search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-narcotics awareness"

    • சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக சென்றனர்.
    • பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர்.

    சூலூர்,

    சூலூர் போலீஸ் நிலைய போலீசார் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சூலூர் போலீஸ் நிலையத்திலிருந்து கலங்கல் சாலை வரை நடத்தினர்.

    இந்த பேரணியை சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் தலைமை தாங்கினார். சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக சென்றனர். இதன்மூலம் பொதுமக்களிடையே போதை பொருள் குறித்தான விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்படும் என தெரிவித்தனர்.

    போலீசார் திடீரென ஊர்வலமாக வருவதை பார்த்த பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர். 

    ×