search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venkat Prabhu"

    • பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    • படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் செல்லும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம், மார்ச்.13-

    நடிகர் விஜய் தி கோட்(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68-வது படம் ஆகும்.

    தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெட்கட்புரபு முதன்முறையாக இணைந் துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் ஷக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    தி கோட் படத்தின் படப் பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுககப்பட உள்ளது.

    கிளைமேக்ஸ் காட்சிகள் முதலில் இலங்கையில் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த காட்சிகள் திருவனந்த புரத்தில் எடுக்கப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் வருகிற 18-ந்தேதி கேரளா வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் காரியவட்டத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதா னம், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அவரது வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

    சினிமா படப்பிடிப் பிற்காக நடிகர் விஜய் முதன் முறையாக திருவனந்த புரத்துக்கு வர உள்ளார். படப்பிடிப்புக்காக திருவ னந்தபுரம் வரும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களை யும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடி இருக்கிறார் எனவும், மே மாதம் அப்பாடல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியது.

    நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சை ஃபை ஃபிக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளது. மீனாக்ஷி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் "கோட்" படத்தை தயாரிக்கிறது.

    விஜய் இப்படத்தில் இருவேடங்களில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். நேற்று இப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடி இருக்கிறார் எனவும், மே மாதம் அப்பாடல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியது.

    இப்போது அப்படத்தின் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் பாடல்களை கங்கை அமரன், மதன் கார்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதப் போவதாகவும், எஞ்சாய் எஞ்சாமி புகழ் அறிவு ஒரு பாடலை எழுதப் போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.
    • இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சை ஃபை ஃபிக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, பார்வதி நாயர் என்று நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

    விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

    விஜய் இப்படத்தின் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் வரும் மே மாதம் வெளியிடுவதாகவும், படத்தில் இன்னொரு பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • பிப்ரவரி மாதம் வைபவ் நடித்து வெளியான படம் ரணம்.
    • வைபவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் வெங்கட் பிரபு.

    பிப்ரவரி மாதம் வைபவ் நடித்து வெளியான படம் ரணம். நடிகர் வைபவிற்கு 25 -வது படமாக இப்படம் அமைந்தது. ரணம் படத்தை ஷெரிஃப் இயக்கினார். வைபவுடன் நந்தித்தா ஸ்வேதா, தான்யா ஹோப் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரணம் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் இப்படத்தை பாராட்டி பதிவை வெளியிட்டார். வைபவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு அவரின் சரோஜா படத்தில் வைபவை அறிமுகம் செய்தார். இந்நிலையில் படத்தின் வெற்றியை அப்படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

     

     

    • இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தனது அடுத்த படைப்பை துவங்கியுள்ளார்.
    • இந்த படத்திற்கு ’ஹாட் ஸ்பாட்’ என பெயர் வைத்துள்ளனர்.

    நடிகர் ஜி.வி பிரகாஷ், கவுரி கிஷன், வெங்கட் பிரபு மற்றும் பலர் நடித்து 2023 ஆண்டில் வெளியான படம் "அடியே". விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கினார். அடியே படம் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம் பெற்ற "வா செந்தாழினி" பாடல் மிகவும் ஹிட்டானது.

    இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தனது அடுத்த படைப்பை துவங்கியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம், ஜனனி ஐயர், சோபியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு 'ஹாட் ஸ்பாட்' என பெயர் வைத்துள்ளனர். இப்படம் ஒரு ஹைப்பர் லின்க் படமாக இருக்கும் எனவும், நான்கு தனிபட்ட கதைகள் இதில் அமைந்துள்ளது எனவும், ஒவ்வொரு கதையும் அதற்கென தனிபட்ட தன்மையை கொண்டு இருக்கும் என இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    கோகுல் பினாய் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சதிஷ் ரகுநாதன் மற்றும் வான் படத்திற்கு இசையமைத்து இருக்கின்றனர். கே.ஜே.பி. மற்றும் 7 வாரியர் ஃபில்ம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். மார்ச் 29 ஆம் தேதி ஹாட் ஸ்பாட் படம் வெளியாக உள்ளது.

    • "நமக்கு டஃப் காம்படிஷன் குடுப்பாங்க போலயே அமுதன் சார்" என்று இயக்குநர் அமுதனை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • காத்து கருப்பு கலை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்

    இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்ற காத்து கருப்பு கலை. அவர் பதிவிடும் ரீல்ஸ்கள் பல லட்சகணக்கான வியூஸ்களை அள்ளும். இவர் சமீபத்தில் வெளியிட்ட சாமியாரை கலாய்க்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பிரபலமானது.

    இந்நிலையில் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவர் நடிக்கும் படத்திற்கு "ரத்த பூமி" என தலைப்பு வைத்து இருக்கின்றனர். இப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா நேற்று நடைப்பெற்றது. படத்தின் இயக்குநர் பேசும் போது, காத்து கருப்பு கலை தான் அடுத்த தளபதி என்றும், ஆக்ஷன் ஹீராவாக வரும் அனைத்து தகுதிகளும் இவருக்கு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து பேசிய காத்து கருப்பு கலை "நான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகிட்டதுக்கு ஒரே ஒரு சீன் தான் காரணம். நான் என் கையால ஓடிகிட்டு இருக்குற ரயில நிறுத்துறன்' என்று மிக சீரியசாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு "நமக்கு டஃப் காம்படிஷன் குடுப்பாங்க போலயே அமுதன் சார்" என்று இயக்குநர் அமுதனை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதற்கு பதிலளித்த இயக்குனர் அமுதன் "நாம் ஒருபோதும் நமது இடத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உழைச்சிகிட்டே இருந்தா தான் இவங்களோட களத்துல இருக்க முடியும்…" என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

    • விஜய் ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். மேலும், தனது 69-வது படத்திற்கு பிறகு தான் நடிக்க போவதில்லை என்றும் முழு நேர அரசியல் ஈடுபடவுள்ளதாகவும் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.

