search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Usilampatti"

    உசிலம்பட்டி அருகே மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் 76 வயதான மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்லுபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது76). இவரது மகன் காசி. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்த காசிக்கு, அன்னக்கொடி பல இடங்களில் பெண் தேடினார். ஆனாலும் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது.

    இதனால் விரக்தி அடைந்த அன்னக்கொடி தோட்டத்தில் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அன்னக்கொடியின் மற்றொரு மகன் மனோகரன் உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    கண்மாய் நீரில் மூழ்கடித்து 12 வயது சிறுவனை கொன்ற 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பெருமாள்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் மகன் கவின் குமார் (வயது12).

    இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கவின்குமார் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கண்மாயில் குளிக்க சென்றான். அடுத்த ஒரு மணி நேரத்தில் கவின் குமாரின் உடல் குளத்தில் மிதப்பதாக தகவல் வந்தது.

    இதையடுத்து செல்லப்பாண்டி உத்தப்ப நாயக்கனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    சிறுவன் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் சந்தேகத்தின் பேரில் கவின்குமாருடன் குளிக்க சென்ற 3 மாணவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கவின்குமாரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டு முன்பு இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கருமாத்தூரை அடுத்த பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி மலர் (வயது 27).

    கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன், மகளுடன் மலர் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் முன்பு மர்மமான முறையில் மலர் இறந்து கிடந்தார்.

    அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. உடலில் கத்திக்குத்து காயமும் காணப்பட்டது. எனவே அவரை யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    செக்கானூரணி போலீசார் சம்பவ இடம் சென்று மலர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உசிலம் பட்டி துணை சூப்பிரண்டு கல்யாணகுமார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    உசிலம்பட்டி அருகே கிணற்றில் மிதந்த சிறுவன் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியைச் சேர்ந்த ஒச்சு என்பவரின் தோட்டத்து கிணற்றில் சிறுவன் ஒருவன் பிணமாக கிடந்தான்.

    இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த சிறுவனின் பெயர் சஞ்சய் (வயது 17) என்றும், அழகுமலை என்பவரின் மகன் என்பதும் தெரியவந்தது.

    சஞ்சய்க்கு நீண்ட நாட்களாகவே காக்கா வலிப்பு நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் கிணற்றில் குளித்த போது நோய் பாதிப்பு காரணமாக இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    இருந்த போதிலும் சஞ்சய் மரணத்துக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

    உசிலம்பட்டி:

    தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் முருகபாண்டி. இவருடைய மகன் பால்பாண்டி (வயது 25). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டி-தேனி சாலையில் வந்தார்.

    நக்கலம்பட்டி பகுதியில் வந்த போது எதிரே மதுரையில் இருந்து தேனி நோக்கி தனியார் பஸ் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பால்பாண்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே நேற்று இடி- மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டை அடுத்துள்ள டி.பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 29).

    ராணுவ வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை வீட்டின்மாடியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உசிலம்பட்டி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது அன்னபாரிபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி தனலட்சுமி.

    சம்பவத்தன்று தனலட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவரது வீட்டுக்குள் புகுந்து அவர் அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இது குறித்து சந்திரசேகரன் உசிலம்பட்டி டவுன் போலீ ல் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    ×