search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ovarian cancer"

    • 9 குழந்தைகள் அந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவை என பதிவாகியிருந்தது
    • 2018 வருடம் முதல் 2 வருடங்களாக வயிற்று பகுதி வீங்கி கொண்டே வந்தது

    சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    அதில் வழக்கத்திற்கு மாறாக மிக பெரும் வயிற்றுடன் உள்ள ஒரு பெண் காணப்பட்டார். அவர் கர்ப்பிணி என்றும் அவர் 9 குழந்தைகளை சுமக்கிறார் என்றும் அந்த வீடியோவுடன் ஒரு குறுஞ்செய்தி பதிவாகியிருந்தது. அதே வீடியோவில் சிறிது நேரம் கழித்து வரும் காட்சியில் 9 பிறந்த குழந்தைகள் காணப்பட்டனர். அக்குழந்தைகள் அந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவை என கூறி, தாய்மையை போற்றிய ஒரு குறுஞ்செய்தியும் பதிவாகியிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    சீனாவின் அன்ஷுன் (Anshun) பிராந்தியத்தில் உள்ள ஸாங்கி (Songqi) டவுனிற்கு அருகே உள்ளது டாசி (Dazhi) கிராமம். இங்கு வசித்து வந்தவர் ஹுவாங் குவோக்சியன் (Huang Guoxian). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 2018 வருடம் முதல் 2 வருடங்களாக வயிற்று பகுதி வீங்கி கொண்டே வந்தது. தீவிர மருத்துவ பரிசோதனையில் இவருக்கு சினைப்பை புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வயிற்றில் இருந்த நோய் கட்டிகள் அகற்றப்பட்டு, தேங்கிய திரவங்கள் வெளியேற்றப்பட்டன.

    2020ல் இவரது நோய்க்கான சிகிச்சைக்கு மக்களிடம் பண உதவி கேட்டு இவர் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவை பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தைகள் உள்ள வேறு ஒரு வீடியோவுடன் இணைத்து தவறாக பரப்பியுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.
    யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது, இதன் விளைவாகக் கருப்பை புற்றுநோய் உருவாகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.

    இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.

    கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.



    1. அசாதாரண ரத்தப்போக்கு

    கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

    2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்

    சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.

    3. உடலுறவின்போது வலி

    பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
    பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள்.
    பெண்கள் உடல் சார்ந்த சில நோய்களையும், ஆரோக்கியப் பிரச்சனைகளையும் அதனால் அதிகரிக்கும் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அப்படி பெண்கள் சந்திக்கும் சில நோய்களில் சினைப்பை புற்றுநோயும் ஒன்று. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உடலின் எந்த உறுப்பையும் விட்டுவைக்காமல் தாக்கும் குணம் கொண்டது புற்றுநோய்.

    அப்படி பல்வேறு வகைகளும், பெயர்களும் கொண்ட புற்றுநோய்களில் பாலினம் சார்ந்து தாக்கும் புற்றுநோய்களும் சில உண்டு. குறிப்பாக, பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள். இதில் பெண்களின் உயிரையே பறிக்கும் அளவு அச்சுறுத்தும் காரணியாக சினைப்பை புற்றுநோய் உலக அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.

    பெரும்பாலான சினைப்பை புற்றுநோய், சினைப்பையின் புற உறை காரணமாக வருகிறது. சில தீவிர நிகழ்வுகளில் இடுப்பறைக்குள் உள்ள பிற உறுப்புகளான அண்டக்குழாய், கருப்பை, சிறுநீர்பை, பெருங்குடல் போன்ற இடங்களுக்கும் பரவகாரணமாகிறது .

    சினைப்பை புற்றுநோய்க்கான காரணங்கள்?

    சினைப்பை புற்றுநோயை விளைவிக்கக்கூடிய காரணிகளில் குடும்ப வரலாறு(Family history) முக்கிய பங்கு வகிக்கிறது. நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவர் சினைப்பை புற்றுநோய் அல்லது மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில், இவர்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.

    மரபியல் காரணியாக, BRCA1 மற்றும் BRCA2 வகை மரபணு மாற்றம் ஏற்படும் பெண்கள் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு 50 சதவீதம் வரை இருக்கிறது. பொதுவாக, 65 வயதுக்கு அதிகமாக இருக்கும் பெண்கள், குழந்தைப் பேறின்மை அல்லது குழந்தைப்பேறு சம்பந்தமான சிகிச்சைகள் மேற்கொண்ட பெண்கள் மற்றும் மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் சினைப்பை புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படும் ஆபத்து கொஞ்சம் அதிகரிக்கிறது.

    இதுதவிர, பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பதும் சினைப்பை புற்றுநோய்க்கு காரணமாகிறது. சினைப்பை புற்றுநோய்க்கான தோற்றங்களும், அறிகுறிகளும் ஆரம்ப நிலையில் அடிக்கடி மறைந்து விடும் தன்மையுள்ளவை அல்லது மிக நுட்பமாகவும் தோன்றலாம். இதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது, காலம் கடந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது.

    இடுப்பு வளையத்தில் வலி, முதுகு வலி, உடலுறவின்போது வலி, உடலின் கீழ் பகுதியில் வலி ஆரம்ப நிலையில் தோன்றும் அறிகுறிகள்.புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படத் தொடங்கும். எப்பொழுதும் உப்புசமாக இருப்பதாக உணர்தல், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் நலமற்று உணர்தல், வீக்கமான வயிறு, சிறிது உணவு உண்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு அல்லது பசியின்மை, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தேவை அல்லது சிறுநீரை வழக்கத்துக்கு மாறாக கட்டுப்படுத்த முடியாமை, மூச்சுத்திணறல் போன்றவையின் மூலம் கண்டுகொள்ளலாம்.

