக் கூடாது!

    கர்ப்பமான காலத்தில் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என ஆசைகள் இருப்பது இயல்பானது.. அவ்வாறு பயணம் செய்யும் காலத்தில் எந்த வகையில் உங்களை பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.
    கர்ப்பமான காலத்திலிருந்து செய்ய கூடிய ஒவ்வொரு வேலையையும், அணுகுமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என ஆசைகள் இருப்பது அனைத்து பெண்களுக்கும் இயல்பாக தோன்றகூடியது.. அவ்வாறு பயணம் செய்யும் காலத்தில் எந்த வகையில் உங்களை பாதுகாக்கலாம். இதோ உங்களுக்கான சில டிப்ஸ்

    கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான மாதம் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதங்கள் வரை மட்டுமே பயணம் செய்துக் கொள்ளலாம்.. இந்த கால இடைவெளியில் உள்ள பெண்கள் காலை நேரத்தில் அதிக சுறுசுறுப்புடனும் மிகுந்த ஆற்றலுடன் செயல்படுதால் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது அனைத்து சூழ்நிலைகளையும் அவர்களால் எதிர்க்கொள்ளக்கூடிய ஆற்றல் இரண்டாவது முதல் ஆறாவது மாதம் உள்ள கர்ப்பிணிகளுக்கு இருக்கும்.

    கர்ப்பமான ஆரம்பக்காலத்தில் அதிக தூரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் தான் கரு வளர்ச்சி அடைகிறது. மேலும் நீங்கள் பயணம் செய்யும் போது குழந்தை அழிவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது உங்கள் உடல் நலமும் பாதிப்பிற்குள்ளாகும்.

    நீங்கள் கருவுற்ற காலத்தில் பயணம் செய்யும் போது சுவாதினம் இல்லாத குழந்தை பிறக்க நேரிடலாம், கரு தவறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது.. ஒரு வேளை உங்களுக்கு இரட்டை குழந்தையாக இருப்பின் இரு குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொண்டு பயணம் செய்ய முடிவெடுக்க வேண்டும்.

    கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் அல்லது புணர்புழை இரத்த ஒழுக்கு, கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், போன்றவை பயணம் ஒத்தி வைக்க பிற காரணங்களாக உள்ளன. நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பின் உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது அவசியம்.

    பயணம் பற்றி யோசிக்கும் போது ஏற்படக்கூடிய விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சில கர்ப்பிணிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்வதால் கால்வீக்கம், பசியின்மை, தளர்வு ஏற்படும். மேலும் தேவையான மருந்துக்களை எடுத்து கொண்டு பயணம் செய்யலாம். பயணம் செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொண்டு பயணியுங்கள்..
    ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்கான காரணங்களையும், தீர்வையை அறிந்து கொள்ளலாம்.
    ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.

    பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, `சிசேரியன்’ எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    அடுத்ததாக, பெண்களுக்கு வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆகஆக அவளது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது.

    இப்படித்தான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட சில பொதுவான காரணங்களும் உள்ளன.

    இயற்கை கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும் அதன் காரணமாகவும் ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்படும்.

    ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இருமினாலும் கூட குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருமல் ஏற்படும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதுதான் அதற்கு காரணம்.

    தடுப்பு முறைகள்

    பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போது இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்காக சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த வலை திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்த பகுதிக்கு வலுவூட்டுகிறது.

    இயற்கைக் கடன்களை கழிக்கும்போது தேவையில்லாமல் சிரமப்படுவதை (முக்குவது) தவிர்த்தாலும் குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
    பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிறு பெரிதாகக் காணப்படும். அவர்கள், சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் அந்த பிரச்சினையை எளிதில் போக்கிவிடலாம்.
    பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிறு பெரிதாகக் காணப்படும். பிள்ளைப் பெற்றால் இப்படித்தான் ஆகும்… என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், சில உடற்பயிற்சிகளை செய்யச் சொன்னால் அந்த பிரச்சினையை எளிதில் போக்கிவிடலாம்.

    அதற்கு என்ன செய்யலாம்?

    * மல்லாந்து படுத்துக் கொண்டு முதலில் வலது காலை மட்டும் மேலே தூக்க வேண்டும். பிறகு இடது காலை தூக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். இதுபோல் தினமும் பத்து முறை செய்யலாம். இப்படிச் செய்வதால் உப்பிக் காணப்படும் வயிற்றின் உப்புசம் குறையும்.

