search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speaks"

    • மாநில வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் முதலமைச்சர் முழு கவனம் செலுத்தி வருகின்றார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கபீர் வரவேற்றார். சங்கர்ராம் தொகுத்து வழங்கினார்.

    இதில் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மாணவ- மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறார். இன்று தென்காசி மாவட்டத்தில் 15, 157 பேர் மாணவ மாணவிகளுக்கு ரூ. 7 கோடி 69 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி ெதாடங்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் வீட்டு சுமை உள்ளிட்ட எந்தவித கவலைகளும் இல்லாமல் படிப்பில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தக்கூடிய வயதாகும். உங்களின் ஒரே முயற்சி படிப்பில் தனி கவனம் செலுத்தி 12-ம் வகுப்பு தேர்வில் நன்றாக மதிப்பெண்கள் எடுத்து வெளியே செல்ல வேண்டும். தற்போது மாணவ மாணவிகளின் மருத்துவக் கனவு என்பதை மத்திய அரசு நீட் தேர்வு மூலம் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்காத வகையில் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழக முதல்வர் நீட் என்பதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றார்.


    இன்னும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் முதலமைச்சர் முழு கவனம் செலுத்தி வருகின்றார். எனவே மாணவ, மாணவிகள் தற்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நீட் தேர்வு உள்ளதால் பிளஸ்-2 படிக்கும் பொழுதே நீட்டிற்கான பயிற்சியும் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நீட் முழுமையாக தமிழ்நாட்டில் விலக்கு அளிக்கப்படும் நிலையில் பிளஸ் -2 தேர்வில் நன்றாக மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகள் எளிதாக மருத்துவப் படிப்புக்கு செல்லும் சூழ்நிலை உருவாகும்.

    மேலும் படித்த மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்பினை பெருக்கும் வகையில் முதலமைச்சர் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து தமிழகத்தில் இன்று பல்வேறு தொழிற்சாலைகள் வர உள்ளன. மாணவர்கள் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து வேலைவாய்ப்பை எளிதாக பெரும் வகையில் தற்போதைய அரசு செயல்பட்டு வருகின்றது. எனவே மாணவ- மாணவிகள் படிப்பு ஒன்றே குறிக்கோளாக கொண்டு படிப்பில் சாதனை செய்ய வேண்டும் என்றார்.


    இதில் ஒன்றிய செய லாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, பூசை பாண்டியன், சங்கரன்கோவில் யூனியன் துணைத் தலைவர் செல்வி, சங்கரன்கோவில் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார், மாவட்ட மகளிர்அணி அமைப்பாளர் முத்துச்செல்வி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, நகர நிர்வாகிகள் மாரிச்சாமி, பிரகாஷ், குவளைகண்ணி பஞ்சாயத்து தலைவர் தினேஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன், சங்கரன்கோவில் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் நன்றி கூறினார்.


    • சாத்தான்குளத்தில் அகில இந்திய சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது.
    • பா. ஜனதா கட்சியினர் சொந்த முயற்சியில் கட்சி வளர்க்க வேண்டும் அதை விட்டுவிட்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகளை உடைத்து அவர்கள் வளர முடியாமல் போவதற்கு வழி செய்கிறது

    சாத்தான்குளம்,ஆக.10-

    சாத்தான்குளத்தில் அகில இந்திய சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. இங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து புறப்பட்ட பாதையாத்திரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாத யாத்திரையில் மாநில, மாவட்ட நகர கிளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும், திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.

    மெயின் பஜார் வழியாக சென்ற பாதை யாத்திரையில் அனைவரும் கையில் தேசிய கொடியை ஏந்தி சென்றனர். நிறைவில் புதிய பஸ் நிலைய அருகே பாதயாத்திரை வந்தடைந்தது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேசினார்கள். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பேசும்போது, கள்ளக்குறிச்சி மாணவி சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.

    ராகுல் காந்தி எங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இப்பொழுது வழி நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி சொந்தக் காலில் நிற்க வலுவில்லாமல் உள்ளது. பா. ஜனதா கட்சியினர் சொந்த முயற்சியில் கட்சி வளர்க்க வேண்டும் அதை விட்டுவிட்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகளை உடைத்து அவர்கள் வளர முடியாமல் போவதற்கு வழி செய்கிறது என்று கூறினார்.

    இந்த பாதயாத்திரையில் சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, நகர தலைவர் வேணுகோபால், பனை நல வாரிய உறுப்பினர் எடிசன், பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சீலன் துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, நாராயணன், கதிர்வேல் உள்பட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளான பேர்கள் கலந்து கொண்டனர்.

    மாநிலங்களவையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி ஆகிய 10 மொழிகளில் சில வார்த்தைகளை வெங்கையா நாயுடு பேசினார். #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று மாநிலங்களவையில் அதன் தலைவர் வெங்கையா நாயுடு 10 மொழிகளில் பேசினார். 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில், தமிழ் உள்பட 17 மொழிகளில் மட்டுமே ஒரே நேரத்தில் மொழி பெயர்க்கும் வசதி, முன்பு இருந்தது. அதாவது, இந்த மொழிகளில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பலாம்.

    தற்போது, கூடுதலாக 5 மொழிகளில் மொழி பெயர்ப்பு வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதை மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு அறிவித்தார். அப்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி ஆகிய 10 மொழிகளில் சில வார்த்தைகள் பேசினார். இருப்பினும், மொழி பெயர்ப்பு வசதியைப் பெற உறுப்பினர்கள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

    இதற்கு வரவேற்பு தெரிவித்த உறுப்பினர் சுப்பிரமணிய சாமி, சமஸ்கிருத வார்த்தைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
    தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார். #DonaldTrump #SouthKoreaPresident #MoonJae
    சியோல்:

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதற்கு இடையே தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை ஒரு முறையும், சீன அதிபர் ஜின்பிங்கை இரு முறையும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்து பேசினார். டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் இணக்கமான கருத்துக்களையே வெளியிட்டு வந்தார்.

    ஆனால் திடீரென வடகொரியாவின் போக்கில் மாறுதல் தென்படுகிறது. ஒருதலைப்பட்சமாக தன்னை அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா நிர்ப்பந்திப்பதாக வடகொரியா கருதுகிறது. அது மட்டுமின்றி டிரம்புடனான பேச்சு வார்த்தையை ரத்து செய்யவும் தயங்கப்போவது இல்லை என்கிற ரீதியில் அந்த நாடு கருத்து தெரிவித்தது.

    டிரம்பும் தன் பங்குக்கு, “கிம் ஜாங் அன் அணு ஆயுதங்களை கைவிட்டால், அவர் ஆட்சி அதிகாரத்தில் தொடர்வார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் அதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளாவிடில் வடகொரியா அழிவை சந்திக்க வேண்டியது வரும்” என்றார்.

    இந்த நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது அவர் சிங்கப்பூரில் நடக்க உள்ள பேச்சு வார்த்தையை ரத்து செய்யப்போவதாக வடகொரியா விடுத்த மிரட்டல் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார். இது பற்றி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், “சமீப காலமாக வடகொரியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி டிரம்பும், மூன் ஜே இன்னும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்” என கூறப்பட்டு உள்ளது.  #DonaldTrump #SouthKoreaPresident #MoonJae
    ×