search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly woman suicide"

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கந்துவட்டி கொடுமையால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தாய் (வயது 60). இவரது மகன் செல்லப்பாண்டி (40). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி இருந்தார்.

    உரிய காலத்தில் கடன் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் செல்லப்பாண்டிக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும் கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியடைந்த செல்லப்பாண்டி சில நாட்களுக்கு முன்பு தலைமறைவானார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் செல்லப்பாண்டியின் தாயார் சின்னத்தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்துள்ளனர். மேலும் தரக் குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடன்காரர்களின் தொந்தரவால் விரக்தியடைந்த சின்னத்தாய் இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பாண்டி விசாரணை நடத்தி சின்னத்தாயை தற்கொலைக்கு தூண்டிய 10 பேர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இவர்களில் குலசேகரன், பிரபு, ஜெயக்குமார், ஜெகநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 6 பேரை தேடி வருகின்றனர்.
    வில்லியனூர் அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    நெய்வேலி தில்லை நகரை சேர்ந்தவர் ராமையன். ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர். இவரது மனைவி குப்பம்மாள் (வயது 58). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது.

    இதற்காக இவர் வில்லியனூர் அருகே பத்துக்கண்ணுவில் உள்ள தனது அக்காள் மகள் தேன்மொழி வீட்டில் தங்கி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனாலும் நோய் குணமாகவில்லை. அவ்வப் போது வலிப்பு நோயால் குப்பம்மாள் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன முடைந்த குப்பம்மாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று மாலை வீட்டின் குளியல் அறையில் குப்பம்மாள் ‌ஷவரில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    உசிலம்பட்டி அருகே மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் 76 வயதான மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்லுபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது76). இவரது மகன் காசி. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்த காசிக்கு, அன்னக்கொடி பல இடங்களில் பெண் தேடினார். ஆனாலும் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது.

    இதனால் விரக்தி அடைந்த அன்னக்கொடி தோட்டத்தில் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அன்னக்கொடியின் மற்றொரு மகன் மனோகரன் உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    பாபநாசம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 65 வயதான மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே ராஜகிரி அண்ணா தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி மரகதம் (வயது 65). விவசாயக்கூலி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

    இது குறித்து அவரது மகன் மாதவன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×