    * நின்றுக் கொண்டு, இரண்டு கை விரல்களும் கால் விரல்களை தொடும் அளவுக்கு தினமும் பத்து முறை குனியலாம்.

    * காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவது போல் பத்து முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கலாம்.

    * நாற்காலியில் அமர்ந்து கொண்டு சமையல் வேலைகளை செய்யாமல் கீழே உட்கார்ந்து வேலை செய்வது நல்லது.

    * குழந்தை பிறந்த ஐந்து மாதத்திற்குப் பிறகு தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தாலும் வயிற்று உப்புசம் சரியாகும்.

    கர்ப்பிணிகளுக்கு வரும் எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும்.
    கர்ப்பிணிக்கு ஏற்படும் கட்டிகளில் பயப்பட வேண்டிய கட்டிகளும் இருக்கின்றன; பயப்படத் தேவையில்லாத கட்டிகளும் இருக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிக்கு மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1.கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும்  ‘நார்த்திசுக் கட்டி’பெண்களுக்கு ரொம்பவும் சகஜம்.

    நார்த்திசுக் கட்டி என்பது என்ன?

    கருப்பையின் உட்புறத் தசைகளில் உருவாகும் ஒருவகை கட்டி இது. இயற்கையாகவே பல பெண்களிடம் இது காணப்படுவதுண்டு. சாதாரண கட்டிதான் இது; புற்றுநோயைச் சேர்ந்தது இல்லை. எனவே, இதற்குப் பயப்படத் தேவையில்லை.

    இத்தகைய கட்டிகள் இருக்கும்போது ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பது சற்று சவாலுக்குரியதுதான். என்றாலும், இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளால், கருப்பையில் கட்டி உள்ள பெண்களும் கர்ப்பம் தரித்து, கர்ப்பகாலத்தில் எவ்விதத் தொல்லையும் ஏற்படாமல், சுகப்பிரசவம் ஆவது சாத்தியமாகியுள்ளது.

    முன்பெல்லாம் 100 கர்ப்பிணிகளில் ஒருவர் அல்லது இருவருக்கு இந்தக் கட்டி தோன்றியது. இப்போதைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் பேருக்கு இந்தக் கட்டி தோன்றுகிறது எனத் தெரிய வருகிறது.

    அதிலும் ‘அல்ட்ரா சவுண்ட்’ எனும் பரிசோதனைக் கருவியின் கண்டுபிடிப்புக்குப் பின், இந்தக் கட்டி உள்ளதை உடனடியாகப் பார்க்க முடிவதால், இதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெளிவாகக் கவனித்து சிகிச்சை கொடுக்க முடிகிறது.

    மேலும், இந்தப் பிரச்னை கால் நூற்றாண்டுக்கு முன்புவரை 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குத்தான் ஏற்பட்டது. ஆனால் தற்போது இளம் வயதிலேயே இக்கட்டி தோன்றுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக, உடற்பருமன் உள்ள பெண்களுக்கு இது வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.



    பரம்பரையாகவும் இது வரக்கூடும்.பெரும்பாலான சமயங்களில் இந்தக் கட்டி இருப்பது வெளியில் தெரியாது. எந்தவித அறிகுறியும் காண்பிக்காமல் ‘அமைதியாக’ இருக்கும். தற்செயலாக வேறு காரணங்களுக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது பலருக்கும் இது இருப்பது தெரியவரும்.

    இது பெரும்பாலும் ஓர் ஆப்பிள் விதை அளவுக்குத்தான் இருக்கும். சிலருக்கு மட்டும் ஒரு திராட்சைப் பழம் அளவுக்கு இது வளரலாம். ஒருவருக்கு மூன்று கட்டிகள்வரை தோன்றலாம். இவை மெதுவாக வளரும் தன்மையுள்ளவை. மாதவிலக்குக்குப் பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே இவை சுருங்கிவிடும்.

    கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை, கருப்பையை அகற்றும் சிகிச்சை போன்றவற்றை வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

    எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும். சமயத்தில் அது பெரிய கட்டியாகவே இருந்தாலும் கருப்பையின் உள்ளே மேல்புறத்தில் இருந்தால், கருவைப் பாதிக்காது; சுகப்பிரசவம்கூட ஆகலாம்.

    சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் நார்த்திசுக் கட்டி வளர ஆரம்பித்து, கருவை அழுத்த ஆரம்பித்தால், கருச்சிதைவு ஆவது உண்டு. சிலருக்கு கட்டிகள் உடைய ஆரம்பித்து ரத்தக்கசிவும் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். அப்போது கர்ப்பிணி நல்ல ஓய்வில் இருந்துகொண்டு, அந்தப் புண் ஆறுவதற்கு மருந்துகளை சாப்பிட்டாலே போதும்.

    கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றினால் மட்டும் பிரசவத்தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்துவிடலாம். குறைப்பிரசவம் ஆகலாம். கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளரும் கட்டிகள் ஒரு சிலருக்குத் திருகிக் கொள்ளும் (Torsion of fibroid).

    அப்போது அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற வேண்டியது வரும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போது சிசுவின் உடலமைப்பில் சில மாறுதல்கள் உண்டாகலாம். இவை எல்லாம் மிகச் சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியவை.
    கர்ப்ப காலத்தில் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற அறிகுறிகளை சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
    தலை முதல் பாதம் வரை உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையுமே புரட்டிப் போடுகிற பருவம் கர்ப்பம். கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். எல்லாம் எல்லாருக்கும் வர வேண்டும் என்றில்லை. அப்படிப் பிரச்னைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற  உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.



    கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.

    கர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.

    சில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும் இதம் தரும்.
    மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
    பெண்களுக்கு என்று இறைவன் ஸ்பெஷலாக கொடுத்த வரம்தான்… தாய்ப்பால். குழந்தை பிறந்த அக்கணமே ஒரு பெண்ணின் மார்பகத்தில் சுரக்கக்கூடியது இது.

    சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

    இன்னும் சில நேரங்களில், சில தாய்மார்களுக்கு குழந்தை பெற்றெடுத்த சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாக குறைந்து விடும்.

    ஏன் அப்படியெல்லாம் நிகழ்கிறது?

    பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்புக்காக அந்தப் பெண் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

    சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாய் எடுத்து வந்தால்தான், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

    அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும். தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.

    மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.

    மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும்.
    அளவுக்கதிகமான இரத்தப்போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்தில், பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம்.
    ‘பெண்களுக்கு உண்டாகிற ஹார்மோன் கோளாறுகளுக்கும், அவை உண்டாக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சமே இல்லை. அவற்றில் முக்கியமானது ‘டியுபி’ எனப்படுகிற Dysfunctional uterine bleeding. காரணமே இல்லாமல் மாதவிலக்கின் போது ரத்தப் போக்கு அதிகமிருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை பின்னணியாக இருக்கலாம்…

    மாதவிலக்கான முதல் 2 வாரங்களில் பெண்களோட உடம்புல ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். 2 வாரங்கள் கழிச்சுதான் கருமுட்டை வெளியாகும். அதுக்குப் பிறகுதான் பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரக்கும். இதுதான் முறை. சிலருக்கு கரு முட்டை உற்பத்தியே இருக்காது. ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகி, பிராஜெஸ்ட்ரோன் சுரப்பே இல்லாம, மாதவிலக்கு தள்ளிப் போகும். எதிர்பாராத நேரத்துல ரத்தப் போக்கு அதிகமாகும். இவங்களுக்கு பிராஜெஸ்ட்ரோனுக்கான மருந்துகள் கொடுத்துதான் இதை சரியாக்கணும்.

    அடுத்து தைராய்டு பிரச்சனை இருக்கிறவங்களுக்கும், அதிக ரத்தப் போக்கு இருக்கும். அதை சரிபார்க்க வேண்டியது அவசியம். மூளைலேர்ந்து சுரக்கக் கூடிய ‘புரோலேக்டின்’ ஹார்மோன் அதிகமானாலும், ரத்தப் போக்கு அதிகமாகும். சோதனையின் மூலம், காரணத்தைக் கண்டுபிடிச்சு, சிகிச்சை எடுத்துக்கணும். கருத்தடை மாத்திரைகளுக்கு, இந்த ஈஸ்ட்ரோஜென், பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை சமன்படுத்தற குணமுண்டு.

