search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pitru dosha"

    • ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் தோஷங்கள் விலகி விடும்.
    • பாவ, புண்ணியங்கள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகள்.

    நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன.

    ஒரு வேளை நம் முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக நம்மை வெகுவாகத் தாக்க கூடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.

    ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-

    திருதராஷ்டிரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார்.

    பாண்டவர்களின் வெற்றியை அசுவத்தாமனால் பொறுக்க இயலவில்லை. அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான். அதனால் இரு குலத்தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டார்.

    அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான். முனிவர் அவனுக்கு மரண சாபமிட்டார்.

    இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம்பாக மாறி பரீஷத் மகாராஜாவை கொன்றது. இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமோஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான்.

    ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. `என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசுபாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்பயாகமும் பாதியில் நின்று விட்டது. என் தந்தையோ மோட்சத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மா வை எப்படிக் கரையேற்றுவது? என்று தவித்தான்.

    அப்போது ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவிபாகவத கதையை சிரவணம் செய்தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது. சிரவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித்தாள்.

    உடனே 'ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன' என்று அசரீரி குரல் எழும்பியது. எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்திருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    • தர்ப்பணம் என்பது முன்னோர்களை திருப்தி செய்யும் ஒரு நிகழ்ச்சி.
    • முன்னோர்களை நினைத்து கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    பித்ருக்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள். தர்ப்பணம் என்பது அவர்களை திருப்தி செய்வதற்காக செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும். பித்ருக்கள் என்பவர்கள் இறந்துபோன நமது அப்பா மற்றும் அம்மாவைச் சேர்ந்தவர்களையும் குறிக்கும். நம் குலம் நன்றாக விளங்கவும் வம்ச விருத்திக்காகவும், தோஷங்கள் இல்லாமல் இருக்கவும் நம் முன்னோர்களை நினைத்து இந்த கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம், பித்ருக்களுக்கான தர்ப்பணம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் (எஜமானர்கள்) ஆவார்கள். பித்ருக்கள் தர்ப்பணம், தகப்பனார் வழியில் ஆறு பேர், தாய் வழி பாட்டனார் (மாதா மகர்) வழியில் ஆறு பேர் ஆக 12 பேருக்கு செய்ய வேண்டும். மாதா மகர் (தாய் வழி பாட்டனார்) உயிருடன் இருந்தால், அந்த வர்க்கத்திற்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. அவருக்கு பதிலாக முன்னோர் ஒருவரை சேர்த்துக் கொள்ளலாம்.

    பித்ரு வர்க்கம் அப்பா வழி (வர்க்கம்):-

    1) பிதா- தகப்பனார்,

    2) பிதா மகர் - பாட்டனார் (தகப்பனாரின் அப்பா),

    3) பிரபிதா மகர் - பாட்டனாருக்கு அப்பா,

    4) மாதா - அம்மா,

    5) பிதா மகி - பாட்டி (தகப்பனாருக்கு அம்மா),

    6) பிரபிதா மகி - தாத்தாவுக்கு அம்மா.

    அம்மா வழி (வர்க்கம்):-

    1) மாதா மகர் - அம்மாவின் அப்பா (தாத்தா),

    2) மாது: பிதாமஹர் - தாய் பாட்டனாருக்கு அப்பா,

    3) மாது: பிரபிதாமஹர் - தாய் பாட்டனாருக்கு பாட்டனார்,

    4) மாதா மகி - பாட்டி (அம்மாவின் அம்மா),

    5) மாது: பிதாமகி - தாய் பாட்டனாருக்கு தாயார்,

    6) மாது: பிரபிதா மகி - அம்மாவின் பாட்டனாருக்கு பாட்டி.