    சினைப்பை புற்றுநோய் இருப்பதை பரிசோதனையில் எப்படி கண்டுபிடிப்பார்கள்?

    முதலில் CA125 என்ற புரதத்தின் அளவை பரிசோதனை செய்து, பின்னர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்வது. பரிசோதனையின் முடிவுகள் சினைப்பை புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தால் நோயாளி ஒரு மகளிர் நலவியல் புற்றுநோய் நிபுணரை அணுகி, மற்ற பல தேவையான  பரிசோதனைகளையும் கண்டறியும் முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    சினைப்பை புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன?

    சினைப்பை புற்றுநோய் சிகிச்சைக்கான வழிமுறைகள் நோயின் தன்மை மற்றும் பாதிப்பு சார்ந்து இருக்கும். புற்றுநோய் நிபுணர் ஒற்றைமுறை அல்லது பல்வேறு சிகிச்சை முறைகள் இணைந்த ஒரு சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது பொதுவான அணுகுமுறை.

    சில தீவிர நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு கர்ப்பப்பை, அண்டக்குழாய், கருப்பை, கருப்பை. அருகிலுள்ள நிணநீர் முடிச்சுகள் மற்றும் உதரமடிப்பு ஆகியவற்றையும் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியதிருக்கும். இது முழு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்று அறியப்படும். கீமோதெரபி சிகிச்சையில் நோயாளிகளுக்கு குறிப்பாக கார்போப்ளாடின் மற்றும் பாக்லிடாக்செல் ஆகிய மருந்துகளின் கலவை நரம்புகள் ஊடாக செலுத்தப்படும்.

    புற்றுநோய் அணுக்களுக்கு ஈஸ்ட்ரோஜென் கொண்டு செல்லப்படுவதை தடுத்து அவற்றின் வளர்ச்சியை குன்றச்செய்ய ஹார்மோன் சிகிச்சை சேர்த்து செய்யலாம்.இனப்பெருக்க அமைப்பில் புற்றுநோய் இருப்பதற்கான சுவடுகள் தென்பட்டால் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் சில சமயங்களில் கதிர்வீச்சு சிகிச்சையை பயன்படுத்தலாம், அனால் அதை மட்டும் தனியாக பயன்படுத்தக் கூடாது!

    சுமார் 80 பெண்களில் ஒருவருக்கு சினைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், பாதிப்புடைய 110 பெண்களில் ஒருவர் இறக்கும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
    பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 2.5% சினைப்பை புற்று நோய் ஆகும். சுமார் 80 பெண்களில் ஒருவருக்கு சினைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், பாதிப்புடைய 110 பெண்களில் ஒருவர் இறக்கும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

    சினைப்பை புற்றுநோய் அறிகுறிகள்:

    • வயிறு உப்பிசம்
    • சிறிது சாப்பிடுவதற்குள் வயிறு நிறைந்த உணர்வு
    • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
    • சிறுநீர் செல்ல அவசரம்
    • வயிற்றுவலி
    • மார்பக வலி
    • பிறப்புறுப்பில் கசிவு
    • பிறப்புறுப்பில் ரத்தம் வடிதல்
    • மிக சீக்கிரமான பருவமடைதல் ஆகியவை ஆகும்.

    மேலும் சில பொது அறிகுறிகளாக

    முதுகுவலி, மாதவிலக்கு முறையின்றி இருத்தல், அஜீரணம், மலச்சிக்கல் போன்றவையும் இருக்கக்கூடும்.

    சிறு அறிகுறிகள் தெரியும் பொழுதே மருத்துவரை கலந்து ஆலோசிப்பது மிகவும் நல்லது. எளிதில் மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக, பரிசோதனைகள் முலம் பாதிப்பினை கண்டறிய முடியும். அதே போன்று இதற்கான சிகிச்சையினையும் ஆரம்ப காலத்திலேயே எடுத்துக்கொண்டால் சிறந்த முன்னேற்றத்தினை பெற முடியும்.



    ரத்த நாள நெளிவு:

    ரத்த நாள வீக்கம் ரத்த நாள குழாய் பலவீனப்படும் பொழுது ஏற்படுகின்றது. இது உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.

    பொதுவில் இது அதிகம் காணப்படும் இடங்கள்:


    • மூளை
    • அயோட்டா
    • கால்கள்
    • மண்ணீரல்
    ஆகியவை ஆகும்.

    இந்த வீக்கம் திடீரென வெடித்து உள்ளே ரத்தப்போக்கினை உண்டாக்கலாம். ரத்த குழாய் பாதிப்பு, சுருங்குதல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை இந்த ரத்த குழாய் வீக்கத்தினை ஏற்படுத்தலாம்.

    • அதிக கொழுப்பு சத்துள்ள உணவு
    • பரம்பரை
    • புகை பிடித்தல்
    • அதிக எடை

    60 வயதுக்கு மேல் இவையும் ரத்த நாள நெளிவு பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

    • திடீரென தாங்க முடியாத தலைவலி
    • கண் இமை மூடுதல்
    • இரண்டாக பார்வை தெரிதல்
    • ஒரு பக்க பலவீனம் (அ) மரத்து போதல்
    • திடீரென வாந்தி போன்றவை ஏற்பட்டால் தாமதமின்றி மருத்துவரை அணுக வேண்டும்.
    ×