search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஜை"

    • தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை “தீபலட்சுமி”யாக பரிணமிக்கிறாள்

    தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை "தீபலட்சுமி"யாக பரிணமிக்கிறாள் என்று நமது ஆகமங்கள் கூறுகின்றன.

    அந்த பதினாறு வகை தீபலட்சுமிகள் விவரம் வருமாறு:

    ஆதிலட்சுமி,

    சவுந்தரிய லட்சுமி,

    சவுபாக்கிய லட்சுமி,

    கீர்த்தி லட்சுமி,

    வீர லட்சுமி,

    ஜெயலட்சுமி,

    சந்தான லட்சுமி,

    மேதா லட்சுமி,

    வித்யா லட்சுமி,

    துஷ்டி லட்சுமி,

    புஷ்டி லட்சுமி,

    ஞான லட்சுமி,

    சக்தி லட்சுமி,

    ராஜ்யலட்சுமி,

    தான்யலட்சுமி,

    ஆரோக்கிய லட்சுமி

    ஆகியோராவர்.

    • விடியற்காலை இந்த நேரத்திற்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.
    • குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

    விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்

    குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

    ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது.

    வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது.

    பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது.

    எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவ தற்கோ பயன்படுத்தக்கூடாது.

    அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.

    • ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்.
    • ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் சூரிய சந்திரர்கள் ஒன்று சேருகின்ற அமாவாசையன்றும்,

    நேர் எதிரே சந்திக்கின்ற பவுர்ணமி அன்றும் திருவிளக்கு ஏற்றி அதை மகாலட்சுமியாக எண்ணி

    பூஜை செய்ய வேண்டும்.

    அதனால் ஏற்படும் பலன்களாவன:-

    சித்திரை பவுர்ணமி -அமாவாசை: தான்யம் உண்டாகும்

    வைகாசி பவுர்ணமி-அமாவாசை: செல்வம் உண்டாகும்

    ஆனி பவுர்ணமி-அமாவாசை: திருமணம் நடைபெறும்

    ஆடி பவுர்ணமி-அமாவாசை: ஆயுள் விருத்தி உண்டாகும்

    ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்

    புரட்டாசி பவுர்ணமி-அமாவாசை: பசுக்கள் விருத்தி உண்டாகும்

    ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்

    கார்த்திகை பவுர்ணமி-அமாவாசை: நற்கதி உண்டாகும்

    மார்கழி பவுர்ணமி-அமாவாசை: ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்

    தை பவுர்ணமி-அமாவாசை: வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்

    மாசி பவுர்ணமி-அமாவாசை: துன்பம் அகலும்

    பங்குனி பவுர்ணமி-அமாவாசை: தர்ம சிந்தனையை உண்டு பண்ணும்

    • மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.
    • சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

    நாம் அன்றாடம் காலையும் மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம்.

    தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும்,

    அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியுமா?

    தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால்

    நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

    மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.

    கடன் தொல்லைகள் விலகும்.

    சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

    தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

    • புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • பூமி பூஜைக்கு புகழூர் நகர்மன்ற தலைவரும் புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி 11-வது வார்டு மற்றும் 20-வது வார்டுக்கு உட்பட்ட அலைமகள் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பூமி பூஜைக்கு புகழூர் நகர்மன்ற தலைவரும் புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    பூமி பூஜை விழாவிற்கு நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். பூமி பூஜை விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள் நந்தினி ராஜேஸ் , சுரேஷ் , வார்டு செயலாளர் விஜயகாந்த் ,நகர துணை செயலாளர் இம்ரான்கான் ,11-வது வார்டு அவைத் தலைவர் மணிவேல் , கட்சி நிர்வாகிகள் மனோகரன் , கலைச்செல்வி, நகராட்சி நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை சிவன் கோவில்களில் சிவனுக்கு அன்னாபிஷேக் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் சிவனை தரிசித்தனர்

    கந்தர்வகோட்டை,

    ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேகம் நாளில் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்பட்டு வணங்கப்படும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் பௌர்ணமி சாமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு சிவபெருமானை தரிசித்தனர். 

    • ஐப்பசி மாதம் சுக்கில பட்ச அமாவாசை நாளில் கேதார கவுரி விரதம் வரும்.
    • ஸ்ரீ பரமேஸ்வரன் தம்முடைய ரிஷப வாகனத்திலே எழுந்தருளி காட்சி கொடுப்பார்.

    ஐப்பசி மாதம் சுக்கில பட்ச அமாவாசை நாளில் கேதார கவுரி விரதம் வரும்.

    அதற்கு முன் தொடங்கி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.

    இயலாதவர்கள் விரத தினம் ஒருநாள் மட்டும் உபவாசத்துடன் பூஜை செய்யலாம்.

    கணவனும், மனைவியும் குடும்பத்தில் கருத்தொருமித்து செயல்பட்டு இன்பமாக வாழ வேண்டும் என்பதே இவ்விரதத்தின் உட்கருத்து.