    இந்த 12 பேரும் இல்லாமல் இருந்தால், அந்த 12 பேருக்கும் எள்ளு - தண்ணீர் கொடுக்க வேண்டும். இவர்கள் யாராவது ஒருவர் உயிருடன் இருந்தால், அவர்களுக்கு பதிலாக முன்னோர் ஒருவர் பெயரைச் சேர்த்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    ஏழு தலைமுறை

    தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் போன்றவற்றை அந்தந்த பிறவிகளிலேயே நாம் கட்டாயம் தீர்க்க வேண்டும் என்று ஆன்றோர்கள் சொல்வார்கள். கட்டாயம் ஒவ்வொருவரும் பித்ரு கடன் தீர்ப்பதற்காக, சிரத்தையாக சிரார்த்தம் (திதி) செய்வது நன்மை தரும். அமாவாசை மற்றும் மாதப் பிறப்புகளில் கட்டாயம் தில தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருக்களுக்கான கடமைகளை நாம் மறந்தால் பிதுர் சாபங்கள் வந்துசேரும். வம்சவிருத்தி உண்டாகாது. நாம் நம் ஏழு தலைமுறைகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக மிக அவசியம்.

    நாம் - முதல் தலைமுறை

    தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

    பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

    பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

    ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை

    சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை

    பரன் + பரை - ஏழாம் தலைமுறை.

    • மகாவிஷ்ணு, பூமியை காப்பதற்காக வராக அவதாரம் எடுத்தார்.
    • பித்ரு தர்ப்பணங்கள் வீட்டில் செய்வது மிகவும் உத்தமம்.

    முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு, இந்த பூமியை காப்பதற்காக வராக அவதாரம் எடுத்தார். அப்பொழுது அவர் உடலில் இருந்து சிந்திய வியர்வைத் துளிகளே, கருப்பு எள்ளாக மாறியது. அதனால் கருப்பு எள் கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிக மிக புண்ணியமாக கருதப்படுகிறது.

    பித்ரு தர்ப்பணங்கள் வீட்டில் செய்வது மிகவும் உத்தமம். என்றாலும், நதிக்கரை, குளக்கரை, கடற்கரைகளில் செய்வது இன்னும் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். குளக்கரை அல்லது நதிக்கரையில் செய்யும்பொழுது, அங்குள்ள நீரை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். கடற்கரையில் செய்யும் பொழுது மட்டும் கடலில் உள்ள உப்புநீரை எடுத்து பித்ரு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் கடலில் குளிக்கக்கூடாது. (ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஆலங்களுக்கு இந்த விதி பொருந்தாது). கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், முதலிலேயே தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் தான் நல்ல பலன்களைத் தரும்.

    பொதுவாக குழந்தை பிறந்த தீட்டு அல்லது நம் உறவினர் யாராவது இறந்த தீட்டு இருக்கும் நேரத்தில், அமாவாசை தர்ப்பணம் செய்யக்கூடாது. ஆனால் இந்த விதி சூரிய - சந்திர கிரகங்களுக்கு பொருந்தாது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது சுத்தமான இடத்தில் தரையில் தர்ப்பம் வைத்து செய்வது விசேஷம்.

    இது நதிக்கைரயில், குளக்கரையில் சாத்தியம். வீடுகளில் செய்யும் பொழுது ஒரு பித்தளை அல்லது செப்பு தட்டு வைத்து, அதில் கூர்ச்சம் (தர்ப்பம்) வைத்து தர்ப்பணம் செய்வது நன்மை தரும். எவர்சில்வர் தட்டுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு நாம் பித்ருக்களுக்கான கடன்களைச் செய்யும் போது, நமக்கு புகழும், நீண்ட ஆயுளும், பொருளாதார வளர்ச்சியும், சொர்க்கமும் உண்டாகும்.

    சத்துருக்களை வெல்வதற்கான சக்தி கிடைக்கும், நம்முடைய குலம் விருத்தி அடையும். தகப்பனார் மற்றும் தாத்தா ஆகியோர் நம்பிக்கை இல்லாமலோ, அலட்சியத்தாலோ தர்ப்பணம் செய்யாமல் இருந்தால், அவர்களின் வாரிசு (மகன்கள்), அமாவாசை தர்ப்பணத்தை செய்வதில் எந்த பலனும் இல்லை. அதே நேரத்தில் ஆரோக்கிய குறைவு காரணமாக மற்றும் வேறு அசவுகரியத்தின் காரணமாக தர்ப்பணம் செய்யாமல் விடுபட்டிருந்தால், அவர்களிடம் இருந்து தர்ப்பையை கொடுத்து - வாங்கி சங்கல்பம் செய்து மகன்கள் தர்ப்பணத்தைச் செய்யலாம்.

    • பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள்.
    • பித்ருக்களை நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும்.

    அச்சோதை என்னும் தேவலோகப் பெண், நதிக்கரை ஓரத்தில் ஆயிரம் வருடம் தவம் செய்தாள். அவள் மரீசி மகரிஷியின் மகன்களான பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள். பித்ரு தேவதைகள் அவளுக்கு காட்சி கொடுத்து `உனக்கு என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்டனர்.

    அப்பொழுது அந்த தேவ மங்கை, பித்ரு தேவதைகள் இடையே இருந்த மாவசு என்பவரைப் பார்த்து `இவர் என்ன கம்பீர வடிவம் கொண்டவராக இருக்கிறார். இதுபோன்று ஒரு கணவன் தனக்கு அமையக்கூடாதா?' என ஒரு கணம் சிந்தித்தாள். அவளது எண்ணத்தைத் தெரிந்து கொண்ட மாவசு, `நீ தேவலோக மங்கை. ஆனால் சாதாரணமான மனிதப் பிறவிபோல் நடந்து கொண்டாய். எனவே நீ பூலோகத்திற்குச் சென்று பெண்ணாய் பிறப்பாய்' என்று சாபம் கொடுத்தார்.

    தன் தவறை எண்ணி வருந்திய அந்த தேவலோகப் பெண், `இந்த சாபத்தில் இருந்து எனக்கு விமோசனம் இல்லையா?' எனக் கேட்க, `நீ தொடர்ந்து தவம் செய். அந்தரிட்சத்தில் (ஆகாயமும் இல்லாமல் பூமியில் இல்லாமல் இடையில் அமைந்த பகுதி) நீ செய்யும் தவத்தால் உன்னுடைய சாபம் விலகும்' என்று கூறினார், மாவசு.

     இதையடுத்து மீண்டும் சில வருடங்கள், அந்த தேவலோகப் பெண் தவம் செய்தார். அதன்பின்னர் அவளுக்கு மீண்டும் பித்ரு தேவர்கள் காட்சி கொடுத்தனர். பின்னர் அந்தப் பெண்ணைப் பார்த்து, `உன் பாவங்களும், சாபங்களும் விலகியது. இதன் பயனாக நீ துவாபர யுகத்தில் மச்சகந்தி என்னும் பெயரோடு, ஒரு மீனின் வயிற்றில் பிறப்பாய். பராசுரர் என்னும் மகா முனிவரால் நீ, வியாசர் என்ற சிறப்புமிக்க மகனை பெற்றெடுப்பாய்.

    பின்னர் சந்தனு என்ற மகாராஜாவின் மகாராணியாக மாறி, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய். உன் கடைசி காலத்தில் நீ புண்ணிய நதியாக உருவெடுப்பாய். அச்சோதை என்ற உன் பெயரிலேயே அந்த நதியை அனைவரும் அழைப்பார்கள். உனக்கு நாங்கள் காட்சி கொடுத்த இந்த அமாவாசை தினத்தில் பித்ரு தேவதைகளையும் (இறந்த முன்னோர்கள்), பித்ருக்களையும் நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும்.

    அமாவாசை திதியில் `நம் வம்சத்தில் பிறந்த யாராவது எள்ளும், தண்ணியும் கொடுப்பார்களா?' என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நாளில் யார் எள்ளும், தண்ணியும் கொடுக்கிறார்களோ, அவர்களது முன்னோர்களுக்கு மோட்சத்தை கொடுப்போம். அப்படி பித்ரு தர்ப்பணம் செய்பவர்களின் வம்சமும் தழைக்கும். அதோடு பித்ரு தோஷமும் விலகும்' என்று வரம் அளித்தனர்.

    • குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும்.
    • இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள்.

