என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே ஆஸ்பத்திரிகளில் நூதன முறையில் செல்போன்கள் திருடிய வாலிபர்
- ஆஸ்பத்திரிக்கு முககவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வந்தார்.
- போலீசார் செல்போன்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரில் 2 ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு முககவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வந்தார். அப்போது அந்த நபர் பணியில் இருந்த 2 நர்சிடம் நன்கொடை கேட்பது போல் நடித்து, கவனத்தை திசை திருப்பி, அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிச் சென்றார். இதுகுறித்து புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story