    விஜய் அரசியலுக்கு வந்தது தொண்டர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருப்பக்கம் இருந்தாலும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    இந்நிலையில், விஜய்யின் 69-வது படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் விஜய்யிடம் கதை சொல்லியிருந்த நிலையில் இருவருக்கும் இருந்த அடுத்தடுத்த பட வேலைகளால் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

    • வெங்கட் பிரபு ‘தி கோட்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் புதுவையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி. மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'தி கோட்' திரைப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, பத்திரிகையாளர்களை சந்தித்த இவர் 'தி கோட்' திரைப்படத்தின் அப்டேட் கேட்டதற்கு முதலில் சொல்ல முடியாது என்று சிரித்தபடி சொன்னவர், பிறகு "இந்த முறை தெளிவாக இருக்கேன், இனிமேல் பேச்சு இல்லை வீச்சுதான், நானும் ஆர்வமாகவுள்ளேன், 'தி கோட்' திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று வருகிறது" என்றார்.

    • 'தி கோட்' திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.
    • இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.

    நடிகர் விஜய் நடித்து வெங்கட்பிரபு இயக்கும் 'தி கோட்' திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் புதுவையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி. மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.

    தமிழக வெற்றி கழகம் தொடங்கி தலைவரான பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு வந்துள்ளார் என்ற தகவல் பரவியது. இதனையடுத்து விஜயை காண்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் புதுவை, கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மில் முன்பு குவிந்தனர்.

    தளபதி.. தளபதி... என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பில் இருந்த விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கை கூப்பி கலைந்து செல்லும்படி கேட்டும் ரசிகர்கள் கலையவில்லை.


    மாறாக மில் எதிரில் உள்ள மரத்தின் மீது ஏறியும் மில் சுவற்றின் மீதும் ஏறியும் விஜயை காண ரசிகர்கள் முயன்றனர். மாலை 5.45 மணிக்கு படப்பிடிப்பில் இருந்து வெளியே வேனில் வந்த விஜய் மில் நுழைவு வாயிலில் வேன் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.

    தொடர்ந்து அவரது பாணியில் முத்தத்தை பறக்க விட்டார். ரசிகர்கள் அவர் மீது பூக்களை தூவியும் மாலையை வீசியும் மகிழ்ச்சியை தெரிவித்தனர். ரசிகர்கள் ஒருவர் வீசிய மாலையை விஜய் அணிந்து கொண்டார். பின்னர் விஜய் அந்த மாலைகளை ரசிகர்களிடமே வீசி அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். பின்னர் படப்பிடிப்பு தளத்திற்குள் சென்றார். இதனையடுத்து ரசிகர்கள் கூட்டம் கலைந்து கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது.

    நடிகர் விஜய் ரசிகர்கள் சந்தித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் மீண்டும் ரசிகர்கள் கூட்டம் ஏ.எப்.டி. மில் நோக்கி வந்தனர். அதில் பெண்கள், சிறுவர், சிறுமிகளும் ஆர்வமுடன் திரண்டு நின்றனர். அவர்கள் நடிகர் விஜயை பார்த்து விட்டுதான் செல்வோம் என்று நீண்ட நேரம் நின்றனர்.


    போலீசார் கூட்டத்தை கலைந்து செல்லும்படி வற்புறுத்தியும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. விஜய் படப்பிடிப்பில் இருந்து சென்றுவிட்டார் என்று உறுதியான தகவல் வந்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர். மாலை 3 மணியில் இருந்து இரவு 9மணி வரை சுமார் 6 மணி நேரம் விஜயை காண ரசிகர்கள் கூட்டம் குவிந்திருந்தனர்.

    இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு புதுவையில் நடைபெற உள்ளது. இன்று மதியம் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்பார் என திரைப்பட குழுவினர் தெரிவித்தனர். ஏற்கனவே இதே ஏ.எப்.டி. மில்லில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' சினிமா படிப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat) திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat). லியோ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இந்தபடத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.


    எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


    • பாடகி பவதாரிணி ஜனவரி 25-ஆம் தேதி உயிரிழந்தார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனவரி 25-ஆம் தேதி உயிரிழந்தார். 47 வயதான பவதாரிணி மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


    பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு இவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

    பண்ணையபுரம், லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.


    இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் மறைந்த பாடகி பவதாரிணியுடன் இருக்கும் கடைசி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், 'பவதாவுடன் இருந்த கடைசி புகைப்படம்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பவதாரிணி சிகிச்சை பலனின்றி காலமானார்.
    • பவதாரிணி உடலுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளனர்.

    இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி (வயது 47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் நேற்று காலமானார். கல்லீரல் புற்றுநோய் பாதிப்பினால் இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பவதாரிணி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.


    பவதாரிணி மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சமூக வலைதளத்தில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாடகி பவதாரிணி உடல் இலங்கை, கொழும்புவில் இருந்து சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பவதாரிணி உடலுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளனர். விமான நிலைய விதிமுறைகள் முடிந்தவுடன் அவரது உறவினர்களிடம் பவதாரிணி உடலை ஒப்படைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.


    சென்னை, தியாகராயநகரில் உள்ள இளையராஜா வீட்டில் பவதாரிணி உடல் பொது மக்கள் மற்றும் திரை உலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×