    மறைந்த முன்னோர்கள் பற்றி மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து விட்டால் போதும் என மன திருப்தி கொள்கிறார்கள். ஆனால் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் முன்னோர் வழிபாடு செய்தால், அதற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயம் முந்தி வரும். இது பலரும் அனுபவிக்கும் யதார்த்தமான உண்மை.

    இறந்தவர்களின் திதியை தெரிந்து கொண்டு, அந்த கடமையை தவறாமல் செய்து வருபவர்களைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது மறைந்த முன்னோர்களின் ஆசி நிரம்ப கிடைத்து வருவதாக உறுதியாக கருதலாம்.

    ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதம் இருந்து மனம் உருகி பித்ருக்களின் ஆசியை கேட்க வேண்டும். நிச்சயம் பித்ருக்கள் உங்களை வாழ்த்துவார்கள். இதன்மூலம் கிடைக்கும் முதல் பலன் என்ன தெரியுமா? உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும். உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களும் விலகும்.

    நீங்கள் எந்த அளவுக்கு பித்ரு பூஜைகள் செய்கிறீர்களோ..... அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும். பித்ரு வழிபட்டு செய்ய, செய்ய செல்வமும் சேரும். வறுமை என்பதே உங்கள் குடும்பத்தினருக்கு வராது.நோய்களை தடுத்து காக்கும் சக்தியும் பித்ருக்களுக்கு உள்ளது. அந்த வகையில் நமக்கு சிறு பாதிப்பு என்றாலும் முதலில் ஓடி வருவது பித்ருக்கள்தான்.

    சிலர் குல தெய்வ வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பித்ருக்கள் வழிபாட்டுக்கு கொடுப்பது இல்லை. குலதெய்வ வழிபாட்டுக்கு முன்பு செய்ய வேண்டியது பித்ருக்கள் வழிபட்டுதான் என்பதை மறந்து விடக்கூடாது. பித்ருக்களை உரிய ஐதீகப்படி வழிபட்டால் உங்களின் இந்த பிறவியில் உள்ள தோஷங்கள், பாவங்கள் எல்லாம் விலகும். இதனால் உங்கள் ஆத்மா சுத்தமாகி புனிதம் பெறும்.

    இந்த புனிதம் அதிகரித்தால்தான் நீங்கள் முக்தி பாதைக்கு செல்ல முடியும். எனவே முன்னோர் வழிபட்டு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக் காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.

    • மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
    • பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது.

    பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந் தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டி ருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம்அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னி யோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும்.

    ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத்திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்து கொள்வதில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும்.

    தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று சுப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இது வருவது ஏன்?

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும். இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம். தெய்வத்தை வணங்காவிட்டால், சாமி கோபித்துக்கொள்ள மாட்டார். ஆனால், தென்புலத்தாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். அவற்றைச் செய்யத் தவறினால் வருவதுதான் பித்ருதோஷம்.

    • கயா சென்று பிண்டம் போட்டு வந்தால்தான் ஆத்மா சொர்க்கம் செல்லும்.
    • அவர்களுக்கு சொர்க்கத்தில் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

    சாதாரணமாக காசிக்குச் சென்று முன்னோர் களுக்கு சிரார்தம் செய்துவிட்டு வந்தாலும் பித்ருக்களுக்கு கயாவில் சென்று பிண்டம் போட்டுவிட்டு வந்தால்தான் அவர்கள் ஆத்மா சொர்க்கம் செல்லும். அங்கு அவர்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் அங்குதான் பிரம்மாவும் விஷ்ணுவும், பிற தேவர்களும் வந்து அசுரனின் உடல் மீது அமர்ந்து கொண்டு பித்ரு யாகம் ஒன்றை செய்ததாக ஒரு கதை கூறப்படுகின்றது .

    அந்தக் கதை என்ன?

    முன்னொரு காலத்தில் கயாவில் கயாசுரன் என்ற பெரிய அசுரன் இருந்தான். அவன் ஒருமுறை தனக்கு மேலும் அதிக சக்தி வேண்டும் என வேண்டிக்கொண்டு தவத்தில் அமர்ந்தான். அவன் செய்த கடுமையான தவத்தின் வலிமையினால் அவனுடைய சக்தியும் பெருகிக்கொண்டே போயிற்று. அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அவனுடைய தொல்லையும் தாங்க முடியாமல் போயிற்று.

