search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sulur"

    • ரோட்டோரம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனை பார்த்த அவர் அதனை எடுத்து குடித்தார்.
    • திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.

    கோவை,

    கோவை கிணத்துகடவை சேர்ந்தவர் வசந்தி (வயது 36). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது சித்தி மஞ்சுளா (48) என்பவருடன் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பஸ் நிலையத்தில் விளம்பர நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது மஞ்சுளாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் கிடைக்குமா என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். அங்கு ரோட்டோரம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனை பார்த்த அவர் அதனை எடுத்து குடித்தார்.

    பின்னர் தனது வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.

    அவர் மஞ்சுளாவை அழைத்து கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் குடித்த நீரில் விஷத்தன்மை இருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அன்னூரை சேர்ந்தவர் நித்தியானந்தம் (30). டிரைவர். இவரது மனைவி கோகிலா (28). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

    நித்தியானந்தத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கோகிலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்கு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

    அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு மறுத்தார். இதனால் நித்தியானந்தம் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுல்தான்பேட்டையில் தொடர்ச்சியாக ஆறு கடைகளில் திருட்டு நடைபெற்றுள்ளது.
    • கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சூலூர்,

    கோவை மாவட்டம் சூலூர் மார்க்கெட் ரோடு பகுதியில் கடந்த 18-ந் தேதி இரவு 2 கடைகளை உடைத்து திருட்டு நடைபெற்றது.

    இதேபோல் சுல்தான்பேட்டையில் தொடர்ச்சியாக ஆறு கடைகளில் திருட்டு நடைபெற்றுள்ளது.

    அதேபோல் 17-ந் தேதி இரவு சூலூர் கலங்கல் ரோடு பகுதியில் தொடர்ச்சியாக 6 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றது. கடந்த 7 நாட்களுக்கு முன்பாக மேலும் 2 கடைகளில் திருட்டு நடைபெற்று இருந்தது. இந்த கடைகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமாக கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து சூலூர் சுன்தான் பேட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதற்கி டையே கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படையினர் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    இதுதவிர சூலூர் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.இது சம்பந்தமாக வியாபாரிகள் கூறுகையில், மளிகை கடை நடத்துபவர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் வைத்திருப்போர் தினமும் தங்களது கடைகளில் திருட்டு நடந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம்.

    இது சம்பந்தமாக வியாபாரிகள் பேரவையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கடைகளின் பாதுகாப்புக்கு மற்றும் வியாபாரிகளின் பொருள்களின் பாதுகாப்புக்கும் தனியாக பாதுகாவலர்களை நியமிப்பது என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    • வாலிபர்கள் 2 பேரும் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.
    • 2 திருநங்கைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சூலூர்

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர்கள் யமுனா(வயது24), சைலஜா(22). இவர்கள் 2 பேரும் திருநங்கைகள்.

    நேற்று இரவு யமுனாவும், சைலாஜாவும் கோவை சிந்தாமணிபுதூர் புறவழிச்சாலையில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருநங்கைகள் அருகில் சென்று பேசினர். திடீரென வாலிபர்கள் 2 பேரும் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருநங்கைகளை குத்தினர்.

    இதில் 2 திருநங்கைகளுக்கும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர்.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 2 திருநங்கைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பண வரவு செலவு மற்றும் சேமிப்புகளை மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
    • இந்த கடன் மேளாவில் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சூலூர்

    சூலூர் அருகே சிந்தாமணி புதூரில் ஒட்டர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பண வரவு செலவு மற்றும் சேமிப்புகளை மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.


    நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பேச்சிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கடன் மேளாவில் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


    இந்த மேளாவில் 8 நபர்களுக்கு பயிர் கடனாக 8 லட்சம் ரூபாய்க்கும், மகளிர் குழு கடனாக 12 குழுக்களுக்கு ரூபாய் 15 லட்சத்துக்கும், மாற்றுத்திறனாளி கடன் தொகையாக இரண்டு நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான கடன் மனுக்கள் பெறப்பட்டன. சங்கத்தின் செயலர் சகாய பவுலின் மேரி நன்றி கூறினார்.

    • சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.
    • தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை :

    கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கோபு (வயது 61). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி.

    கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது கோபு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வலையல் உள்பட 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அன்போணி (வயது 65). ஓய்வு பெற்ற ஹெல்த் சூப்பர்வைசர். கடந்த 3-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கம்மல் உள்பட 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அன்போணி காரமடை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    • கார்த்திகேயன் வேலை முடிந்து சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.
    • ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயனை தாக்கினர்.

