என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பள்ளிகளைச் சேர்ந்த கற்போர் மையத்திற்கு மாநில எழுத்தறிவு விருது
    X

    3 பள்ளிகளைச் சேர்ந்த கற்போர் மையத்திற்கு மாநில எழுத்தறிவு விருது

    • அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுத்தறிவு விருதுகளை வழங்கினார்.
    • ன்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கற்போர் மையத்திற்கு விருது வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பாக 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு கற்றுக் கொடுக்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலமாக கற்போர் மையம் ஏற்படுத்தப்பட்டு எழுத்தறிவும் எண்ணறிவும், வாழ்வியல் திறன்களையும் தன்னார்வலர்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களுக்கு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்டங்களுக்கு மூன்று மையங்கள் என்ற அளவில் மாநில எழுத்தறிவு விருதுகளை வழங்கினார்.

    இதில் பென்னாகரத்தை அடுத்துள்ள சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கற்போர் மையத்திற்கு விருது வழங்கப்பட்டது.

    அதே போன்று தருமபுரி ஒன்றியம் முக்கல்நாயக்கம்பட்டி கற்போர் மையத்திற்கும், நல்லம்பள்ளி அருகே உள்ள எர்ரன அள்ளி கற்போர் மையத்திற்கும் என தருமபுரி மாவட்டத்தில் மூன்று மையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    இதில் ஒருவராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சரிடம் விருதினை பெற்றுக்கொண்டார்.

    இவ்விழாவில் தன்னார்வலர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள்.

    கல்வித்துறையை சார்ந்த இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

    தர்மபுரி மாவட்டத்தில் விருது பெற்ற மூன்று மையங்களைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் ஆசிரியர் பயிற்றுநர்களை, தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்டக்கல்வி தொடக்கக்கல்வி அலுவலர் மான்விழி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்.

    Next Story
    ×