search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Google Play Store"

    • கட்டண சேவையாக கூகுள் 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது
    • சுமார் 3 வருடங்களுக்கும் மேல் தவணை வழங்கினோம் என கூகுள் தெரிவித்தது

    இணையதள தேடல் இயந்திரங்களில் (search engines), உலகின் முன்னணியானது அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் கூகுள் (Google) நிறுவனத்தின் "கூகுள் தேடல் இயந்திரம்."

    உலகெங்கும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் பயனர்கள் தங்கள் ஸ்மார்போன்களில் பயன்படுத்தும் வகையில் அவர்கள் நிறுவன மென்பொருள் "ஆப்" (app) எனப்படும் செயலிகளை கூகுள் தேடல் இயந்திரத்தின் பதிவிறக்க தளமான "ப்ளே ஸ்டோர்" எனும் தளத்தில் கட்டமைத்து இருந்தன.

    ப்ளே ஸ்டோர் ஆப்பிலிருந்து பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

    கட்டண சேவையாக கூகுள் 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று, கூகுள் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    கூகுள் நிறுவனம் அறிவித்ததாவது:

    எந்த விசாரணை அமைப்புகளோ அல்லது நீதிமன்றங்களோ, கட்டணம் வசூலிக்க கூகுள் நிறுவனத்திற்கு உள்ள உரிமையை தடை செய்யவோ அல்லது ரத்து செய்யவோ இல்லை. எங்களுக்கு உரிமையள்ள தொகையை கேட்டும் இதுவரை தராத பிரபலமான 10 இந்திய நிறுவனங்களின் செயலிக்கள், ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு சுமார் 3 வருடங்களுக்கும் மேல் தவணை வழங்கினோம்; ஆனால், அவை கட்டணத்தை கட்ட தவறின. எனவே, அவற்றை நீக்கி விட்டோம்.

    இவ்வாறு கூகுள் தெரிவித்துள்ளது.


    ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில், இந்தியாவின் பிரபலமான வேலை தேடுவோருக்கான செயலியான "நவுக்ரி.காம்" (naukri.com), ரியல் எஸ்டேட் சேவைக்கான செயலியான "நைன்டிநைன் ஏக்கர்ஸ்.காம்" (99acres.com), திருமண சேவைக்கான "பாரத்மேட்ரிமோனி.காம்" (bharatmatrimony.com) மற்றும் "ஷாதி.காம்" (shaadi.com) உள்ளிட்டவை அடங்கும்.

    பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் (Murugavel Janakiraman), "இது இந்திய இணைய சேவை காலகட்டத்தில் ஒரு கருப்பு தினம்" என கூறினார்.

    "இந்திய நிறுவனங்களின் செயலிகளுக்கு என பிரத்யேகமான ஒரு "ஆப் ஸ்டோர்" (app store) தேவை" என நவுக்ரி.காம் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பிக்சந்தானி (Sanjeev Bikhchandani) தெரிவித்தார்.

    இந்நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டண பாக்கியை செலுத்தும் வரை, இந்த சேவையை பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது.

    • கூகுள் பிளே ஸ்டோரில் தீங்கு விளைவிக்கும் செயலிகள் பற்றி புது தகவலை சைபர்செக்யுரிட்டி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.
    • இந்த செயலிகளை பெரும்பாலும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர்.

    பல லட்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மால்வேர் வழங்கி வரும் 35 செயலிகளை சைபர்செக்யுரிட்டி ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு கண்டறிந்து இருக்கிறது. ரோமானிய சைபர்செக்யுரிட்டி தொழில்நுட்ப நிறுவனமான பிட்-டிபெண்டர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், கூகுள் பிளே ஸ்டோரில் புதிய மால்வேர் பிரச்சாரம் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி சில செயலிகள் பயனர்களை தவறான தகவல் கொடுத்து ஏமாற்றி அவர்களை இன்ஸ்டால் செய்ய வைக்கின்றன. இன்ஸ்டால் ஆனதும் பெயரை மாற்றிக் கொண்டு மிகத் தீவிரமாக விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. கூகுள் பிளே மூலம் வருவாய் பெறுவதோடு பயனர் அனுபவத்தையும் கெடுக்கின்றன. இந்த விளம்பரங்கள் நேரடியாக மால்வேருடன் தொடர்புடையவை ஆகும்.


    கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் 20 லட்சத்தற்கும் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கும் 35 செயலிகள் இவ்வாறு செயல்பட்டு வருவதாக பிட்-டிபெண்டர் தெரிவித்து இருக்கிறது. இவை முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களை நம்ப வைத்து இன்ஸ்டால் செய்ய கோருகிறது. இன்ஸடால் ஆனதும் பெயர் மற்றும் ஐகானை மாற்றிக் கொண்டு விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இவற்றை கண்டறிவது மற்றும் அன்-இன்ஸ்டால் செய்வது மிகவும் கடினம் ஆகும்.

