search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருது"

    • ஏ. ஆதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விருது’.
    • இந்த படக்குழு தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

    ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஏ.டி.ஆதிநாடார் தயாரித்த முதல் படம் விருது. இந்தப் படம் வெளிவந்து தியேட்டர்களில் 40 நாள் வெற்றிகரமாக ஓடி லாபத்தை கொடுத்தது. இப்போது 'உலகநாதன்' என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் தயாரித்திருக்கிறார்கள்.


    கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் கலந்த பேமிலி படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை மற்றும் இராஜபாளையத்தைச் சுற்றியுள்ள அழகான பகுதிகளில் நடைபெற்றுள்ளது. விருது படத்தை இயக்கிய ஏ. ஆதவன் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். விருது படத்தில் கதாநாயகனாக நடித்த அட்சயன் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக யோகதர்சினி, கிரேட்டா இரண்டு புதுமுக நாயகிகளும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.


    மேலும், கஞ்சா கருப்பு, விஜய் டி.வி. புகழ் சசிகலா, வில்லனாக புதுமுக நடிகர் கடற்கரை மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகன் சிலம்பம் பயிற்சி முழுமையாக பெற்றவர் என்பதால் சிலம்பம் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் அவரே நடித்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கணேஷ் சாய் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணா நூற்றாண்டு அரங்கில் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாநாடு நடக்கிறது.
    • மாநாட்டில் 10 அறிஞர்களுக்கு உலக பெருந்தமிழர் விருது வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    உலகத்தமிழர் பேரமை ப்பின் 10-ம் ஆண்டு மாநாடு தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    முதல் நாள் மாநாட்டுக்கு அரசு தலைமை தாங்குகிறார்.

    சிவசுப்பிரமணியன் தொடக்க உரை ஆற்றுகிறார். 2-ம் நாள் கருத்தரங்கிற்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார்.

    வக்கீல் பானுமதி தொடக்க உரை ஆற்றுகிறார். இதில் பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மாநாட்டில் தமிழுக்கு அயராது தொண்டாற்றி வரும் 10 அறிஞர்களுக்கு உலக பெருந்தமிழர் விருது வழங்கப்படுகிறது.

    முதல்நாள் விருந்தளிப்பு விழாவிற்கு கவிஞர் காசி ஆனந்தன், 2-ம் நாள் நடைபெறும் விழாவிற்கு சு.வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    விருதுகளை நான் வழங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் குளத்தை புதுப்பித்தது.
    • சிவகங்கை குளத்திலிருந்து அய்யன் குளத்துக்கு சுரங்க நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேல வீதியிலுள்ள அய்யன் குளம் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது.

    மொத்தம் 7 ஆயிரத்து 630 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குளத்துக்கு பெரிய கோயில் அருகிலுள்ள சிவகங்கை குளத்திலிருந்து நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டது.

    இதற்காக சிவகங்கை குளத்திலிருந்து அய்யன் குளத்துக்கு சுரங்க நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டது.

    காலப்போக்கில் பராம ரிப்பின்மை காரணமாக நீர் வரத்து இன்றி மிக மோசமான நிலையில் இருந்த இக்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது.

    இதில், குளம் தூர் வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், நடைபாதையோரம் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

    நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க நீர்வழிப் பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்ட

    விருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2022 ஆம் ஆண்டு நடத்தியது.

    இப்போட்டி சுற்றுச்சூழல், கலாசாரம், பொருளாதாரம், ஆளுமை, வணிக மாதிரி, தூய்மை உள்பட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது.

    இதில், கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இப்பிரிவில் தொழில் நுட்பத்தைப் பயன்ப டுத்தி பாரம்பரிய கட்டுமா னம், சுற்றுலாவை மேம்படுத்தி யதற்காக அகமதாபாத், பாரம்பரிய கட்டடங்களைப் புனரமைப்பு செய்ததற்காக போபால், அய்யன் குளத்தைப் பாதுகாத்தலுக்காக தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    இதற்கான விருது மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூர் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர் ) 27 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்படவுள்ளது.

    இந்த விருதை ஜனாதிபதி வழங்க உள்ளார்.

    இந்த தகவலை தஞ்சை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - தேசிய குழந்தைகள் விருது 2023-ற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டு 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    புதிய கண்டுபிடிப்பு , கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரத்தீர செயல் புரிந்த தனி தகுதிப்படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக (பால் புரஷ்கார் )எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும். இவ்விருதுக்கான தகுதியுடையோர் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட கலெக்டர் சரயு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 பேருக்கு விருது வழங்கினார்.
    • விமல் ரவிக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜேம்ஸ் , ஆனந்த குமார்,ஜெயம்மா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவில் சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்ட கலெக்டர் சரயு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 பேருக்கு விருது வழங்கினார்.

    விருதானது வட்டார வளர்ச்சிஅலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜேம்ஸ் , ஆனந்த குமார்,ஜெயம்மா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், மணவாசி நடுநிலை பள்ளிக்கு ‘புதிய பாரத எழுத்தறிவு’ விருது வழங்கப்பட்டு உள்ளது
    • எழுதபடிக்கத்தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டது

    கரூர்,

    தமிழகத்தில், மத்திய அரசு சார்பில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில், 'புதிய பாரத எழுத்தறிவு' திட்ட செயல்படுத்தப்படுகிறது. இதில், எழுத்தறிவு மட்டுமல்லாது வங்கி ஏ.டி.எம்., அஞ்சலக பயன்பாடு குறித்து பயிற்சிகள் தரப்படுகிறது. இதில், மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும் மையம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மணவாசி நடுநிலைப்பள்ளி சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரைச்செல்வி, தலைமை ஆசிரியர் தேன்மொழி தன்னார்வலர் வசந்தி ஆகியோருக்கு, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா வாழ்த்து தெரிவித்தார்.

    • அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுத்தறிவு விருதுகளை வழங்கினார்.
    • ன்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கற்போர் மையத்திற்கு விருது வழங்கப்பட்டது.

    தருமபுரி, 

    பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பாக 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு கற்றுக் கொடுக்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலமாக கற்போர் மையம் ஏற்படுத்தப்பட்டு எழுத்தறிவும் எண்ணறிவும், வாழ்வியல் திறன்களையும் தன்னார்வலர்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களுக்கு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்டங்களுக்கு மூன்று மையங்கள் என்ற அளவில் மாநில எழுத்தறிவு விருதுகளை வழங்கினார்.

    இதில் பென்னாகரத்தை அடுத்துள்ள சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கற்போர் மையத்திற்கு விருது வழங்கப்பட்டது.

    அதே போன்று தருமபுரி ஒன்றியம் முக்கல்நாயக்கம்பட்டி கற்போர் மையத்திற்கும், நல்லம்பள்ளி அருகே உள்ள எர்ரன அள்ளி கற்போர் மையத்திற்கும் என தருமபுரி மாவட்டத்தில் மூன்று மையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    இதில் ஒருவராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சரிடம் விருதினை பெற்றுக்கொண்டார்.

    இவ்விழாவில் தன்னார்வலர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள்.

    கல்வித்துறையை சார்ந்த இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

    தர்மபுரி மாவட்டத்தில் விருது பெற்ற மூன்று மையங்களைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் ஆசிரியர் பயிற்றுநர்களை, தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்டக்கல்வி தொடக்கக்கல்வி அலுவலர் மான்விழி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்.

    • அரசு பள்ளிக்கு ‘புகையிலை இல்லா கல்வி நிறுவனம்’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
    • சான்றிதழை சுகாதார ஆய்வாளர் வழங்கினார்

    கரூர்,

    புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்ப டுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை விளக்கி அவற்றை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களும் "புகையிலை இல்லா கல்வி நிறுவனம்" என்ற சான்றிதழை பெற அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆய்வு செய்து சான்று கரூர் கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்யப்பட்டு, "புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி" 'என்ற பதாகைகள் வைக்கப்பட்டன. புகையிலை தடுப்பு சட்டத்தை விளக்கி பள்ளி வளாகத்தில் புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு, மீறி பயன்படுத்தினால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.fileimaஇந்த நடவடிக்கையின் படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு "புகையிலை இல்லா கல்வி நிறுவனம்" என்ற சான்றிதழை சுகாதார ஆய்வாளர் கோகுல் ராஜ், தலைமை ஆசிரியர் சாகுல் அமீதுவிடம் பள்ளிக்கு நேரில் வந்து வழங்கினார்.

    • புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    புனே:

    சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர் திலக் மகராஜ், லோக மான்ய திலகர் என்றும் போற்றப்பட்டார்.

    லோகமான்ய திலகரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு திலக் ஸ்மார்க் மந்திர் அறக்கட்டளையால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ந்தேதி திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கரஸ் தலைவருமான சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மோடியுடன் அவர் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தார்.

    இந்த விழாவில் சரத் பவார் கலந்து கொள்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. மகாராஷ்டிராவில் இந்த 3 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சியின் எதிர்ப்பையும் மீறி சரத்பவார் இந்த விழாவில் கலந்து கொண்டார். இதனால் அவர் மீது காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அதிருப்தி அடைந்தன.

    இதற்கிடையே பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    லோகமான்ய திலகர் தேசிய விருதை பெறுவதற்கு முன்பு பிரதமர் மோடி புனேயில் உள்ள கணேசர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

    விருது நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    • ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
    • தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்த (2023-24)-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, சக விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது.

    விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100 ஆகும்.

    குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். முழு நேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

    இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், 2-ம் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும்.

    மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி முதல் மந்திரியுடன் சகோதரியாக இணைந்து பணியாற்றுகிறேன்.
    • அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் நடைபெற்ற ஒரு சமுக சேவை விருது வழங்கும் விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது,

    தஞ்சை மண் மிகுந்த சிறப்புக்குரியது. நான் வாழ்க்கை பாடத்தை தஞ்சையில் தான் கற்றுக் கொண்டேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள். அவர்களைப் பார்த்துதான் எனக்கு பொது வாழ்வின் மீது பற்றுதல் ஏற்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    புதுவையிலும் அன்போடு மக்கள் பழகி வருகிறார்கள். பலர் நான் ஆளுநராக இருந்து அரசியல் செய்வதாக சொல்லுகிறார்கள். அதே நேரத்தில் புதுவை முதல்வர் என்னிடம் சகோதர உணர்வோடு பழகி வருகிறார். புதுச்சேரியில் முதல்வருக்கு, நான் சகோதரியாக இருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.

    தெலுங்கானாவில் முதல்வர் என்னை எதிரியாக பார்க்கிறார். அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். உழைப்பு இருந்தால் எவரும் முன்னுக்கு வரலாம். அதே நேரத்தில் ஏழைகளுக்கும் சேவை செய்ய வேண்டும். ஏழைகளுக்கு சேவை இறைவனுக்கு செய்யும் சேவை.

    இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக மாவட்டச் செயலாளர் இரா.காமராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.
    • போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்க ப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 15 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 10 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ், பிளஸ் 2 பயிலும் சிறந்த 15 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 20 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்க ப்படுகின்றனர். நடப்பாண்டுக்கான காமராஜர் விருது குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் தரப்பில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி விருதுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியலை பள்ளி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    ×