search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "innovation"

    • தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் நிரல் திருவிழா 7-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
    • பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், தொழில்துறை நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒருநாள் பயிற்சி வகுப்பிற்கான நிரல் திருவிழாவினை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் நிரல் திருவிழா 7-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை கொண்டு தொடரும் சிக்கல்களை தீர்க்கவும் நமது மாணவர்களிடம் புத்தாக்கத்தை தூண்டுவதே நிரல் திருவிழா நோக்கமாகும். இது அனைத்து தொழில்நுட்ப மாணவர்கள் படிப்புகளில் இறுதியாண்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்நான் முதல்வன் திட்டத்தின்கீழ், தொழில்துறை நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒருநாள் பயிற்சி வகுப்பிற்கான நிரல் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் முக்கிய நோக்கம் அரசுத்துறைகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் அறிந்து கொள்வது மற்றும் மாணவர்களிடம் உள்ள தீர்வு காணும் திறன்களை பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இதன் வாயிலாக, சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதற்கு வாய்ப்பாக அமையும். நிரல் விழாவில், புத்தாக்கப்பயிற்சியாக, அக்ரிடெக் மற்றும் உணவு தொழில்நுட்பம், சுத்தமான மற்றும் பசுமை தொழில்நுட்பம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம், மெட்டெக்,பயோடெக், ஹெல்த், புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆற்றல், ஸ்மார்ட் நகரம், கிராமப்புற வளர்ச்சி, ஸ்மார்ட் வாகனங்கள், கல்வி 4.0 போன்ற துறைகளின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்பாலமுருகன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர்.அருள், உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக சிவ நடராஜன், ஊரக புத்தாக்கத் திட்ட பயிற்சியாளர் அனிதா, மேலாளர்ஆதர்ஷ் மிட்டல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - தேசிய குழந்தைகள் விருது 2023-ற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டு 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    புதிய கண்டுபிடிப்பு , கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரத்தீர செயல் புரிந்த தனி தகுதிப்படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக (பால் புரஷ்கார் )எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும். இவ்விருதுக்கான தகுதியுடையோர் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆஸ்பத்திரிக்கு முககவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வந்தார்.
    • போலீசார் செல்போன்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரில் 2 ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு முககவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வந்தார். அப்போது அந்த நபர் பணியில் இருந்த 2 நர்சிடம் நன்கொடை கேட்பது போல் நடித்து, கவனத்தை திசை திருப்பி, அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிச் சென்றார். இதுகுறித்து புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • புதுவை போக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா பங்கேற்றார்.
    • பேருந்துகளை மாற்றம் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கள் அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் டெல்லியில் அனைத்து மாநில போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் புதுவை போக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா பங்கேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசு ம்போது, புதுவை அரசின் பி.ஆர்.டி.சி.க்கு சொந்தமான பேருந்துகளை மாற்றம் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும். புதுவையின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி தொகுப்பில் புதுவைக்கும் ஒதுக்கீடு வழங்கி போதுமான பஸ்கள் வழங்க வேண்டும்.

     புதிய விதியின் கீழ் சுற்றுலா பர்மிட் வழங்குவதில் உள்ள இடர்பாடுகள், சாலைப் பாதுகாப்பிற்கு மத்திய அரசு மூலம் தனி நிதி ஒதுக்கீடு, மின்னனு வாகனப் பயன்பாட்டிற்கான ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் புதுவையை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு சந்திர பிரியங்கா பேசினார்.

    நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், புதுமையும் முக்கியம் என்று டெல்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார். #Modi #Education #Innovation
    புதுடெல்லி:

    டெல்லியில் விஞ்ஞான பவனில் எழுச்சிக்கான கல்வி தலைமைத்துவம் என்ற பொருளில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அறிவும், கல்வியும் புத்தகங்களோடு கட்டுப்படுத்தப்பட வேண்டியவை அல்ல. கல்வியின் நோக்கம், ஒரு நபரின் ஒவ்வொரு பரிமாணத்துக்கும் சம நிலையிலான வளர்ச்சியை அடையச்செய்வதுதான். புதுமை என்பது இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியப்படாது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், புதுமையும் முக்கியம்.

    முழுமையான கல்விதான் நம்மை மனிதர்கள் ஆக்குகின்றன என்று சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தி கூறி இருக்கிறார். நமது பழமையான பல்கலைக்கழகங்களான தக்சீலா, நாளந்தா, விக்ரம்சீலா ஆகியவவை அறிவுடன் புதுமைக்கும் சமமான முக்கியத்துவம் அளித்தன.

    புதுமை என்ற ஒன்று இல்லாவிட்டால், நாம் வாழ்கிற இந்த வாழ்க்கை ஒரு சுமையைப்போல தோன்றும்.

    இந்திய பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் நாங்கள் எதிர்கொள்கிற சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு எங்களுக்கு உதவும். நாம் நமது கல்வி நிறுவனங்களை ஒன்றுக்கொன்றுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.

    மாணவர்கள் வகுப்பறையில் படிக்கிற கல்வியை, நாட்டின் எதிர்பார்ப்புகளுடன் இணைக்க வேண்டும். குழந்தைகளை புதுமையை நோக்கி ஊக்குவிக்கவும், உயர் கல்வியைப் பெறவும், எழுச்சி பெறவும் ‘அடல் டிங்கரிங் லேப்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது.

    கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு கல்வியில் உள்ள கட்டமைப்பு மற்றும் முறைமைகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும்.

    சமூகத்து நல்ல ஆசிரியர்களை தயார்ப்படுத்தி அளிப்பதுவும் முக்கியம். எண்ணியல் கல்வியை பரப்புவதற்கும், அரசு திட்டங்கள் குறித்து பெரிதான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிஞர்களும், மாணவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

    இளைய தலைமுறையினர் இந்தியாவுக்கு உலகளாவிய அடையாளத்தை தந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கல்வி தொடர்பான பிரதமர் மோடியின் கண்ணோட்டத்தை புகழ்ந்தார்.

    கல்வியில் உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புகளை உருவாக்குவதற்கு, மத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  #Modi #Education #Innovation
    ×