search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tai Amavasi"

    • கயா சென்று பிண்டம் போட்டு வந்தால்தான் ஆத்மா சொர்க்கம் செல்லும்.
    • அவர்களுக்கு சொர்க்கத்தில் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

    சாதாரணமாக காசிக்குச் சென்று முன்னோர் களுக்கு சிரார்தம் செய்துவிட்டு வந்தாலும் பித்ருக்களுக்கு கயாவில் சென்று பிண்டம் போட்டுவிட்டு வந்தால்தான் அவர்கள் ஆத்மா சொர்க்கம் செல்லும். அங்கு அவர்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் அங்குதான் பிரம்மாவும் விஷ்ணுவும், பிற தேவர்களும் வந்து அசுரனின் உடல் மீது அமர்ந்து கொண்டு பித்ரு யாகம் ஒன்றை செய்ததாக ஒரு கதை கூறப்படுகின்றது .

    அந்தக் கதை என்ன?

    முன்னொரு காலத்தில் கயாவில் கயாசுரன் என்ற பெரிய அசுரன் இருந்தான். அவன் ஒருமுறை தனக்கு மேலும் அதிக சக்தி வேண்டும் என வேண்டிக்கொண்டு தவத்தில் அமர்ந்தான். அவன் செய்த கடுமையான தவத்தின் வலிமையினால் அவனுடைய சக்தியும் பெருகிக்கொண்டே போயிற்று. அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அவனுடைய தொல்லையும் தாங்க முடியாமல் போயிற்று.

    அவன் தேவர்களைவிட அதிக சக்தி வாய்ந்தவனாக ஆகிக்கொண்டே இருந்ததினால் தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் விஷ்ணுவிடம் சென்று தமது அச்சத்தை தெரிவிக்க அவர் பிரம்மாவை அழைத்து அவரை கயாசுரனிடம் சென்று தேவலோகத்தின் கீழுள்ள பித்ருக்கள் மோட்ஷம் அடைய ஒரு யாகம் செய்ய உள்ளதாகவும் அதை ஆகாயத்தில் செய்யக்கூடாது, பூமியில்தான் செய்ய வேண்டும் என்பதினால் பூமியில் உள்ள கயாசுரன் உடல் மீது தம்மை யாகம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுமாறும் அதன் பின் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.

    அதன்படி பிரம்மாவும் கயாசுரனிடம் சென்று அப்படியே வேண்டிக்கொள்ள அவன் கயாவில் சென்று பூமியில் படுத்துக் கொண்டான். அவன் தலை மீது பிரம்மா பித்ரு யாகத்தை துவங்கினார். ஆனாலும் அவன் அடிக்கடி அசைந்து கொண்டே இருந்ததினால் மிரிச்சி என்ற முனிவரை அழைத்து அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து அந்த கயாசுரன் உடல் மீது ஒரு கல்லை வைத்துவிட்டு அமருமாறு விஷ்ணு கூறினார். அவர்களும் பித்ரு யாகத்தில் கலந்து கொள்வது போல வந்து அவன் மீது அமர்ந்தனர்.

    பித்ரு யாகம் நடக்க நடக்க அவனுடைய சக்தி அதில் கரைந்து கொண்டே போயிற்று. முடிவில் விஷ்ணு அந்த கல்லின் மீது ஏறி அமர அனைவரது சக்திகளும் ஒன்று சேர்ந்தது. யாக சக்தியும் அவர்களது சக்தியுடன் ஒன்று சேர அந்த கயாசுரன் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே மடிந்தான்.

