search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water problem"

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பின்னர் குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகிக்கப்படுறது.

    சுமார் 25 வருடங்குளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து பெறப்படும் தண்ணீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லாமல் நேரடியாக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேரிட்டி வாக்கம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின் சப்ளை சரியாக இல்லாதால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி இன்று காலை பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சீரான மின் சப்ளைக்கு நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 150-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கீழ்பென்னாத்தூர் சானிப்பூண்டி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்யாறு அருகே உள்ள தண்டரையில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள தண்டரையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் செய்யாறு ஆரணி செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர். இது குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்.

    அப்போது பெண்கள் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறினர். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உரிதியளித்தார்.

    இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தண்டையார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் நெடுஞ்சாலை 3-வது பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை ராஜிவ்காந்தி நகர், ராஜ சேகரன்நகர், தமிழன் நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு மேலாக சரிவர குழாய்களில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    சிலநேரங்களில் வரும் குடிநீரும் கழிவுநீர் கலந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்தும், குடிநீர் முறையாக சப்ளை செய்ய கோரியும் இன்று காலை அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் நெடுஞ்சாலை 3-வது பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆர்.கே.நகர் போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நிலக்கோட்டை பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம், மேட்டுப்பட்டி, விளாம்பட்டி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெற்பயிர்களை 2-ம் போகமாக சாகுபடி செய்தனர்.

    அப்படி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வைகை அணையிலிருந்து வராத காரணத்தால் தற்போது நெற்பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.

    எனவே தமிழக அரசு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை பேரணை உதவி செயற்பொறியாளர் தளபதி கூறுகையில் அரசு தரப்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஓரிரு நாட்களில் விவசாய பயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

    கோத்தகிரியில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி கடைவீதி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவை ஈளாடா தடுப்பணை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அதாவது தடுப்பணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள நீர்உந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கடைவீதி குடியிருப்புகளுக்கு குடிநீராக வினியோகிக்கப்படுகிறது. வழக்கமாக வாரம் 2 முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களாக கடைவீதி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தை நேற்று திடீரென முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    குடிநீர் வினியோகிக்கப்படாதது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டோம். அப்போது ஈளாடா தடுப்பணையில் உள்ள நீரேற்று நிலையத்தில் மோட்டார் பழுதடைந்து விட்டது, அதனை சரி செய்து தண்ணீரை ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள நீர்உந்து நிலையத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம், ஆனால் அதற்குள் ஈளாடாவில் இருந்து குருக்குத்தி வழியாக ராம்சந்த் சதுக்கத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாயை காட்டெருமை மிதித்து சேதப்படுத்தி விட்டது, அதனை சரி செய்யும் பணி நடந்து வருகிறது, அதன்பின்னர் குடிநீர் வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். கடந்த 2 வாரங்களாக இதையே சொல்லி வருகின்றனர். இதனால் குடிநீர் இன்றி கடும் அவதி அடைந்து வருகிறோம். மாற்று ஏற்பாடு செய்து, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்னும் 2 நாட்களில் குழாய் சீரமைப்பு பணிகள் முடிந்துவிடும், அதன்பிறகு சீராக குடிநீர் வினியோகிக்கப்படும், அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கவோ அல்லது மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கவோ நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    செந்துறை அருகே குடிநீர் மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டியில் மக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டியில் தேக்கி குடிநீர் விநியோகம் செய்தனர்.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மின்மோட்டர் பழுதடைந்தது. இதனால் போர்வெல் குடிநீரை பயன்படுத்த இயலவில்லை.முறையான தகவலை சேத்தூர் ஊராட்சிக்கு தகவல் கொடுத்தும்இதுவரை யாரும் வரவில்லை. இதனால் குடிநீர் தேவைக்காக பல மணி நேரம் நடந்து சென்று கிணறுகளிலும்,விவசாய தோட்டங்களிலும் குடிநீருக்காக அலைய வேண்டிய அவலம் உள்ளது.

    பள்ளி மற்றும் கல்லூரி,வேலைக்கு செல்லும் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக பழுதான மோட்டர்களை பழுதுநீக்கி தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் அறிவித்து உள்ளனர்.

    உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி இருந்தாலும் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி ஊராட்சிக்குட்பட்டது மாருதிநகர், சத்யாநகர். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீருக்காக பெண்கள் நீண்டதூரம் சென்று அலையும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென காலிகுடங்களுடன் உசிலம்பட்டி-மதுரை மெயின் ரோட்டில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் மதுரை-தேனி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் சம்பவ இடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    புயல் தாக்கி 13 நாட்களாகியும் மின்சாரம், குடிநீர் வழங்காததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Gajastorm

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், மருங்குளம் அருகே உள்ள கோபால் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த 16-ந் தேதி கஜா புயல் தாக்கியதில் மருங்குளம் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அனைத்தும் முற்றிலும் சாய்ந்தது.

    இதனால் புயல் தாக்கி 13 நாட்கள் மேல் ஆகியும் இந்த பகுதியில் இன்னும் மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் குடிப்பதற்கு குடிதண்ணீர் இல்லை. நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணிக்கு மருங்குளம் அருகே உள்ள கறம்பக்குடி சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகள் மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்தும் சீர்செய்யபடும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து கோபால் நகரை சேர்ந்த சேகர் என்பவர் கூறியதாவது:-

    கஜா புயல் தாக்கி 13 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரைக்கும் எந்தவொரு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் எங்களை பார்த்தது கிடையாது.

    மேலும் சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றாமல் அப்படியே உள்ளது. மின்சாரம் இன்னும் வழங்கப்பட வில்லை. அன்றாடம் தேவைக்கு தண்ணீர் இல்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிப்பட்டு வருகிறோம்.

    எனவே அரசு உரிய நிவாரண பொருட்கள் மற்றும் குடிதண்ணீர், மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm

    தூசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் சந்தைமேடு, லெட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வந்தவாசி - காந்திபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

    1 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனயாக குடிநீர் கிடைக்க நடவடடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    திண்டுக்கல் நகருக்கு இன்னும் 4 புயல் வந்தால் குடிநீர் பிரச்சனை தீரும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterDindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். திண்டுக்கல்லில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிப்புகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும். பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொடைக்கானல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மின் வினியோகம் தடைப்பட்ட பகுதிகளில் படிப்படியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் மின் வினியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    வத்தலக்குண்டு மற்றும் பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு போக்கு வரத்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். தற்போது ஏற்பட்ட புயல் மழையால் பெரும்பாலான அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    எனவே இது போல் மேலும் 4 புயல் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஏற்பட்டால் திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்சனை தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterDindigulSreenivasan
    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள பாண்டரவேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதட்டூர் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    ×