    "பல்வேறு செயலிகளும் பயனர்களுக்கு விளம்பரங்களை காண்பிக்கின்றன. எனினும், இந்த செயலிகள் தங்களின் சொந்த பிரேம்வொர்க்கில் இருந்து விளம்பரங்களை காண்பிக்கும். இவை பயனர்களுக்கு மால்வேர்களையும் வழங்க வாய்ப்புகள் அதிகம் தான். பிடிக்காத செயலிகளை பயனர்கள் அழித்து விடலாம். ஆனால் இந்த செயலிகளை கண்டறிந்து அவற்றை அழிக்கும் ஆப்ஷனை டெவலப்பர்கள் மிக கடினமாக வைத்திருப்பர்," என பிட்-டிபெண்டர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • டீபாட் எனும் ட்ரோஜான் தான் இதில் 410 செயலிகளை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அடுத்ததாக எக்ஸ்பாட் எனும் ட்ரோஜான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • 1 பில்லியன் முறைக்கு மேல் கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்யப்பட்ட 639 பினான்சியல் செயலிகளை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.

    கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் கேமிங் செயலிகள் சில பயனர்களின் வங்கிச் சான்றுகளைத் திருடுவதற்காக உருவாக்கப்பட்டவை என பிளீப்பிங் கம்ப்யூட்டர் எனும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியில் மறைந்திருக்கும் மொபைல் பேங்கிங் ட்ரோஜான்கள், நீங்கள் முறையான வங்கி அல்லது நிதிப் பயன்பாட்டைத் தொடங்கும்போது செயல்பட தொடங்குமாம்.

    உண்மையான லாகின் பக்கங்களுக்கு பதில் போலியான்வற்றை காண்பித்து பயனர்களின் அக்கவுண்ட் விவரங்களை திருடி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனவாம். இதில் மிகவும் அபாயகரமான டாப் 10 ட்ரோஜான்கள், 1 பில்லியன் முறைக்கு மேல் கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்யப்பட்ட 639 பினான்சியல் செயலிகளை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.


    இதில் அமெரிக்காவை சேர்ந்த பயனர்களுக்கு தான் ஆபத்து அதிகமாம். நான்கில் மூன்று பயனர்கள் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி தினசரி தங்களது பண பரிவர்தனைகளை செய்துவருவதாக கூறப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் அதிகபட்சமாக அமெரிக்கர்கள் பயன்படுத்தும் 121 செயலிகளும், இங்கிலாந்தைச் சேர்ந்த 55 செயலிகளும், இத்தாலியின் 43 செயலிகளும், டர்க்கியின் 34 செயலிகளும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 செயலிகளும், பிரான்ஸை சேர்ந்த 31 செயலிகளும் உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    அதேபோல் இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட போன்பே எனும் பேமண்ட் செயலியும் இத்தகைய ஆபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. டீபாட் எனும் ட்ரோஜான் தான் இதில் 410 செயலிகளை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அடுத்ததாக எக்ஸ்பாட் எனும் ட்ரோஜான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் களமிறங்கிய இருக்கும் டிக்டாக் செயலி முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது. #TikTok



    இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டிக்டாக் ஆப் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

    பின் சென்னை உயர்நீதிமன்றம் செயலிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட்டு செயலிக்கு விதித்த தடையை நீக்கியது. இதன் தொடர்ச்சியாக பிளே ஸ்டோர்களில் இடம்பிடித்த டிக்டாக் தற்சயம் முதலிடம் பிடித்திருக்கிறது. தற்சமயம் ஐ.ஓ.எஸ். மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவச செயலிகளுக்கான சோஷியல் பிரிவில் டிக்டாக் செயலி முதலிடத்தில் இருக்கிறது.

    பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் #ReturnOfTikTok என்ற தலைப்பில் புதிய திட்டத்தை துவங்கி அதன் மூலம் செயலியை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. #ReturnOfTikTok திட்டத்திற்கு டிக்டாக் பயனர்கள் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    இதையொட்டி பயனர்கள் சிறு வீடியோக்களை உருவாக்கி #shareandwin ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை டிக்டாக்கின் #ReturnOfTikTok திட்டத்தை சுமார் 504 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தினந்தோரும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மட்டும் பைட் டேன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.3,49,63,000 வரை நட்டத்தை சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தடை காரணமாக சுமார் 250 பேருக்கு வேலை பறிபோகும் நிலை உருவானதாக கூறப்படுகிறது.
    கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் நிறைந்து இருந்ததாக சுமார் 13 செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகளை சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருந்தனர். #Google #PlayStore #Apps



    கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மொத்தம் 13 செயலிகள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் மால்வேர்களை இன்ஸ்டால் செய்வது கண்டறியப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்து இருக்கிறது.

    பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியிருக்கும் செயலிகள் சராசரியாக சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்று இருந்தன. இவற்றில் பிரபல கேம்களாக அறியப்படும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி கார் டிரைவிங் சிமுலேட்டர் மற்றும் இதர செயலிகள் இடம்பெற்று இருந்தன.

