search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் - டிரம்ப்
    X

    வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் - டிரம்ப்

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    வாஷிங்டன்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா - தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார்.

    இந்நிலையில். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. நானும் இதற்காக மிகுந்த முன்னேற்பாட்டுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் - கிம் சந்திப்புக்காக உலகம் முழுவதிலும் இருந்து 2,500 பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    Next Story
    ×