search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summit"

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    வாஷிங்டன்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா - தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார்.

    இந்நிலையில். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. நானும் இதற்காக மிகுந்த முன்னேற்பாட்டுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் - கிம் சந்திப்புக்காக உலகம் முழுவதிலும் இருந்து 2,500 பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    வாஷிங்டன்:

    வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

    திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

    இதையடுத்து, அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. 12-ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



    இதற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள ஷாங்ரி-லா ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என சிங்கப்பூர் அரசின் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இந்த சந்திப்புக்கு உறுதுணையாக உள்ள சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என டிரம்ப் கூறியுள்ளார். #DonaldTrump #KimJongUn #June12
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து டிரம்ப் நேற்று கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை உறுதி செய்தார். இதுபற்றி நிருபர்களிடம் டிரம்ப் கூறுகையில், “ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது. சந்திப்புக்கான அனைத்தும் நன்றாகவே நடக்கிறது. இந்த சந்திப்பில் என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று குறிப்பிட்டார்.    #DonaldTrump #KimJongUn #June12
    அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. #trumpkimsummit
    பீஜிங்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ம் தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில், டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என நம்புவதாகவும், இதற்காக ஆவலாக காத்திருப்பதாகவும் சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #trumpkimsummit
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என தென்கொரியா அதிபர் மூன் ஜே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #trumpkimsummit
    சியோல்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம்12-ந்தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “உங்களை சிங்கப்பூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் உங்களது சமீபத்திய அறிக்கையில் கடும் கோபமும், வெளிப்படையான விரோத போக்கும் வெளிப்பட்டு இருப்பதால் தற்போதைய சந்திப்பு பொருத்தமானதாக இருக்காது” என்று குறிப்பிட்டார்.

    அமெரிக்காவின் வேண்டுகோளைத் தொடர்ந்து தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை வடகொரியா முற்றிலுமாக தகர்த்த நிலையில் டிரம்ப் இவ்வாறு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எனினும், கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள விரும்பவில்லை. “உங்களிடம் எப்போதும், எந்த வடிவத்திலும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தயாராக இருக்கிறது” என்று கூறி கிம் ஜாங் அன் ஒருபடி கீழே இறங்கி வந்தார்.

    அவருடைய வேண்டுகோளைத் தொடர்ந்து தென்கொரியா டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பை நடத்துவதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டது. தென்கொரிய அதிபர் மூன் ஜே உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார்.

    இதையடுத்து, அமெரிக்க மற்றும் வடகொரிய நாடுகளின் உயர்மட்ட தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திட்டமிட்டப்படி சந்திப்பை நடத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்தநிலையில் .அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ந்தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    டிரம்ப் தனது டுவிட்டர் பதிவை வெளியிடும் முன்பாக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சூழல் மீண்டும் உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் நேற்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது.




















    கடந்த முறை சந்தித்து பேசிய எல்லைப்பகுதி கிராமமான பன்முன்ஜோம் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகவும், இதுதொடர்பாக விரிவான அதிகாரப்பூர்வ தகவல் அரசு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகலாம் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன

    எனவே, டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந்தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #trumpkimsummit
    தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார். #DonaldTrump #SouthKoreaPresident #MoonJae
    சியோல்:

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதற்கு இடையே தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை ஒரு முறையும், சீன அதிபர் ஜின்பிங்கை இரு முறையும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்து பேசினார். டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் இணக்கமான கருத்துக்களையே வெளியிட்டு வந்தார்.

    ஆனால் திடீரென வடகொரியாவின் போக்கில் மாறுதல் தென்படுகிறது. ஒருதலைப்பட்சமாக தன்னை அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா நிர்ப்பந்திப்பதாக வடகொரியா கருதுகிறது. அது மட்டுமின்றி டிரம்புடனான பேச்சு வார்த்தையை ரத்து செய்யவும் தயங்கப்போவது இல்லை என்கிற ரீதியில் அந்த நாடு கருத்து தெரிவித்தது.

    டிரம்பும் தன் பங்குக்கு, “கிம் ஜாங் அன் அணு ஆயுதங்களை கைவிட்டால், அவர் ஆட்சி அதிகாரத்தில் தொடர்வார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் அதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளாவிடில் வடகொரியா அழிவை சந்திக்க வேண்டியது வரும்” என்றார்.

    இந்த நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது அவர் சிங்கப்பூரில் நடக்க உள்ள பேச்சு வார்த்தையை ரத்து செய்யப்போவதாக வடகொரியா விடுத்த மிரட்டல் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார். இது பற்றி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், “சமீப காலமாக வடகொரியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி டிரம்பும், மூன் ஜே இன்னும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்” என கூறப்பட்டு உள்ளது.  #DonaldTrump #SouthKoreaPresident #MoonJae
    அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #KimJongUn #Trump #Summit
    பியாங்யாங்:

    பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படவில்லை.



    இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் என தெரிவித்தார். #KimJongUn #Trump #Summit
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #Trump #Summit
    வாஷிங்டன்: 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும் பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாக கிம் ஜாங் அன் கூறினார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஜூன் மாத மத்தியில் சந்தித்து பேசுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது கூறப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று மட்டும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கிம் உடனான சந்திப்புகான நேரம் மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதுகுறித்த அறிவிப்பை இன்னும் 3 நாளில் வெளியிடுவேன் என தெரிவித்தார். #KimJongUn #Trump #Summit
    ×