search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TikTok"

    இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் களமிறங்கிய இருக்கும் டிக்டாக் செயலி முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது. #TikTok



    இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டிக்டாக் ஆப் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

    பின் சென்னை உயர்நீதிமன்றம் செயலிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட்டு செயலிக்கு விதித்த தடையை நீக்கியது. இதன் தொடர்ச்சியாக பிளே ஸ்டோர்களில் இடம்பிடித்த டிக்டாக் தற்சயம் முதலிடம் பிடித்திருக்கிறது. தற்சமயம் ஐ.ஓ.எஸ். மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவச செயலிகளுக்கான சோஷியல் பிரிவில் டிக்டாக் செயலி முதலிடத்தில் இருக்கிறது.

    பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் #ReturnOfTikTok என்ற தலைப்பில் புதிய திட்டத்தை துவங்கி அதன் மூலம் செயலியை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. #ReturnOfTikTok திட்டத்திற்கு டிக்டாக் பயனர்கள் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    இதையொட்டி பயனர்கள் சிறு வீடியோக்களை உருவாக்கி #shareandwin ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை டிக்டாக்கின் #ReturnOfTikTok திட்டத்தை சுமார் 504 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தினந்தோரும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மட்டும் பைட் டேன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.3,49,63,000 வரை நட்டத்தை சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தடை காரணமாக சுமார் 250 பேருக்கு வேலை பறிபோகும் நிலை உருவானதாக கூறப்படுகிறது.
    சில நிபந்தனைக்ளுடன் டிக்-டாக் செயலி மீதான தடையை சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை இன்று நீக்கியது.#TikTok #SupremeCourt
    மதுரை:

    சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
     
    இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.



    இதற்கிடையே, அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது, டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல் ஐசக் மோகன்லால், “டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது. கோர்ட்டு உத்தரவுக்கு பின்பு, பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு தடை விதித்து இருப்பதால், தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

    இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், “இந்த வழக்கு குறித்து மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே டிக்-டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் உத்தரவிட்டு, விசாரணையை 24-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ‘சமூக  சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்கள் சிறுவர், சிறுமியர் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது’ என்ற நிபந்தனையுடன் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.

    டிக் டாக் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. #TikTok #SupremeCourt
    இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருப்பது தற்காலிக நடவடிக்கை என நம்புவதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்தார். #TikTok



    இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. டிக்டாக் செயலியில் ஆபாச வீடியோக்கள் அதிகளவு பரவுவதால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

    சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உலகம் முழுக்க சுமார் 150 சந்தைகளில் சுமார் 75 மொழிகளில் டிக்டாக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கான தடை எந்த வகையிலும் பலன் தராது என்ற வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

    டிக்டாக் மீதான தடை இடைக்கால நடவடிக்கை என நினைக்கிறேன். அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம் என டிக்டாக் இந்தியாவின் மூத்த அதிகாரி சுமேதாஸ் ராஜ்கோபால் தெரிவித்தார். இத்துடன் செயலி தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. டிக்டாக் சமூகம் தொடர்ந்து இயங்கி வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.



    சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை டிக்டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது குறி்ப்பிடத்தக்கது.

    செயலியில் பரவும் தரவுகளை ஆய்வு செய்யும் குழுவினரின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ராஜ்கோபால் தெரிவித்தார். தங்களது குழுவினர் தரவுகளை நீ்க்கி வருவதாகவும், கடந்த வாரம் மட்டும் விதிகளை மீறியதாக சுமார் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    டிக்டாக் செயலி குழந்தைகளிடம் ஆபாசத்தை கொண்டு சேர்க்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், செயலியை பல்வேறு கலைஞர்கள் பயன்படுத்த துவங்கியிருப்பதாக ராஜ்கோபால் தெரிவித்தார். 

    பல்வேறு பிரபலங்கள் டிக்டாக் பயன்படுத்துவோரின் திறமையை பார்த்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக அவர் தெரிவித்தார். டிக்டாக் செயலி அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 
    இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையில் பலன் தருமா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். #TikTok



    இந்தியாவில் டிக்டாக் செயலியை ஏற்கனவே பல கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், திடீரென இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.

    எனினும், செயலி நீக்கப்பட்டுவிட்டதால் மட்டும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் பிரபல வீடியோ தளமாக அறியப்படும் டிக்டாக் செயலியில் ஆபாசம் பரவுவதாக பலதரப்பினரும் குற்றஞ்சாட்டினர்.

    இதன் காரணமாகவே அரசு கோரிக்கையை ஏற்று செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. செயலி தடை செய்யப்பட்டு விட்டதால் அது பலனளிக்கும் என கூறிவிட முடியாது. 