    வழிபாட்டுக்குப் பிறகு 21 நூல்கள் சேர்ந்த 21 முடியுள்ள பட்டு அல்லது நூல் சரட்டை மஞ்சளில் நனைத்துக் கையில் அணிந்து கொள்ள வேண்டும்.

    இருபத்தோரு இழைகளிலே கயிறு முறுக்கி நாளுக்கு ஒரு முடியாக,

    இருபத்தோரு நாட்களும் ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து நோன்பு நோற்றால்

    ஸ்ரீ பரமேஸ்வரன் தம்முடைய ரிஷப வாகனத்திலே எழுந்தருளி காட்சி கொடுப்பார்.

    அவரவர் விரும்பிய வரத்தையும் தந்தருள்வார் என்று கவுதம முனிவர் கூறியுள்ளார்.

    இவ்விரதத்தை இடைவிடாமல் 21 முறைகள் பக்தியுடன் அனுஷ்டித்து வந்தால் சகல பாவமும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

    தன தானிய சம்பத்தும், பால் பாக்கியமும், குழந்தை பாக்கியமும் இவ்விரதத்தால் உண்டாகும்.

    கணவன் மனைவி மன ஒற்றுமையும், அந்நியோன்யமும் உண்டாகும்.

    • சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.
    • ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.

    சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.

    அவை மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவை ஆகும்.

    அதில் சிவராத்திரி தினங்களில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

    அன்றைய தினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

    ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.

    அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும்.

    முக்தி கிடைக்கும்.

    சிவராத்திரியில் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகைகள் உண்டு.

    மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி வரும்.

    அன்றைய தினத்தில் உபவாசமிருந்து அவரவர்களுக்கு உகந்ததைப் பாராயணம் செய்தால் ஈசன் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

    • ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
    • வந்து பார்த்தபோது, அந்த அம்மாள் இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடக்கிறது.

    ஒரு சமயம் லட்சுமி தேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வீடு, வீடாக சென்றாள்.

    ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

    இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது.

    மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

    நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டு இருந்தாள்.

    வாசலில் நின்ற லட்சுமியைப் பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள்.

    மனையைப் போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

    வந்து பார்த்தபோது, அந்த அம்மாள் இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடக்கிறது.

    அதாவது லட்சுமி தேவி எங்கும், எப்பொழுதும் வேண்டுமானாலும் வருவாள்.

    வரலட்சுமி பூஜை செய்ய முடியாதவர்கள் மனம் உருகி வெள்ளிக்கிழமை பூஜை, வைபவ லட்சுமி பூஜை,

    குபேர லட்சுமி பூஜை என்று செய்து லட்சுமியை என்றும் அழைக்கலாம்.

    • பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.
    • வம்ச விருத்தி ஏற்படும்.

    லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும் அவை வருமாறு:

    1. உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்.

    2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.

    3. பகை அழிந்து அமைதி உண்டாகும்.

    4. கல்வி ஞானம் பெருகும்.

    5. பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.

    6. நிலைத்த செல்வம் அமையும்.

    7. வறுமை நிலை மாறும்.

    8. மகான்களின் ஆசி கிடைக்கும்.

    9. தானிய விருத்தி ஏற்படும்.

    10. வாக்கு சாதுரியம் உண்டாகும்.

    11. வம்ச விருத்தி ஏற்படும்.

    12. உயர் பதவி கிடைக்கும்.

    13. வாகன வசதிகள் அமையும்.

    14. ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்.

    15. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

    • வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கை கூடும்.
    • எட்டுவித செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரட்சுமி வழங்குகிறாள்.

    1. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ,

    அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

    2. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

    3. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    4. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கை கூடும்.

    5. எட்டுவித செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள்.

    இதனால் தான் மணமான பெண்கள் இத்தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

    6.  காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை கோலமிட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

    கலசத்தில் லட்சுமியை ஆவாகனம் செய்து நிவேதனங்கள் படைத்து வழிபட வேண்டும்.

    7. மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும்.

    சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக் கூடாது.

    8. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

    9. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    10. இது ஒரு மங்களகரமான விரதம், மனதிற்கு நிம்மதி தரும் விரதம். இம்மையும் மறுமையும் தரும் இனிய விரதமாகும்.

    • ஸ்ரீ லட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம்.
    • நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும்.

    வரலட்சுமி விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து

    சகல சவுபாக்கியங்களையும் பெற்றனர்.

    ஸ்ரீ லட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம்.

    அருகம் புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் "நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்" என்பது சான்றோர் வாக்கு!

    கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும்.

    கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும்.

    மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.

    அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.

    நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

    பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும்.

    உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகுதான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும்.

    அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

    இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.

    அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்!

    அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம்.

    இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும்.

    நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும்.

    வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

    ×