    அவன் தேவர்களைவிட அதிக சக்தி வாய்ந்தவனாக ஆகிக்கொண்டே இருந்ததினால் தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் விஷ்ணுவிடம் சென்று தமது அச்சத்தை தெரிவிக்க அவர் பிரம்மாவை அழைத்து அவரை கயாசுரனிடம் சென்று தேவலோகத்தின் கீழுள்ள பித்ருக்கள் மோட்ஷம் அடைய ஒரு யாகம் செய்ய உள்ளதாகவும் அதை ஆகாயத்தில் செய்யக்கூடாது, பூமியில்தான் செய்ய வேண்டும் என்பதினால் பூமியில் உள்ள கயாசுரன் உடல் மீது தம்மை யாகம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுமாறும் அதன் பின் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.

    அதன்படி பிரம்மாவும் கயாசுரனிடம் சென்று அப்படியே வேண்டிக்கொள்ள அவன் கயாவில் சென்று பூமியில் படுத்துக் கொண்டான். அவன் தலை மீது பிரம்மா பித்ரு யாகத்தை துவங்கினார். ஆனாலும் அவன் அடிக்கடி அசைந்து கொண்டே இருந்ததினால் மிரிச்சி என்ற முனிவரை அழைத்து அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து அந்த கயாசுரன் உடல் மீது ஒரு கல்லை வைத்துவிட்டு அமருமாறு விஷ்ணு கூறினார். அவர்களும் பித்ரு யாகத்தில் கலந்து கொள்வது போல வந்து அவன் மீது அமர்ந்தனர்.

    பித்ரு யாகம் நடக்க நடக்க அவனுடைய சக்தி அதில் கரைந்து கொண்டே போயிற்று. முடிவில் விஷ்ணு அந்த கல்லின் மீது ஏறி அமர அனைவரது சக்திகளும் ஒன்று சேர்ந்தது. யாக சக்தியும் அவர்களது சக்தியுடன் ஒன்று சேர அந்த கயாசுரன் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே மடிந்தான்.

    ஆனாலும் அவன் மீதே பித்ருக்களின் யாகம் நடந்ததினாலும், திருப்தியடைந்த ஆத்மாக்கள் அவனை ஆசிர்வதித்ததினாலும் அவனுக்கு நல்ல பலன் கிடைத்து பித்ருக்கள் வசிக்கும் மோட்ஷம் சென்றான். ஆகவே காயா பித்ரு லோகம் எனப் பெயர் பெற்றது. ஆகவேதான் விஷ்ணுவே மோட்ஷம் தந்த அந்த இடத்தில் சென்று பித்ருக்களுக்கு சிரார்தம் செய்தால் அவர்களுடைய ஆத்மாவுக்கு வைகுண்டம் செல்லும் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    இதற்கு ஒரு முன் உதாரணமாக ஒரு கதை உண்டு. கர்ணன் மடிந்து மேலுலகம் சென்றதும் அவன் செய்து இருந்த தர்மத்தின் பலனாக அவனுக்கு தங்கத்தையே உணவாகக் கொடுத்தனராம். அவன் எப்படி தங்கத்தை சாப்பிடுவது? என்று இந்திரனிடம் கேட்டபோது அவன் அதுவரை தங்கத்தையே தானம் தந்துள்ளதாகவும். உணவை அவன் எவருக்குமே தானம் செய்யவில்லை.

    அவனுடைய பித்ருக்களுக்குக்கூட கர்மா செய்து பிண்டமாக அவர்களுக்கும் உணவு தராததினால் தான் அந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவும் ஆகவே அவனுக்கு பதினாறு நாள் பூமிக்குச் சென்று பித்ரு சிரார்தம் செய்து பிண்டம் போட்டு விட்டு வர அவகாசம் தருவதாகக் கூறி கர்ணனை பூமிக்கு அனுப்ப கர்ணனும் கயாவுக்குச் சென்று தம் பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டுத் திரும்பினாராம். அதன் பின்னரே அவனுடைய ஆத்மாவுக்கு உணவு கிடைத்ததாம்.

    • குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை `பித்துருக்கள்’ என்கிறோம்.
    • ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம்.

    குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை `பித்துருக்கள்' என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் `பித்ரு தோஷம்', இந்த தோஷம் நமக்கு உள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.

    பரிகாரம்:

    ராமேஸ்வரம் சென்று `திலஹோமம்' செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், `திருவெண்காடு' சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப் பரிகாரம்.

     திலஹோமம்:

    குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டும் `திலஹோமம்' செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இயற்கை மரணம் அடைந்திருந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.

    தோஷத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள்:

    * பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.

    * ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை. மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.

    * ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

    * கலப்புத்திருமணம், ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. தோஷம் வர பல்வேறு காரணம்:

    * கருச்சிதைவு

    * பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.

    * இளையதாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.

    * தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.

    * ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் பித்ரு தோஷம் வரும்.

    * துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

     தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்ரு தோஷம்:

    இவர்களது குடும்பம் ஜோதிடரீதியில் எவ்வளவு அதிர்ஷ்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும், அந்த பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருகளும், பித்ரு தேவதைகளும் தடை செய்வார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மை உடையது.

    பரிகாரம்

    `சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம்' செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும். இந்த அபிஷேகத்தை பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.

    பித்ரு பூஜை செய்ய சிறந்த தலம்

    சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள், 100 கிராம் பச்சரிசி, அகத்திக்கீரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், ஒரு வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டுக்கு கொடுக்க `பித்ரு தோஷம்' நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும் இதனால் `பித்ரு தோஷம்' முழுமையாக நீங்கும்.

    உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள் இருந்தாலும் குறிப்பிட்ட ஊரில் தான் சில பறவைகளைக் காண முடியும். ஆனால் காக்கை உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஒரே பறவை இனமாகும். இந்த காக்கையை `சனிபகவானின்' வாகனமாக மட்டும் பார்க்காமல் நமது முன்னோர்களின் வடிவான பித்ருகளாகவும் வழிபட்டுள்ளனர்.

    நமது முன்னோர் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் உழல்பவர்கள். தினமும் காக்கைக்கு ஒரு பிடி உணவு அளித்தால் அவர்களின் பிரச்சினையின் தீவிரமும் பிடி அளவு வீதம் கரையத் தொடங்குவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த பழக்கம் மெதுவாக மறைந்து தற்போது அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற நாட்களில் மட்டும் காக்கைக்கு உணவிடுகிறோம். முன்னோர் பழக்கத்தை நாமும் பின்பற்றினால் பிரச்சினைகளின் தீவிரத்தில் இருந்து விடுபடுவோம்.

    • தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

    வியதீபாதம் யோகத்தில் ஒருவன் பிறந்தால், அவன் குடும்பத்தில் மோட்சம் அடையாத ஆன்மாக்களின் சாபம் ஏற்படும். அப்படி இந்த யோகத்தில் பிறந்தவரோ அல்லது அவரது தந்தையோ, ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற வியதீபாதம் யோக நாளில் (ஜோதிடர் மூலம் இந்த நாளை அறிந்து கொள்வதே சரியானது)

    அதிகாலை நேரத்தில் இந்தத் திருத்தலத்தில் உள்ள தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் நதிக்கரையில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள பக்தவத்சலப் பெருமாளை வணங்கி, அர்ச்சனை மற்றும் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பின்னர் தங்களால் முடிந்த அளவு (குறைந்தது 10 பேருக்கு) அன்னதானம் செய்தால், பித்ரு தோஷம் மற்றும் கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

     பரிகாரம் செய்வது எப்படி?

    அசுப யோகங்களின் தோஷம் உள்ளவர்கள், முதலில் இந்தத் திருத்தலத்தின் புனித நீரான தாமிரபரணி நதியில் நீராட வேண்டும். நீராடும்போது உடுத்தி இருந்த ஆடையை அங்கேயே களைந்து, அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், பழைய ஆடைகளை ஆற்றில் விட்டு, அதனை மாசுபடுத்தக்கூடாது.

