search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly woman killed"

    • மாடு மேய்த்து விட்டு அந்த பகுதியில் உள்ள பாலக்காடு-சேலம் சாலையை கடக்க முயன்றார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கா.கா. சாவடி அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மரகதம் (வயது 70). சம்பவத்தன்று இவர் மாடு மேய்த்து விட்டு அந்த பகுதியில் உள்ள பாலக்காடு - சேலம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மரகதம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் கா.கா. சாவடி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கா.கா. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பீளமேடு ரெயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார்.
    • போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர்-கோவை ரெயில்வே தண்டவாளம் பீளமேடு ரெயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர் பச்சை நிற பூ போட்டு இருந்த சேலை அணிந்திருந்தார். பின்னர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில் மோதி இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ெரயில் மோதி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

    • கை, கால், முகத்தை டேப்பால் கட்டி கொடூரமாக கொன்றுள்ளனர்.
    • 11 மணியாகியும், பாலை எடுக்காமல் அப்படியே வாசலில் கிடந்தது.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜினி(வயது82).

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இதையடுத்து சரோஜினி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது மகன்கள் 2 பேரும் வந்து தாயை பார்த்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்கு பால் பாக்கெட் போடுபவர் காலையிலேயே போட்டு சென்று விட்டார். ஆனால் 11 மணியாகியும், பாலை எடுக்காமல் அப்படியே வாசலில் கிடந்தது.

    இதனால் அக்கம்பக்க த்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கதவு திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டி இறந்த நிலையில் கிடந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது அவரது கை, கால்கள் மற்றும் வாய் டேப்பால் கட்டப்பட்டிரு ந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லை. இதனால் மர்மநபர்கள் யாரோ இவர் தனியாக இருப்பதை அறிந்து, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு வீட்டில் ஏதாவது தடயங்கள் உள்ளதா? என தேடி பார்த்தனர்.

    மேலும் அவரை கொலை செய்தது யார்? நகைக்காக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா எனவும் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே மூதாட்டியின் வீட்டில் 3 பேர் வாடகைக்கு இருந்ததாகவும், அவர்களை காலை முதல் காணவில்லை என்றும் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனால் அந்த நபர்கள் மூதாட்டியை கொன்று விட்டு, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாமோ என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கோணத்தி லும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இருப்பினும் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி கோவில் தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 70). மருதமுத்துவும், அவரது மகன் பரிமளமும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் செல்லம்மாள் மட்டும் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து அதில் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை வீட்டிற்குள் செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது செல்லம்மாளின் கழுத்து மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்லம்மாளை கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று சந்தேகமடைந்த போலீசார் வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தினர். ஆனால் அவற்றில் எந்தவித நகையும் இல்லை. மேலும் செல்லம்மாளும் நகைகள் எதுவும் அணிந்திருக்க வில்லை. இதனால் வேறு ஏதாவது பிரச்சினை காரணமாக மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

    மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×