    கோவை:

    கோவை சின்னியம்பாளையம் அடுத்துள்ள வெங்கிட்டா–புரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது30).

    இவர் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேக்கிரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

    சம்பத்தன்று கார்த்திகேயன் வேலை முடிந்து சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார். வெங்கிட்டாபுரம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கார்த்திகேயனை வழிமறித்து பணத்தை கேட்டு மிரட்டினர்.

    ஆனால், அவர் பணம் தரமறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கார்த்திகேயனை தாக்கினர். இதில் காயம் அடைந்த கார்த்திகேயன் சத்தம் போட்டார்.

    இதைகேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது 3 பேரில் ஒருவர் கார்த்திகேயனிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் டீ மாஸ்டரை தாக்கியது, ஒண்டிப்புதூர் சூர்யா நகரைச்சேர்ந்த மகேஷ்குமார், புலியகுளம் அம்மன்குளத்தை சேர்ந்த தினேஷ்குமார்(23), மற்றும் தப்பியோடிவர் நிசாத் என்பது தெரியவந்தது.

    இதில் மகேஷ்குமார் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் கைதான மகேஷ்குமார் மற்றும் தினேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய நிசாத்தை போலீசார் தேடி வருகிறார்கள். வங்கி மேலாளரே வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
    • முதியவர்களை குறி வைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

    சூலூர்,

    சூலூர் பள்ளபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த சரோஜினி (வயது 82) கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

    அவரது வாய், கை, கால்களை பார்சல் கட்டும் டேப்பால் ஒட்டி கொலை செய்த கும்பல் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையில் ஈடுபட்டது குமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த வசந்த் (வயது 19), அபினேஷ் (23) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. பெங்களூருவில் பதுங்கியிருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் அவர்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இன்று காலை கைதானவர்களை போலீசார் சரோஜினியின் வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது கொலை செய்ததை அவர்கள் நடித்துக் காட்டினர். கைதான 3 பேரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக முதியவர்களை குறி வைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. குமரி மாவட்டத்தில் இதேபோல பல முதியவர்களை அவர்கள் கட்டிப்போட்டு கொள்ளையடித்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு ஜாலியாக வாழ்ந்துள்ளனர். கைதான அபினேசின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அபினேஷ் ஏற்கனவே செயின் பறிப்பு மற்றும் வாகனத்திற்கு வழக்கில் சம்பந்தப்பட்டு மூன்று மாதம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர். இந்த விவரங்கள் தெரிந்தும் கூட மருத்துவ மாணவி ஒருவர் இவரை தீவிரமாக காதலித்து உள்ளார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வசந்த் என்பவருடைய பெற்றோர் கூலி வேலைக்கு செல்கின்றனர். 17 வயது சிறுவனின் தாய் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். தந்தை ஓட்டுனராக பணிபுரிகிறார் என தெரிவித்தனர்.

    • சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக சென்றனர்.
    • பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர்.

    சூலூர்,

    சூலூர் போலீஸ் நிலைய போலீசார் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சூலூர் போலீஸ் நிலையத்திலிருந்து கலங்கல் சாலை வரை நடத்தினர்.

    இந்த பேரணியை சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் தலைமை தாங்கினார். சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக சென்றனர். இதன்மூலம் பொதுமக்களிடையே போதை பொருள் குறித்தான விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்படும் என தெரிவித்தனர்.

    போலீசார் திடீரென ஊர்வலமாக வருவதை பார்த்த பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர். 

    • கரும்புகையின் காரணமாக கண் எரிச்சல் மற்றும் மூச்சு அடைப்பு ஏற்பட்டது.
    • கழிவுத்துணிகளை கயிறு தயாரிப்பதற்காக குவித்துள்ளனர்.

    சூலூர்:

    சூலூர் முத்து கவுண்டன்புதூர் அருகே தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தினர் கழிவுத்துணிகளை கயிறு தயாரிப்பதற்காக குவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் துணி குவியல்கள் பற்றி எரிந்தன. துணி பாலிஸ்டர் வகையைச் சேர்ந்தது என்பதால் அப்பகுதி இருந்து கருமையான புகை வெளியேறியது. வெளியேறிய புகை அருகில் உள்ள குரும்பபாளையம், செங்கோட கவுண்டன் புதூர், அரசூர் ஆகிய பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியினர் மூச்சு திணறல் எடுத்ததால் உடனடியாக சூலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கரும்புகையின் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.  

    • மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற அவர்கள் 3 பேரும் சரோஜினி வீட்டில் கொள்ளையடித்தனர்.
    • பெங்களூரில் பதுங்கிய 3 பேரில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜினி (வயது82). சம்பவத்தன்று இவர் வீட்டிற்குள் பிளாஸ்திரியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். .

    அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. அவரை யாரோ கொலை செய்து விட்டு நகையை திருடி சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மூதாட்டியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொலையாளிகள் உருவம் பதிந்துள்ளதா என முதற்கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பல்வேறு கட்ட சோதனைக்கு பின் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் முக்கிய தடயம் சிக்கியது. மூதாட்டியின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கொலையாளி தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    அப்போது சரோஜினி தனியாக இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதனால் சரோஜினியை கொன்று விட்டு அவரிடம் இருக்கும் நகைகளை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர்கள் 2 பேரின் உதவியை நாடியிருக்கிறார்.

    சம்பவத்தன்று 3 பேரும் மூதாட்டியின் வீட்டுக்கு சென்று உள்ளனர். ஏற்கனவே அந்த பகுதியில் கொலையாளி நடமாடியவர் என்பதால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் வரவில்லை.

    மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற அவர்கள் 3 பேரும் சரோஜினி வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அவர் சத்தம் போடவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் சரோஜினியின் வாய், கை, கால்களை பார்சல் ஒட்டும் டேப்பால் ஒட்டி உள்ளனர். பின்னர் அவரை கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

    சூலூரில் இருந்து தப்பிச் சென்ற 3 பேரும் நேராக கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். சில நாட்கள் அங்கு இருந்து விட்டு பெங்களூர் சென்றுள்ளனர். இதையறிந்த தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்தனர். பெங்களூரில் 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார்.

    பிடிபட்ட 2 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    • மர்ம நபர்கள் கொலை செய்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
    • சரோஜினியின் வீட்டில் கோரைப்பாய் வியாபாரிகள் சிலர் வாடகைக்கு இருந்துள்ளனர். அவர்கள் சரோஜினி கொலையுண்ட பிறகு தலைமறைவாகி உள்ளனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே பள்ள பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி (வயது 82). கடந்த 4-ந் தேதி இவரை மர்ம நபர்கள் கொலை செய்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    சரோஜினியின் வாய், கை, கால்களை பேக்கிங் டேப்பால் ஒட்டி கொள்ளையர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு ள்ளனர். சரோஜினியை கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சரோஜினியின் வீட்டில் கோரைப்பாய் வியாபாரிகள் சிலர் வாடகைக்கு இருந்துள்ளனர். அவர்கள் சரோஜினி கொலையுண்ட பிறகு தலைமறைவாகி உள்ளனர். இதனால் போலீசார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

    இதற்காக அவர்களது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்று போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். கொலை செய்யப்பட்ட பகுதிக்கு அருகில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லா ததால் கொலையாளியை அடையாளம் காண போலீசார் மிகவும் சிரமமான சூழ்நிலையில் திணறி வருகின்றனர். இதில் பழைய குற்றவாளிகள் யாரேனும் உள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.

    சரோஜினி கொல்லப்பட்ட அதே நாளில் கோவை ஆர்.எஸ். புரத்தில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த மர்ம நபர், முதியவரை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். முதியவரை கட்டிப் போட்ட நபரும் பேக்கிங் டேப் பயன்படுத்தி இருந்தார். முதியவரின் வாயை டேப் கொண்டு கட்டியிருந்தனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை கண்ணம்பாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியை இரு மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியின் வாயை பொத்தி கட்டி போட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த மூதாட்டி தைரியமாக திருடர்களை எட்டி உதைத்ததில் ஒரு திருடன் கீழே விழுந்தவுடன் பயந்து போய் இருவரும் அப்பகுதியை விட்டு தப்பி ஓடி விட்டனர். மூதாட்டியிடம் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் இந்த சம்பவம் பற்றி புகார் தரப்படவில்லை.

    இதனால் முதியவர்களை குறி வைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் கோவையில் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. சரோஜினி கொலை உள்ளிட்ட அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பலைச் சேர்ந்த வர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    இந்த கும்பலுடன் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முதியவர்களை அந்த பெண் முதலில் சந்தித்து பேசுவது, அதன்பிறகு மற்ற நபர்கள் புகுந்து தங்கள் திட்டத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. இதுதொடர்பாகவும் போலீ சார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 

    • புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    சூலூர்

    சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் கார்த்திக் குமார் உள்ளிட்டோர் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ரமேஷ்(38) என்பவரின் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×