search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உசிலம்பட்டி"

    • உசிலம்பட்டியில் நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு கூட்டம் நடந்தது.
    • இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாதாந்திர கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் திருலோகநாதன், உசிலம்பட்டி நகர தலைவர் பெரியமாயதேவர், நகர செயலாளர் சுருளி, ஏழுமலை ரத்தினம், சேடப்பட்டி ஒன்றியம் மகளிரணி முத்துலட்சுமி, கல்லுப்பட்டி ஒன்றியம் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் மதிவாணன், மாயன், மலைச்சாமி, அன்பு, ரவி, முத்துமணி, சுருளிவேல், வினோத், பிரதாப், சித்தன், பாலமுருகன், கலைசெல்வன், தங்கபாண்டியன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் செய்திருந்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் பாரம்பரிய உணவு சிறு தானிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் கலந்து கொண்டு பழங்கால சிறுதாணியம் கம்பு கேப்பை, குதிரைவலி, தினை போன்றவற்றை பயன்பாடு பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார். சிறுதானிய பாரம்பரிய உணவு பேரணியை நகர் மன்ற தலைவி சகுந்தலா கட்டபொம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் செய்திருந்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் பரமசிவம் வரவேற்று பேசினார். இதில் வர்த்தகசங்க நிர்வாகிகள் மாரியப்பன், பொன்ஆதிசேடன், கார்த்திகைசாமி, வேலுச்சாமி, சுரேஷ்பாபு மற்றும் பொதுமக்களும் பேரணியில் கலந்துகொண்டனர்.

    • உசிலம்பட்டியில் 16-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையப்பட்டி, மொண்டிக்குண்டு ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, மு.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி.சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி. மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி.

    உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைசாமிபுரம்புதூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • திருமங்கலம், உசிலம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், கமுதியில் குருத்தோலை பவனி நடந்தது.
    • வருகிற 7-ந் தேதி புனித வெள்ளி யாகவும், 9-ந் தேதி ஈஸ்டர் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

    திருமங்கலம்

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்து முக்கிய நிகழ்ச்சியான குருத்தோலை பவனி இன்று நடந்தது. திருமங்கலம் அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்த னையுடன் தொடங்கிய குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கு தந்தை யர்கள், போதகர்கள் மற்றும் சபைகளின் நிர்வாகிகள் முன்னிலையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடியபடி திருமங்கலம் நகரில் பவனியாக சென்ற னர். பின்னர் தங்களது தேவாலயங்களுக்கு சென்று குருத்தோலை ஞாயிறு தொடர்பான சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.


    உசிலம்பட்டியில் நடந்த குருத்தோலை பவனி.

    உசிலம்பட்டியில் இன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம் நடத்தினர். ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.

    ஆர்.சி. தேவாலய பங்கு தந்தை ஜெய் ஜோசப், டி.இ.எல்.சி. சபைகுரு சார்லஸ் ஐசக் ராஜ், சி.எஸ்.ஐ. போதகர் ஜான்சன் கார்டார் மற்றும் சபையினர், கிறிஸ்தவர்கள் குருத் தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.


    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குருத்தோலை பவனி நடந்தது. 

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் தேவா லயத்தில் குருத்தோலை ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கிறிஸ்தவர்கள் தேவால யத்தில் ஒன்றுகூடி குருத்தோ லைகளை கைகளில் ஏந்திய படி ஓசன்னா பாடல்கள் பாடி கிராமத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஊர்வலத்திற்கு சபைகுரு அருள்தன ராஜ் தலைமை தாங்கினார். உதவிக்குரு ஜெபராஜ் எபினேசர் மற்றும் சபை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


    கமுதியில் குருத்தோலை பவனி நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி வந்தனர். சவேரியார் தெரு, அந்தோணியார் தெருவில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், கருவாட்டு பேட்டை பகுதியில் இருந்து குருத் தோலைகளை ஏந்தி பவனி வந்தனர். பின்னர் புனித அந்தோணியார் ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில், அனைவரும் கலந்து கொண்டனர். வருகிற 7-ந் தேதி புனித வெள்ளி யாகவும், 9-ந் தேதி ஈஸ்டர் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

    • தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலியானார்.
    • விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயராம் மகன் தங்கமாயி (26). இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்றிரவு உறவினரை பார்ப்பதற்காக காளப்பன்பட்டிக்கு மானூத்து வழியாக இதே ஊரைச் சேர்ந்த நண்பர் உக்கிரபாண்டி மகன் தினேசுடன்(25) பைக்கில் சென்றார். மானூத்து அருகே சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளின்றி தங்கமாயி பரிதாபமாக இறந்தார். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    • உசிலம்பட்டி: காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைதொடர்ந்து உசிலம்பட்டி-தேனி ரோட்டில் நாடார் உறவின்முறை சார்பாக நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு காமராஜரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் பூமாராஜா, மாநில பேரவை மாநில துணைச்செயலாளர் துரை தனராஜன், வழக்கறிஞர் பிரிவு லட்சுமணன், கோ.ராமநாதன், அடைக்கலம், அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கள்ளர் மாணவ-மாணவிகள் விடுதிகளை மிகவும் சிறுபான்மை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் அரசு ஆணை எண் 40-யை ரத்து செய்யக்கோரி தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில இணைச் செயலாளர் சவுந்தரபாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் அசோக், செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மலைச்சாமி, மாணவரணி தினேஷ், நிர்வாகிகள் ஆண்டித்தேவர், சோலை ராஜ், பழனி, கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    ×