    பின்னர் ஆலயத்திற்குள் சென்று பக்தவத்சலப் பெருமாள் முன்பாக நின்று, அவரை வழிபட வேண்டும். பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை வாங்கிச் சென்று, பூஜை செய்யும் பட்டாச்சாரியாரிடம் கொடுத்து சுவாமிக்கு அணிவிக்கச் செய்ய வேண்டும். அதோடு சுத்தமான நெய் வாங்கிச் சென்று, சுவாமியின் முன்பாக இருக்கும் விளக்கில் சேர்க்கச் சொல்ல வேண்டும். பின்னர் உங்களது குறைகள் தீர இறைவனை வழிபட வேண்டும்.

    இறுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் முன்பாக, கோவிலிலோ, அல்லது வரும் வழியிலோ குறைந்தது 10 பேருக்கு கட்டாயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கான பணத்தை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்யச் சொல்வதில் எந்த பலனும் இல்லை. நீங்களே நேரடியாக உங்கள் கைகளால் இந்த அன்னதானத்தை வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
    • ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம்.

    பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    பித்ரு தோஷத்துக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

    கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வ தில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

    ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும்

    பித்ரு தோஷம் வருவது ஏன்?

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும். இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை.
    • பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது.

    மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இதில் மத்யாஷ்டமி முக்கியமான தினம்.

    பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். மகாளய பட்சம் என்பது ஆவணிமாத பவுர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாள்களைக் குறிக்கும். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். பதினைந்து நாள்கள் நம் முன்னோர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக பூலோகம் வந்து தங்கும் காலமே மகாளய பட்சம் எனப்படுகிறது.

    ஒவ்வோரு அமாவாசை அன்றும் நாம் வழங்கும் தர்ப்பணங்களை எமதர்மராஜன் ஏற்று நம் முன்னோர்களுக்கு வழங்குவாராம். ஆனால் மகாளயபட்சத்தின் போது 'பித்ரு லோகத்தில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு சென்று வாருங்கள்' என்று அவர்களை அனுமதிப்பாராம்.

    நம் முன்னோர்களுக்கு பிரியமான இடம் நம் வீடுதானே! எனவே அன்று நம் பித்ருக்கள் கூட்டமாக நம் வீட்டுக்கு வருவார்கள் என்கின்றன சாஸ்திரங்கள்.

    மகாளயபட்சத்தின் முக்கியமான நாள்கள்

    மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்தப் பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் முன்னோர்கள்.

    கட்டாயம் மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். அது தவிர மீதமுள்ள நாள்களில் ஏதேனும் ஒருநாள் நாம் தர்ப்பணம் முதலிய வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய நாள்களாக, மகாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, மஹாவியதீபாதம், சந்நியஸ்தமாளயம், கஜச்சக்ஷமாளயம், மகாளய அமாவாசை ஆகிய நாட்களை வகுத்து தந்திருக்கிறார்கள்.

    பொதுவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யும்போது மூன்று தலைமுறை தாய், தந்தையருக்கு மட்டுமே தர்ப்பணம் வழங்குவோம். ஆனால் மகாளயபட்சத்தில் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் அறியாதவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தர்ப்பணம் செய்யமுடியும்.

    இந்த நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது. மகாபரணி தந்தை, தாய் இறந்த திதி எதுவென்று அறியாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய நாள். முறையாக முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள், வழிபாடு செய்ய உகந்த நாள் மத்யாஷ்டமி.

    குடும்ப சுமங்கலிகளை வழிபட உகந்த தினம் அவிதவாநவமி. 27 யோகங்களில் ஒன்றான வியதீபாத யோகம் மகாளய பட்சத்தின்போது ஏற்பட்டால் அது மகாவியதீபாத யோகம் என்று அழைக்கப்படும். இந்த நாளில் செய்யப்படும் பித்ருவழிபாடு சகல நன்மைகளையும் பெற்றுத்தரும்.