    கல்யாணமாகாத பெண்களுக்குக் கூட இந்த மாத்திரைகளை 3 முதல் 6 வாரங்களுக்குக் கொடுத்தா, ஹார்மோன் பிரச்சனையை சரியாக்கி, ரத்தப் போக்கு கட்டுப்படும். மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத பட்சத்துல மாதம் ஒரு ஊசி மூலமா மருந்து செலுத்த வேண்டியிருக்கும். கல்யாணமாகி, குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்தா, ‘மெரீனா’ என்ற கருவியை கர்ப்பப் பைக்குள்ள செலுத்தலாம்.

    இது காப்பர் டி மாதிரியான சின்ன கருவி. சரியான அளவுல ஹார்மோன் சுரக்க இது உதவி செய்யும். 5 வருஷங்களுக்குப் பிறகு அதை எடுத்துட்டு, தேவைப்பட்டா புதுசா பொருத்திக்கலாம். கல்யாணமாகாத மற்றும் குழந்தை பெறாத பெண்களுக்கு இது ஏற்றதில்லை. இது தவிர ‘பலூன் தெர்மல் அப்லேஷன்’னு ஒரு சிகிச்சையும் இருக்கு.

    கர்ப்பப் பைக்குள்ள பலூன் மாதிரியான ஒன்றை வச்சு, வெந்நீரை செலுத்துவோம். கர்ப்பப் பையின் உள்புறமுள்ள லேயர்களை அது சுருக்கிடும். அதன் விளைவா அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும். அடுத்து ‘ஹிஸ்டெரஸ்கோபிக் என்டோமெட்ரியம்…’ இந்த சிகிச்சையில் கர்ப்பப் பையின் உள்பக்கத்துல உள்ள அழுத்தமான, கெட்டியான ஜவ்வை, பொசுக்கி, அகற்றுவோம். கர்ப்பப் பையை எடுக்காமலே இந்த சிகிச்சை சாத்தியம்.

    மேல சொன்ன அத்தனை சிகிச்சைகளுக்குமே கேட்காதப்ப, கடைசி கட்டமாதான் கர்ப்பப் பையை அகற்றுவதைப் பத்தி யோசிக்கணும். அதனால அளவுக்கதிக ரத்தப் போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்துல, பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம். அதன் பின்னணில உள்ள காரணம் தெரிஞ்சு, சரியான சிகிச்சையை எடுத்துக்கிட்டா, அந்த 3 நாட்கள், அவதியில்லாமக் கழியும்…
    மினரல்களும் வைட்டமின்களும் பெண்களின் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தந்து அனைத்து உறுப்புகளும் தடையின்றி இயங்குவதற்கு உதவுகின்றன.
    மினரல்களும் வைட்டமின்களும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தந்து அனைத்து உறுப்புகளும் தடையின்றி இயங்குவதற்கு உதவுகின்றன. இதில் குறைபாடு ஏற்படும்போது பல நோய்கள் உண்டாகின்றன. சிலருக்கு சிறுவயதிலேயே முதுமையான தோற்றம் ஏற்படவும் இதுதான் காரணம்.

    பொதுவாக, பெண்கள் மினரல், வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். பழங்கள், பருப்பு உணவுகள் அதில் முக்கியனமானவை. அதேபோல் பெரும்பாலான பெண்கள், அலுவலகம் செல்லும் வேகத்தில் காலை உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

    காலை உணவு சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஜூஸ், கிரீன் டீ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்கவேண்டும். சர்க்கரைக்குப் பதில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. அரிசி உணவுகளை குறைத்துக்கொண்டு சிறுதானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.

    உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் காலையில் குறைந்தது அரை மணி நேரமாவது வாக்கிங் செல்வது, ஜிம்மிலோ, வீட்டிலோ உடற்பயிற்சிகள் செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

    கர்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாக பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே 6 மாதத்துக்கு ஒருமுறை முழுமையாக செக் அப் செய்துகொள்வது நல்லது. பலர் சரியாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையே பல நோய்களை உற்பத்தி செய்துவிடும். எனவே நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம்.

    உடலில் ஏதேனும் குறைபாடு இருப்பதாக தானாக நினைத்துக்கொண்டு சிலர், மருத்துவரின் ஆலோசனையில்லாமல், அதிகளவில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். அது மிகவும் தவறானது.
    ×