    ஆனாலும் அவன் மீதே பித்ருக்களின் யாகம் நடந்ததினாலும், திருப்தியடைந்த ஆத்மாக்கள் அவனை ஆசிர்வதித்ததினாலும் அவனுக்கு நல்ல பலன் கிடைத்து பித்ருக்கள் வசிக்கும் மோட்ஷம் சென்றான். ஆகவே காயா பித்ரு லோகம் எனப் பெயர் பெற்றது. ஆகவேதான் விஷ்ணுவே மோட்ஷம் தந்த அந்த இடத்தில் சென்று பித்ருக்களுக்கு சிரார்தம் செய்தால் அவர்களுடைய ஆத்மாவுக்கு வைகுண்டம் செல்லும் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    இதற்கு ஒரு முன் உதாரணமாக ஒரு கதை உண்டு. கர்ணன் மடிந்து மேலுலகம் சென்றதும் அவன் செய்து இருந்த தர்மத்தின் பலனாக அவனுக்கு தங்கத்தையே உணவாகக் கொடுத்தனராம். அவன் எப்படி தங்கத்தை சாப்பிடுவது? என்று இந்திரனிடம் கேட்டபோது அவன் அதுவரை தங்கத்தையே தானம் தந்துள்ளதாகவும். உணவை அவன் எவருக்குமே தானம் செய்யவில்லை.

    அவனுடைய பித்ருக்களுக்குக்கூட கர்மா செய்து பிண்டமாக அவர்களுக்கும் உணவு தராததினால் தான் அந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவும் ஆகவே அவனுக்கு பதினாறு நாள் பூமிக்குச் சென்று பித்ரு சிரார்தம் செய்து பிண்டம் போட்டு விட்டு வர அவகாசம் தருவதாகக் கூறி கர்ணனை பூமிக்கு அனுப்ப கர்ணனும் கயாவுக்குச் சென்று தம் பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டுத் திரும்பினாராம். அதன் பின்னரே அவனுடைய ஆத்மாவுக்கு உணவு கிடைத்ததாம்.

    • உடல் நிலை பாதிப்புகளில் இருந்து விரைவில் நலம் பெரும் அமைப்பு
    • புதிய சொத்து, வண்டி வாகனம் வாங்கும் யோகம்

    இந்த ஆடி, புரட்டாசி, தை அமாவாசை திருநாளில் , தமது இரண்டாவது தாயான குல தெய்வத்தை ஒருவர் முறையாக அன்ன தானம் செய்து வழிபடும் பொழுது ஜாதகருக்கு, அறிவில் தெளிவு, நல்லவர் சேர்க்கை, செய்யும் தொழில் முன்னேற்றம், வருவாய் உயர்வு, பதவி உயர்வு, மக்கள் செல்வாக்கு , பூர்விகத்தில் ஜீவிக்கும் தன்மை அதனால் ஜாதகர் அடையும் நன்மை, தமது குளம் விளங்க நல்ல வாரிசு, பெரிய மனிதர்களின் நட்பு, ஜாதக ரீதியான பாதிப்புகளில் இருந்து நன்மை பெறும் யோகம், வண்டி வாகனங்களில் இருந்து எவ்வித பாதிப்பும் விபத்தும் ஏற்படாத அமைப்பு , தனது சொந்த பந்தங்களுடன் நல்ல முறையில் உறவை வளர்த்துகொண்டு நன்மை பெரும் தன்மை .

    கணவன் -மனைவி அன்பு ஒற்றுமை , பிரிந்த கணவன் -மனைவி சேர்ந்து தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் பெரும் யோகம், உடல் நிலை பாதிப்புகளில் இருந்து விரைவில் நலம் பெரும் அமைப்பு, செய்யும் தொழில் அபரிவிதமான முன்னேற்றம், புதிய சொத்து, வண்டி வாகனம் வாங்கும் யோகம், வருடம் முழுவதும் எவ்வித சிக்கல்களும் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் யோக அமைப்பு, மன கவலைகளில் இருந்து ஜாதகரை மீட்டு எடுத்து நலம் பெற செய்யும் யோகம் , மண் மனை வண்டி வாகன யோகம், புதிதாக தொழில் துவங்கும் யோகம், புதிய வீடு கட்டும் யோகம் என அனைத்து நன்மைகளையும் ஒருவருக்கு இந்த ஆடி, புரட்டாசி, தை அமாவாசை குலதெய்வ வழிபாடு செய்வதால் கிடைக்க பெறுவார் .