    இந்த ஆண்டு மத்யாஷ்டமி இன்று. மகாளய பட்சத்தின் 15 நாள்களில் நடுநாயகமாகத் திகழ்வது இந்த மத்யாஷ்டமி. எனவே இந்த நாள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. மத்யாஷ்டமி அன்று தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளை செய்தால் மகாளய பட்சம் முழுவதும் முன்னோர்வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

    மேலும் அறிவாற்றல் பெருகி காரியங்களில் வெற்றி கிடைக்கும். எனவே காரியத்தடைகள் விலக கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது மத்யாஷ்டமி வழிபாடு.

    குடும்பங்களில் சுமங்கலிகளாக வாழ்ந்து மறைந்த பெண்கள் குடும்பத்தினைக் காக்கும் தெய்வங்களாகத் திகழ்வர் என்பது நம்பிக்கை. முறையாக சுமங்கலி வழிபாடுகள், பிரார்த்தனைகள் செய்யாதவர்கள் குடும்பங்களில் சுபகாரியத் தடைகள் நிகழும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    திருமணம் முதலிய சுபகாரியங்களுக்கு முன்பாக சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் பல குடும்பங்களில் உள்ளன. மகாளய பட்சத்தில் வரும் நவமி திதி சுமங்கலி வழிபாட்டுக்கானது. இந்த நாளில் வீட்டின் மூத்த பெண்களை நினைத்து வழிபடுவதோடு, புடவை முதலிய மங்கலப்பொருள்களை தானம் செய்வதன் மூலம் சுமங்கலிகளின் ஆசி நமக்குக் கிடைக்கும்.

    பித்ரு தோஷம்?

    இதேபோன்று சந்நியாசிகளுக்கு உரிய திதி சந்நியஸ்தமாளயம், கணவரை இழந்த விதவைகள் செய்வதற்க்கான கஜச்சக்ஷமாளயம் மற்றும் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய சஸ்த்ரஹதமாளயம் ஆகிய நாள்கள் முக்கியமானவை. இந்த நாள்களில் முன்னோர் வழிபாடு செய்வது வாழ்வில் இருக்கும் துன்பங்களை நீக்கி நன்மைகள் சேர்ப்பவை.

    ஜாதகத்தில் பித்ரு தோஷம்

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுகளுக்குடன் எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷமாகும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும். ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும்.

    ராகு - கேது

    இத்தகைய பித்ரு தோஷம் உடைய ஜாதகக் காரர்களுக்கு அருமருந்தாகத் திகழ்வது இந்த மகாளயபட்சம். மகாளயபட்ச நாள்களில் தினமும் குளித்து பித்ருக்களை வழிபடுவதன் மூலம் அனைத்து தோஷங்களையும் நீக்கலாம். குறிப்பாக இந்த நாள்களில் வறியவர்களுக்கு உணவு, உடை ஆகியன வற்றை தானம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம். முன்னோர்களின் ஆசி நமக்கு அனைத்து நலன்களையும் பெற்றுத்தரும்.

    ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் அவரது வாழ்க்கையில் முன்னேற்றமே இருக்காது. ஒருவருக்கு பித்ரு தோஷம் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று பார்க்கலாம்.
    1. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடம் என்பது பூர்வபுண்ணியம் ஆகும். அதே ஐந்தாமிடம் தான் அவர்களுடைய சிந்தனைஸ்தானம், புத்திரஸ்தானம், குல தெய்வஸ்தானம், மன உறுதி ஸ்தானம் ஆகும்.இங்கே ராகு அல்லது கேது இருக்க ஒரு ஆணோ பெண்ணோ பிறந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

    2. பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

    3. சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரஹண தோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

    4. ஒரு ஜாதகத்தில் சனைஸ்வரரின் நிலையும் பித்ரு தோஷத்தை தெரிவிக்கும். சனைஸ்வர பகவான் பித்ரு ஸ்தானத்தில் நிற்பது, வக்ரம் பெற்று நிற்பது, குடும்பந்தில் அனைவரின் ஜாதகங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வக்ரம் நீசம் ஆகிய நிலைகளில் நிற்பது பித்ரு தோஷத்தை தெரிவிக்கும்.
    ×