    ஏற்கனவே டிக்டாக் செயலியை பயன்படுத்துவோர் அதனை ஷேர் இட் போன்ற செயலியை கொண்டு மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இதனை தரவிறக்கம் செய்து மற்றவரும் புதிய பயனராக பயன்படுத்தலாம்.

    டிஜிட்டல் பிரச்சனையை எதிர்கொள்ள தெளிவான அணுகுமுறை அவசியமாகும், இதனை தொழில்நுட்பத்தாலோ அல்லது மற்ற சட்டங்களை கொண்டு சரி செய்து விட முடியாது என டெக் ஆர்க் எனும் சைபர் நிறுவன நிறுவனர் ஃபைசல் கவூசா தெரிவித்தார். 

    மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடம் டிக்டாக் செயலியை நீக்க உத்தரவிட்டது. டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 3 ஆம் தேதி பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்திருக்கும் நிலையில் இதனை நான்கு மாதங்களில் ஒன்பது கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். #TikTok



    இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கும் நிலையில், இதனை டவுன்லோடு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்திருக்கிறது.

    சீனாவை சேர்ந்த வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 8.86 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 8.2 மடங்கு அதிகம் ஆகும். மொபைல் ஆப் சார்ந்த ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட்-டேன்ஸ் டிக்டாக் செயலியை நிர்வகிக்கிறது. முன்னதாக அமெரிக்காவில் குழந்தைகளின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்ததாக டிக்டாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 



    இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் டிக்டாக் செயலியில் ஆபாச காட்சிகள் ஊக்குவிக்கப்படுவதால், குழந்தைகளை மனதளவில் பாதித்து அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதால் செயலியை தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    டிக்டாக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 188 கோடியாக இருக்கிறது என சென்சார் டவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 70 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    டிக்டாக் செயலியின் மொத்த டவுன்லோடுகளில் சுமார் 99 சதவிகிதம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் செயலிகள் இருக்கின்றன.
    டிக்டாக் செயலியை பயன்படுத்தும் இந்திய பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #TikTok
    டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் மூலம் இந்திய பயனர்களுக்கு தங்களது அக்கவுண்ட்டை முன்பை விட அதிக சிறப்பாக கையாள முடியும். 

    இந்த அம்சம் கமென்ட்க்ளில் அவர்கள் விரும்பும் வார்த்தைகளை ஃபில்ட்டர் செய்யும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது. ஃபில்ட்டர் கமென்ட்ஸ் என அழைக்கப்படும் இந்த அம்சம் பயனர் குறிப்பிட்ட 30 வார்த்தைகளை கமென்ட் பகுதியில் இருந்து நீக்கிவிடும்.

    பயனர்கள் ஒருமுறை வைத்த வார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என டிக்டாக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணைய பாதுகாப்பு தினத்தையொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென டிக்டாக் இந்தியா சைபர் பீஸ் பவுன்டேஷனுடன் இணைந்திருக்கிறது.


    தற்போதைய பாதுகாப்பு அம்சங்களின் படி பயனர்கள் தங்களது வீடியோக்களில் யார் கமென்ட் செய்ய வேண்டும் என்றும் யார் ரியாக்ட் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்க முடியும். இதேபோன்று பயனர்கள் தங்களுக்கு மெசேஞ் மற்றும் வீடியோக்களை யார் டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம்.

    முன்னதாக இந்திய பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த சூழலை செயலியில் உருவாக்க டிக்டாக் குறிக்கோள் கொண்டிருப்பதாக தெரிவித்தது. சீனாவை சேர்ந்த சமூக வலைதளமான டிக்டாக் செயலியை தடை செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் எனும் நிறுவனம் இந்த செயலியை 2016 ஆம் ஆண்டு சீனாவில் டோயுன் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. பின் 2017 ஆம் ஆண்டு இந்த செயலி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    உலகம் முழுக்க இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலியை 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். #TikTok #Apps



    இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சமூக வலைதள செயலியான டிக்டாக் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். பைட்டான்ஸ் எனும் சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக அமைந்துள்ளது.

    வீடியோ சார்ந்த செயலிகளில் இந்த செயலி ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பின்தள்ளியிருக்கிறது. 100 கோடி 
    டவுன்லோட்களில் டிக்டாக் பல்வேறு மொழி வேரியண்ட்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 100 கோடி டவுன்லோட்களில் சீன சந்தையை சேர்ந்த ஆண்ட்ராய்டு சாதனங்களின் எண்ணிக்கை அடங்காது.



    அந்த வகையில் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம். 100 கோடி டவுன்லோடுகளை சென்சார் டவர் ஸ்டோர் இன்டெலிஜன்ஸ் எனும் ஆப் அனாலடிக்ஸ் தளம் முதலில் அறிவித்தது. 