    இசெட் (ESET)  பிரபல ஆன்லைன் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமாத்தின் பாதுகாப்பு ஆய்வாளரான லுகாஸ் ஸ்டிஃபான்கோவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் மால்வேர் பரப்பிய 13 செயலிகள் குறித்த விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த செயலிகள் பிளே ஸ்டோரின் டிரென்டிங் பகுதியில் இடம்பெற்று இருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.



    எனினும், மால்வேர் நிறைந்த செயலிகள் தற்சமயம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. கூகுள் இவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த செயலிகள் அனைத்தும் லூயிஸ் ஓ பின்டோ என்ற ஒற்றை டெவலப்பர் உருவாக்கியதாகும். கேமினை திறந்து விளையாட முற்படும் போது செயலி கிராஷ் ஆனது.

    மேலும் இந்த செயலிகள் பயனர்களை கேம் சென்டர் எனும் கூடுதல் ஏ.பி.கே. ஒன்றை இன்ஸ்டால் செய்யக் கோரியிருக்கிறது. இதே போன்ற கோளாறு கூகுள் பிளே ஸ்டோரில் பலமுறை அரங்கேறி இருக்கிறது. 

    கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3.6 கோடி மொபைல் சாதனங்களை ஆட்வேர் மூலம் பாதிப்பில் ஆழ்த்த கூகுள் காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
    கூகுள் பிளே ஸ்டோரில் டெவலப்பர் விதிமுறைகளை கூகுள் சமீபத்தில் மாற்றியிருக்கிறது. புதிய மாற்றங்கள் சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GooglePlay


    கூகுள் பிளே ஸ்டோர் டெவலப்பர் விதிமுறைகளை கூகுள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன் படி குழந்தைகள் சார்ந்த செயலியில் வன்முறை மற்றும் ஆபாசம் சார்ந்த தீம்கள் அனுமதிக்கப்படாது. இதேபோன்று செயலிகளில் உள்ள ஆபாசம் மற்றும் வன்முறை விவரங்களை உடனடியாக நீக்கபக்படும்.

    இத்துடன் வன்முறையை தூண்டுவது, மற்றவர்களின் நிறம், தோற்றம் அல்லது இதர அம்சங்களை வைத்து தீங்கு விளைவிக்கும் வகையிலான தரவுகளை கொண்ட செயலிகளை அனுமதிக்க முடியாது என கூகுள் தெரிவித்துள்ளது. க்ரிப்டோகரென்சி மைனர்களுக்கு இனி கூகுள் பிளே ஸ்டோரில் இடம் கிடையாது என்பது புதிய விதிமுறைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    மைனர்கேட், க்ரிப்டோ மைனர் மற்றும் நியோமைனர் என போன்று பல்வேறு மைனிங் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. முன்னதாக இதே ஆண்டில் க்ரோம் வெப் ஸ்டோரில் இருந்து க்ரிப்டோ மைனிங் எக்ஸ்டென்ஷன்களை கூகுள் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில் தற்சமயம் வெடிபொருள் விற்பனை, ஆயுதங்கள் மற்றும் இதர உபகரணங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் செயலிகளை கூகுள் தடை செய்திருக்கிறது. இதேபோன்று ஒரு மாதிரியான பயனர் அனுபவம் மற்றும் ஒரே அம்சங்களை வழங்கும் செயலிகள் மற்றும் ஆட்டோமேட்டெட் டூல் மூலம் உருவாக்கப்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்யப்படுகிறது.

    மேலும் அதிகளவு விளம்பரங்களை வழங்குவது மற்றும் பயனர்களை அடிக்கடி திசைதிருப்பும் வகையிலான செயலிகளையும் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் முடக்கவிருக்கிறது. #GooglePlay #Apps
    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்-க்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம் இன்று அறிமுகப்படுத்திய கிம்போ என்ற பெயரிலான ஆப் சிலமணி நேரத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. #KimbhoApp
    புதுடெல்லி:

    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக கிம்போ என்ற பெயரில் இன்று ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

    ஸ்வதேசி (உள்நாட்டு தயாரிப்பு) ஆப் என்ற பில்டப் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியான சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் பேர் வரை பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால், போலோ என்ற பெயரில் ஏற்கனவே இருந்த ஒரு செயலியின் கோடிங்கை நகலடித்து கிம்போ உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

    குறிப்பாக கிம்போ ஆப் இன்ஸ்டால் செய்ததும் ஒன் டைம் பாஸ்வேர்ட் மெசேஜ் உங்களது மொபைலுக்கு வரும். ஆனால், அந்த மெசேஜ்-ல் கூட போலோ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி பலர் கிம்போ செயலியை கலாய்த்து வருகின்றனர்.

    போலோ செயலியானது பாதுகாப்பு இல்லாதது என பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதனால் போலோவின் அம்சங்களை காபி அடித்து உருவாக்கப்பட்டுள்ள கிம்போ-வும் பாதுகாப்பு இல்லாதது, உங்களது தகவல்கள் பொதுவெளியில் விடப்படலாம் என சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே, கிம்போ ஆப் சிலமணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து மாயமானது. ஆனால், அதே பெயரில் பல போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன. 
    ×