search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூலூரில்"

    • சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • நாராயணசாமி நாயுடுவின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    சூலூர்,

    கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சூலூரில் நடந்தது. தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    பொருளாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் சண்முகம் பேசியதாவது:-

    டிசம்பர் 21-ல் விவசாயிகளின் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தன்று வழக்கமாக சூலூரில் இருந்து வையம்பாளையம் வரை ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    ஆனால் மாநில அரசு தற்போது இலவச மின்சாரத்துக்கு ஆதார் விவரங்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    அதோடு மட்டுமல்லாமல் அன்னூர், வாரப்பட்டி, தத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்கிறது. இது முற்றிலும் விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இதனை கட்சி சார்பற்ற விவசாய சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

    விவசாயிகள் சஙகம் தொழில் வளர்ச்சியை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் விவசாய நிலங்களை அழிப்பதை எதிர்க்கிறது. பாமாயிலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் வெளிநாட்டு விவசாயிகள் பலன் அடைந்து வரு கின்றனர்.

    அதற்கு பதிலாக உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக தேங்காய் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    தென்னை வாரியத்தை உடனடியாக மாநில அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாராயணசாமி நாயுடு நினைவு தினமான டிசம்பர் 21-ந் தேதி சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • மர்ம நபர்கள் கொலை செய்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
    • சரோஜினியின் வீட்டில் கோரைப்பாய் வியாபாரிகள் சிலர் வாடகைக்கு இருந்துள்ளனர். அவர்கள் சரோஜினி கொலையுண்ட பிறகு தலைமறைவாகி உள்ளனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே பள்ள பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி (வயது 82). கடந்த 4-ந் தேதி இவரை மர்ம நபர்கள் கொலை செய்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    சரோஜினியின் வாய், கை, கால்களை பேக்கிங் டேப்பால் ஒட்டி கொள்ளையர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு ள்ளனர். சரோஜினியை கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சரோஜினியின் வீட்டில் கோரைப்பாய் வியாபாரிகள் சிலர் வாடகைக்கு இருந்துள்ளனர். அவர்கள் சரோஜினி கொலையுண்ட பிறகு தலைமறைவாகி உள்ளனர். இதனால் போலீசார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

    இதற்காக அவர்களது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்று போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். கொலை செய்யப்பட்ட பகுதிக்கு அருகில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லா ததால் கொலையாளியை அடையாளம் காண போலீசார் மிகவும் சிரமமான சூழ்நிலையில் திணறி வருகின்றனர். இதில் பழைய குற்றவாளிகள் யாரேனும் உள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.

    சரோஜினி கொல்லப்பட்ட அதே நாளில் கோவை ஆர்.எஸ். புரத்தில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த மர்ம நபர், முதியவரை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். முதியவரை கட்டிப் போட்ட நபரும் பேக்கிங் டேப் பயன்படுத்தி இருந்தார். முதியவரின் வாயை டேப் கொண்டு கட்டியிருந்தனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை கண்ணம்பாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியை இரு மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியின் வாயை பொத்தி கட்டி போட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த மூதாட்டி தைரியமாக திருடர்களை எட்டி உதைத்ததில் ஒரு திருடன் கீழே விழுந்தவுடன் பயந்து போய் இருவரும் அப்பகுதியை விட்டு தப்பி ஓடி விட்டனர். மூதாட்டியிடம் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் இந்த சம்பவம் பற்றி புகார் தரப்படவில்லை.

    இதனால் முதியவர்களை குறி வைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் கோவையில் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. சரோஜினி கொலை உள்ளிட்ட அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பலைச் சேர்ந்த வர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    இந்த கும்பலுடன் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முதியவர்களை அந்த பெண் முதலில் சந்தித்து பேசுவது, அதன்பிறகு மற்ற நபர்கள் புகுந்து தங்கள் திட்டத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. இதுதொடர்பாகவும் போலீ சார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 

    • கை, கால், முகத்தை டேப்பால் கட்டி கொடூரமாக கொன்றுள்ளனர்.
    • 11 மணியாகியும், பாலை எடுக்காமல் அப்படியே வாசலில் கிடந்தது.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜினி(வயது82).

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இதையடுத்து சரோஜினி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது மகன்கள் 2 பேரும் வந்து தாயை பார்த்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்கு பால் பாக்கெட் போடுபவர் காலையிலேயே போட்டு சென்று விட்டார். ஆனால் 11 மணியாகியும், பாலை எடுக்காமல் அப்படியே வாசலில் கிடந்தது.

    இதனால் அக்கம்பக்க த்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கதவு திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டி இறந்த நிலையில் கிடந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது அவரது கை, கால்கள் மற்றும் வாய் டேப்பால் கட்டப்பட்டிரு ந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லை. இதனால் மர்மநபர்கள் யாரோ இவர் தனியாக இருப்பதை அறிந்து, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு வீட்டில் ஏதாவது தடயங்கள் உள்ளதா? என தேடி பார்த்தனர்.

    மேலும் அவரை கொலை செய்தது யார்? நகைக்காக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா எனவும் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே மூதாட்டியின் வீட்டில் 3 பேர் வாடகைக்கு இருந்ததாகவும், அவர்களை காலை முதல் காணவில்லை என்றும் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனால் அந்த நபர்கள் மூதாட்டியை கொன்று விட்டு, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாமோ என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கோணத்தி லும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இருப்பினும் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×