    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டிக்டாக் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் 2018 வரை மொத்தம் 66.3 கோடி பேர் டவுன்லோடு செய்திருந்தனர். இதே ஆண்டில் ஃபேஸ்புக் செயலியை சுமார் 71.1 கோடி பேரும், இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 44.4 கோடி பேர் டவுன்லோடு செய்தனர்.

    2018 ஆம் ஆண்டு டிக்டாக் செயலி அதிகளவு பிரபலமாகி அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகளில் நான்காவது இடம் பிடித்தது. ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் அதிக இன்ஸ்டால்களை பெற்ற செயலிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இத்துடன் அமெரிக்காவில் கேமிங் இல்லாத செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்திருக்கிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய செயலி பயனர்கள் தங்களது லிப் சின்க் செய்யப்பட்ட வீடியோக்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Lasso



    ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லஸ்ஸோ என்ற பெயரில் உருவாகி வரும் புதிய செயலியில் பயனர்கள் பிரபல பாடல் அல்லது வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வீடியோக்களை படமாக்கி, அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஃபேஸ்புக்கின் புதிய லஸ்ஸோ செயலி டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக இருக்கும் படி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. டிக்டொக் செயலி இளைஞர்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முற்றிலும் பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை செய்யும் வகையில் இருக்கிறது.

    அந்த வகையில் ஃபேஸ்புக் சார்பில் உருவாகி வரும் புதிய செயலியை ஃபேஸ்புக்கின் வீடியோ மற்றும் வாட்ச் குழுவினரால் உருவாக்கப்படுவதாகவும், இதற்கு தலைமை மூத்த வடிவமைப்பாளர் பிராடி வொஸ் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வொஸ் முன்னதாக ஃபேஸ்புக்கின் டி.வி. செயலியில் பணியாற்றி வந்தார்.



    ஃபேஸ்புக் நிறுவனம் இளைஞர்களுக்கான புதிய செயலியில் 2016ம் ஆண்டில் இருந்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே வருடத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு இசை நிறுவனங்களிடம் உரிமையை கைப்பற்றும் பணிகளில் ஈடுபடத் துவங்கியது.

    சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூசிக் ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பயனர்கள் இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க முடியும், பின் இந்த அம்சம் ஃபேஸ்புக்கிலும் சேர்க்கப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் லிப் சின்க் அம்சத்தை நேரலை செய்யும் வசதியை சோதனை செய்ய துவங்கியிருக்கிறது. 

    மேலும் ஃபேஸ்புக் பயனர்கள் தங்களுக்கு விரும்பிய பாடல்களை பின் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படும் என்றும் இதனை நண்பர்கள் கேட்க முடியும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் மைஸ்பேஸ் மியூசிக் போன்று இருக்கிறது.
    பிரபல மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் தற்சமயம் டிக்டாக் சேவைக்கு மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #musically #TikTok


    இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்படுகின்றனர். டிக்டாக் செயலியும் மியூசிக்கல்.லி போன்றே சிறிய அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலி தான். 

    சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான பைட் டான்ஸ் மியூசிக்கல்.லி செயலியை கடந்த ஆண்டு நவம்பரில் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று மியூசிக்கல்.லி செயலியின் பயனர்கள், தரரவுகள் மற்றும் பின்தொடர்வோர் புதிய டிக்டாக் செயலிக்கு மாற்றப்படுவர்.

    பைட் டான்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி டிக்டாக் செயலியை உலகம் முழுக்க சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில் மியூசிக்கல்.லி தனது நேரலை செயலியான லைவ்.லி செயலியை மூடுவதாக அறிவித்து பயனர்களை சீட்டா மொபைலின் லைவ்மி செயலிக்கு மாற அறிவுறுத்தியது.



    மியூசிக்கல்.லி செயலியில் பயனர்கள் தங்களது முக பாவனைகளை வீடியோவாக பதிவு செய்து, அவற்றின் பின்னணியில் பாடல்கள் அல்லது ஆடியோ போன்றவற்றை சேர்த்து, அவற்றை பகிர்ந்து கொள்ள வழி செய்தது. அந்த வகையில் புதிய டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. 

    அதன்படி ரியாக்ஷன் எனும் அம்சம் பயனர்கள் தங்களது நண்பர்களின் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை ஜெஸ்ட்யூர் ஃபில்ட்டர் வடிவில் சேர்க்க முடியும். இத்துடன் ஃபன்-ஹவுஸ் மிரர் கேமரா எஃபெக்ட்கள், கிரீன்ஸ்கிரீன் போன்ற எஃபெக்ட்கள் வழங்கப்படுகின்றன. 

    புதிய டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்ய விரும்புவோர் அதன் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம். ஏற்கனவே மியூசிக்கல்.லி செயலியை பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே இந்த செயலி டிக்டாக் என அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். #musically #TikTok
    ×