search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "App Store"

    • கடன் செயலிகள் அனுப்பும் குறுந்தகவல்களில் தனிப்பட்ட படங்கள் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்தனர்.
    • இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

    ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தைக்கான ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கு விளைவிக்கும் கடன் செயலிகளை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.

    இந்த முறை பாக்கெட் கேஷ், வைட் கேஷ், கோல்டன் கேஷ் மற்றும் ஒகே ருபீ உள்ளிட்ட செயலிகள் அடங்கும். இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து தேவையற்ற கட்டணங்களை வசூலித்து வந்ததாக, ஏராளமான பயனர்கள் ரிவ்யூ அளித்துள்ளனர். மேலும் கொடுத்த கடனை திரும்பி வசூலிக்க சட்ட விரோதமாக செயல்பட்டு வந்துள்ளது.

     

    கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பயனர்களுக்கு அதிவேகமாக கடன் கொடுக்கும் செயலிகள் கணிசமான அளவில் அதிகரித்து பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் கரணமாக நிதி சார்ந்த முன்னணி செயலிகள் பட்டியலில் டாப் 20 இடத்தை அடைந்தது. பல்வேறு பயனர்கள், கடன் செயலிகள் அனுப்பும் குறுந்தகவல்களில் தனிப்பட்ட படங்கள் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    மேலும் கடன் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் பெற்ற கடன் விவரங்களை, அவர்களது காண்டாக்ட்களுக்கு அனுப்பி விடுவதாக கடன் செயலிகள் மிரட்டியதாகவும், குற்றம்சாட்டியுள்ளனர். இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து, ஆப்பிள் டெவலப்பர் திட்ட ஒப்பந்தத்தை இந்த கடன் செயலிகள் மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த வகையில், போலி விளம்பரங்கள் மூலம் கடன் கொடுத்து, பிறகு வாடிக்கையாளர்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வந்த கடன் செயலிகள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து முடக்கப்பட்டன.

    ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகள் பட்டியலில் டிக்டாக் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.



    வீடியோ பகிர்ந்து கொள்ளும் டிக்டாக் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் முதலிடம் பிடித்து இருக்கிறது. 2019 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஆப் ஸ்டோரில் உலகம் முழுக்க அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் முதலிடத்தில் இருக்கிறது.

    சென்சார்டவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி 2019 முதல் காலாண்டில் மட்டும் ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 3.3 கோடி பேர் டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். இதுதவிர ஆப் ஸ்டோரில் தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்துள்ளது.



    இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ட்விட்டர் 16 ஆவது இடத்தில் இருக்கிறது. டிக்டாக் செயலியை இன்ஸ்டால் செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

    கடந்த ஒரு காலாண்டில் மட்டும் டிக்டாக் செயலியை சுமார் 88.6 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 8.2 மடங்கு அதிகம் ஆகும். இவற்றில் 99 சதவிகித டவுன்லோடுகள் ஆண்ட்ராய்டு தளத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் களமிறங்கிய இருக்கும் டிக்டாக் செயலி முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது. #TikTok



    இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டிக்டாக் ஆப் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

    பின் சென்னை உயர்நீதிமன்றம் செயலிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட்டு செயலிக்கு விதித்த தடையை நீக்கியது. இதன் தொடர்ச்சியாக பிளே ஸ்டோர்களில் இடம்பிடித்த டிக்டாக் தற்சயம் முதலிடம் பிடித்திருக்கிறது. தற்சமயம் ஐ.ஓ.எஸ். மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவச செயலிகளுக்கான சோஷியல் பிரிவில் டிக்டாக் செயலி முதலிடத்தில் இருக்கிறது.

    பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் #ReturnOfTikTok என்ற தலைப்பில் புதிய திட்டத்தை துவங்கி அதன் மூலம் செயலியை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. #ReturnOfTikTok திட்டத்திற்கு டிக்டாக் பயனர்கள் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    இதையொட்டி பயனர்கள் சிறு வீடியோக்களை உருவாக்கி #shareandwin ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை டிக்டாக்கின் #ReturnOfTikTok திட்டத்தை சுமார் 504 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தினந்தோரும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மட்டும் பைட் டேன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.3,49,63,000 வரை நட்டத்தை சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தடை காரணமாக சுமார் 250 பேருக்கு வேலை பறிபோகும் நிலை உருவானதாக கூறப்படுகிறது.
    உலகம் முழுக்க பண்டிகை காலத்தில் மட்டும் ஆப் ஸ்டோர் மூலம் ஆப்பிள் நிறுவனம் சுமார் 122 கோடி டாலர்கள் வருவாய் ஈட்டியிருக்கிறது. #Apple #AppStore



    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோர் வியாபாரத்தில் பண்டிகை காலத்தில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. 2018 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் உலகம் முழுக்க ஆப் ஸ்டோர் வாடிக்கையாளர்கள் 122 கோடி டாலர்களுக்கு பொருட்களை வாங்கியிருக்கின்றனர்.

    2019 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் மட்டும் வாடிக்கையாளர்கள் சுமார் 32.2 கோடி டாலர்கள் மதிப்பிலான பொருட்களை வாங்கியிருக்கின்றனர். அந்த வகையில் ஆப்பிள் வரலாற்றில் ஒரே நாளில் அதிகளவு விற்பனையை அந்நிறுவனம் பதிவு செய்திருக்கிறது.

    ஆப்பிள் சேவைகளுக்கான வருவாயில் ஆப் ஸ்டோர் இதுவரை இல்லாத சாதனையை பதிவு செய்திருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஆப் ஸ்டோர், ஆப்பிள் மியூசிக், கிளவுட் சேவைகள், ஆப்பிள் பே மற்றும் ஆப் ஸ்டோர் சர்ச் என பல்வேறு பிரிவுகளில் ஆப்பிள் சேவைகள் புதிய சாதனையை படைத்திருக்கின்றன.



    ஆப் டவுன்லோடு மற்றும் சந்தா செலுத்தி பயன்படுத்தக்கூடிய செயலிகளில் கேமிங் மற்றும் சுய பாதுகாப்பு சார்ந்த செயலிகள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. சர்வதேச அளவில் பப்ஜி, ஃபோர்ட்னைட் போன்ற கேம்கள் அதிக பிரபலமாக இருந்துள்ளன. 

    இதுதவிர பண்டிகை காலக்கட்டத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் பிரால் ஸ்டார்ஸ், ஆஸ்ஃபால்ட் 9, மான்ஸ்டர் ஸ்டிரைக் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன. உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த செயலிகள் புத்தாண்டு துவக்க நாட்களில் அதிக டவுன்லோடுகளை பெற்று இருக்கின்றன.
    ×