search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நான்கு மாதங்களில் ஒன்பது கோடி டவுன்லோடுகளை கடந்த டிக்டாக்
    X

    நான்கு மாதங்களில் ஒன்பது கோடி டவுன்லோடுகளை கடந்த டிக்டாக்

    சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்திருக்கும் நிலையில் இதனை நான்கு மாதங்களில் ஒன்பது கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். #TikTok



    இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கும் நிலையில், இதனை டவுன்லோடு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்திருக்கிறது.

    சீனாவை சேர்ந்த வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 8.86 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 8.2 மடங்கு அதிகம் ஆகும். மொபைல் ஆப் சார்ந்த ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட்-டேன்ஸ் டிக்டாக் செயலியை நிர்வகிக்கிறது. முன்னதாக அமெரிக்காவில் குழந்தைகளின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்ததாக டிக்டாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 



    இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் டிக்டாக் செயலியில் ஆபாச காட்சிகள் ஊக்குவிக்கப்படுவதால், குழந்தைகளை மனதளவில் பாதித்து அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதால் செயலியை தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    டிக்டாக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 188 கோடியாக இருக்கிறது என சென்சார் டவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 70 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    டிக்டாக் செயலியின் மொத்த டவுன்லோடுகளில் சுமார் 99 சதவிகிதம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் செயலிகள் இருக்கின்றன.
    Next Story
    ×