search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lady death"

    • ராஜபாளையம் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி நீராசிலிங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது54). சம்பவத்தன்று அருந்ததியர் காலனி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றபோது சீதாலட்சுமியை பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரோட்டோரம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனை பார்த்த அவர் அதனை எடுத்து குடித்தார்.
    • திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.

    கோவை,

    கோவை கிணத்துகடவை சேர்ந்தவர் வசந்தி (வயது 36). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது சித்தி மஞ்சுளா (48) என்பவருடன் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பஸ் நிலையத்தில் விளம்பர நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது மஞ்சுளாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் கிடைக்குமா என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். அங்கு ரோட்டோரம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனை பார்த்த அவர் அதனை எடுத்து குடித்தார்.

    பின்னர் தனது வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.

    அவர் மஞ்சுளாவை அழைத்து கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் குடித்த நீரில் விஷத்தன்மை இருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அன்னூரை சேர்ந்தவர் நித்தியானந்தம் (30). டிரைவர். இவரது மனைவி கோகிலா (28). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

    நித்தியானந்தத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கோகிலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்கு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

    அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு மறுத்தார். இதனால் நித்தியானந்தம் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி மாரித்தாய் (வயது 28).இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர்.

    நெல்லை

    செங்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி மாரித்தாய் (வயது 28).இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஒரு வருடமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இதனால் மாரித்தாய் நெல்லை தச்சநல்லூரை அடுத்த அழகனேரியில் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த 24-ந்தேதி தச்சநல்லூருக்கு வந்த செல்வகுமார் தனது மனைவியிடம் குழந்தைகளை தன்னிடம் கொடுத்து விடும்படி கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியதால் மாரித்தாயை செல்வகுமார் அடித்து கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாரித்தாய் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து தச்சநல்லூர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×