என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Youth arrested in murder of old woman"
- வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
- முதியவர்களை குறி வைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
சூலூர்,
சூலூர் பள்ளபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த சரோஜினி (வயது 82) கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
அவரது வாய், கை, கால்களை பார்சல் கட்டும் டேப்பால் ஒட்டி கொலை செய்த கும்பல் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையில் ஈடுபட்டது குமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த வசந்த் (வயது 19), அபினேஷ் (23) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. பெங்களூருவில் பதுங்கியிருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் அவர்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை கைதானவர்களை போலீசார் சரோஜினியின் வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது கொலை செய்ததை அவர்கள் நடித்துக் காட்டினர். கைதான 3 பேரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக முதியவர்களை குறி வைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. குமரி மாவட்டத்தில் இதேபோல பல முதியவர்களை அவர்கள் கட்டிப்போட்டு கொள்ளையடித்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு ஜாலியாக வாழ்ந்துள்ளனர். கைதான அபினேசின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அபினேஷ் ஏற்கனவே செயின் பறிப்பு மற்றும் வாகனத்திற்கு வழக்கில் சம்பந்தப்பட்டு மூன்று மாதம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர். இந்த விவரங்கள் தெரிந்தும் கூட மருத்துவ மாணவி ஒருவர் இவரை தீவிரமாக காதலித்து உள்ளார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வசந்த் என்பவருடைய பெற்றோர் கூலி வேலைக்கு செல்கின்றனர். 17 வயது சிறுவனின் தாய் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். தந்தை ஓட்டுனராக பணிபுரிகிறார் என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்