    இதற்கு ஜாதகர் தனது குல தெய்வம் எதுவோ அங்கு சென்று , அவர்களது முறைப்படி வழிபாடு செய்து, அங்கு உள்ள முன் பின் அறியாத நபர்களுக்கு ஒரு 20 பேருக்காவது அன்னதானம் செய்து வழிபடுவது மிக பெரிய நன்மைகளை நிச்சயம் தரும் . குலதெய்வத்தை அறியாதவர்கள் தனது இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்து நலம் பெறலாம் .

    பித்ரு தர்ப்பணம்

    ஒருவருடைய ஜாதக அமைப்பில் பித்ரு தோஷங்களால் , வறுமை , நோய் , கடன் , விபத்து , ஏமாற்றம் , திருமண தாமதம், கணவன் மனைவி பிரிவு , விவாகரத்து ,குழந்தை இன்மை , விஷ ஜந்துக்களால் பாதிப்பு , மன நிம்மதி இழப்பு , விரக்தி, வேலை இன்மை , தொழில் முன்னேற்றம் இன்மை , மற்றவர்களால் ஏமாற்ற படுதல் , திடீர் இழப்பு ,எதிரிகள் தொந்தரவு , யோகம் அற்ற நிலை , யோக பங்கம் ஏற்படுதல் , அவ பெயர் , தீய பெண்களின் சகவாசம் இதனால் பொருள் இழப்பு , கெட்ட நண்பர்களால் துன்பம் , மற்றவருக்காக தான் பாதிக்க படுதல் என ஜாதகரை படுத்தி எடுத்து விடும் இந்த பித்ரு தோஷம்.

    இதுமாதிரியான பாதிப்புகளால் அதிகம் துன்புறுவோர் அனைவரும், முறை படி நதிக்கரை , மீன் உள்ள நீர் நிலைகளுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசை திருநாளில் சென்று தமது சக்திக்கு ஏற்றார் போல் தாமாகவோ , அல்லது வேதம் அறிந்த பிராமணர் வழிகாட்டுதலின் பேரிலோ சுவேதா தேவியின் மூலம் தர்ப்பணம் செய்வோருக்கு மேற்கண்ட பாதிப்புகளில் இருந்து 100 சதவிகிதம் நன்மை நடைபெற ஆரம்பிக்கும் சில நாட்களிலேயே இது கண்கூடாக கண்ட உண்மை .

    மேலும் இந்த ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வோருக்கு கடந்த 54 வருடமாக பித்ரு கடமையை செய்யாதவருக்கு பித்ருக்கள் ஏற்றுக்கொண்டு நன்மைகளையும் , யோகங்களையும் வழங்குவார்கள்.

    • தை அமாவாசையை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றின் கரையில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
    • வாழை இலையில் தீபம் ஏற்றி புரோகிதர்கள் வழிபாடு நடத்தினர்.



    மதுரை வைகை ஆறு அருகில் இன்று திரளானோர் தர்ப்பணம் செய்தனர்.

     மதுரை

    தமிழகத்தில் இந்துக்கள் முன்னோர்களை நினைத்து மாதம் தோறும் அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து காகத்திற்கு படைத்து சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் முன்னோர்கள், மகாளய அமாவாசை அன்று வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, படையல் உணவுகள், தர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டு தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே தை அமாவாசை அன்று நீர்நிலைகளில், முன்னோருக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, ஆசிகளை வழங்குவர் என்பது ஐதீகமாகும். மறைந்த முன்னோருக்கு சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி கோவில்களுக்கு சென்று வழிபட்டால் இறந்தவரின் ஆத்மா சாந்தி அடையும், குடும்பத்துக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. யானைக்கல் தரைப்பாலம், திருமலைராயர் படித்துறை, பேச்சியம்மன் படித்துறை, திருப்பரங்குன்றம் சரவண பொய்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி அதிகாலை முதல் தொடங்கியது.

    இதற்காக அந்தந்த பகுதிகளில் புரோகிதர்கள் தயாராக இருந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர். மதுரை வைகை ஆற்றின் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பட்டது. அதன்பிறகு வாழை இலையில் தீபம் ஏற்றி புரோகிதர்கள் வழிபாடு நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்தனர்.

    மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×