search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "subsidy"

    • விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுப டியை ஊக்குவிக்க 75 சதவீத மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
    • 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவீத மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கூடச்சேரி, பிராந்தகம், வீரணம்பாளையம் மற்றும் சுங்ககாரன்பட்டி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுப டியை ஊக்குவிக்க 75 சதவீத மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, சீத்தா போன்ற 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவீத மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

    பல்லாண்டு பழப்பயிர் சாகுபடி செய்ய பழச்செ டிகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன்கார்டு நகல் மற்றும் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பரமத்தி வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    மேலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்ப முள்ள அனைத்து கிரா மங்களை சேர்ந்த விவசாயி களும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று பரமத்தி தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளின் நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது.
    • தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் கள ஆய்வு செய்தார்.

     காங்கயம் :

    தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம், எண்ணெய் வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது. இது குறித்து திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் கள ஆய்வு செய்தார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    விவசாயிகள் தரிசாக உள்ள நிலங்களில் எண்ணெய் வித்து மரபயிர்களான வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி வேம்பு பயிருக்கு எக்டேருக்கு ரூ.17 ஆயிரமும், புங்கன் பயிருக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நடவு செய்த முதல் 3 ஆண்டுகளுக்கு ஊடுபயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து காங்கயம் வட்டாரம் வீரணம்பாளையம் கிராமத்தில் கணேசன் என்ற விவசாயி 2021-22-ம் ஆண்டில் நடவு செய்துள்ள வேம்பு எண்ணெய்வித்து, மரப்பயிர் கன்றுகளை தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன், காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி மற்றும் வேளாண்மை அலுவலர் ரேவதி ஆகி–யோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

    • 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும்.
    • விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம்.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடர்-பழங்குடியினர் 60 சதவீத மானியத்தில் பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டு திட்டங்களில் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டுத் திட்டம் 2021-22 ம் ஆண்டிற்கான திட்டங்களின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புறக்கடையில் சிறிய அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு அலகு அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும்.

    பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டுத் திட்டம் 2021-22 ம் ஆண்டிற்கான திட்டங்களின் கீழ் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் புதிய மீன்குஞ்சு வளர்ப்பு அலகு அமைக்க 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4.20 லட்சம் மானியமும், புதிய மீன் வளர்ப்பு அலகு அமைத்து உள்ளீட்டு செலவினம் வழங்க 60 சதவீத மானியமாக அதிக பட்சம் ரூ.6.60 லட்சம் மானியமும் வழங்கப்படும்.

    மேற்காணும் மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம். எனவே விருப்பமுள்ளவர்கள் நல்ல தங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டி, தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வளஆய்வாளர் (தொலைபேசி எண். 89037 46476 அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் எண்: 7-ம் தளம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கூடுதல் கட்டட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638 011 தொலைபேசி எண்: 0424 2221912 யை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் ெதரிவித்துள்ளார்.

    • விதை நெல் திருவையாறு வேளாண்மை விற்பனை மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • 50 சதவீத மானியத்தில் பெற்று நாற்று விட்டு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சினேகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:-

    குறுவை, சாகுபடிக்கு நாளை மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே நடப்பு குறுவை, பட்டத்திற்கு தேவையான விதை நெல் திருவையாறு வேளாண்மை விற்பனை மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கால தாமதம் இல்லாமல் விதை நெல்லை 50 சதவீத மானியத்தில் பெற்று நாற்று விட்டு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், மண்வெட்டி, கடப்பாரை, இருப்புசட்டி, கதிர் அரி வாள், களைகொத்து ஆகியவை 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது.
    • ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யூ.சி மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புதிய பஸ் நிலையம் சங்க ஆலோசகர் அண்ணாதுரை வரவேற்றார். ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், சி.ஐ.டி.யூ ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா, மாநகரத் தலைவர் ஜெயராஜ், தஞ்சை மாவட்ட தலைவர் மூர்த்தி, மக்கள் அதிகாரம் தேவா, புதிய பஸ் நிலையம் சங்கம் தலைவர் நாகலிங்கம், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சாமிநாதன், ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாக குழு சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், மாவட்டத் தலைவர் சேவையா, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்த கூட்டத்தில், கேரள மாநில அரசை போல் ஆட்டோ செயலியை உருவாக்கி அரசை ஏற்று நடத்த வேண்டும். தஞ்சை பெரிய கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு அறிவித்தது போல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வீடு கட்ட மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் யோகராஜ், புதிய பஸ் நிலையம் ஆட்டோ சங்கம் கருணாகரன், வழக்கறிஞர் சண்முகநாதன், அனைத்து வாகன ஓட்டுனர் சங்க பேரவை பழனிச்சாமி, சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதிய பஸ் நிலையம் ஆலோசகர் குப்புசாமி நன்றி கூறினார்.

    • ரூ.57,927 மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
    • உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதை ஆய்வு செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் பொறியியல், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலெக்டர் சாருஸ்ரீ வயல்வெளி ஆய்வு மேற்கொ ண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மழவராயநல்லூர் பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு ள்ளதையும், நெடுவாக்கோ ட்டை பகுதியில் விதைப்பண்ணை வயல் திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் (வல்லுநர் விதை) பயிரிடப்பட்டு உள்ளதையும், நீடாமங்கலம் வட்டம், முக்குளம் சாத்தனூர் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.57927 மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க ப்பட்டு உள்ளதையும், நீடாமங்கலம் வட்டம், செருமங்கலம் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நெல் குறுவை 2023-24 திட்டத்தின் கீழ் 20 சென்ட் பரப்பளவில் (திருப்பதி சாரம் 5 ரகம்) எந்திர நடவு பாய் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு வருவதையும், எடகீழையூர் பகுதியில் உளுந்து விதைப் பண்ணை வயல் 2023-24 திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் பரப்பளவில் (வம்பன் 10) பயிரிடப்பட்டுள்ளதையும், உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக, மன்னார்குடி வட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பேட்டரி தெளிப்பான், தார்பாய், பண்ணைக்கருவிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களும், ஒரு பயனாளிக்கு உழவு செய்யும் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

    ஆய்வின்போது, செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை ரேணுகாந்தன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை, தாசில்தார் கார்த்தி, வேளாண்மை உதவி இயக்குநர்கள் (மன்னார்குடி) இளம்பூரணார், விஜயகுமார் (நீடாமங்கலம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம்.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிறு,குறு விவசாயி சான்றி தல் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம், புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்கத் தொட்டி 116 கனமீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

    • தென்னங்கன்று ஒன்றிற்கு ரூ. 40 வீதம் மானியம் பெறலாம்.
    • உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி ( பொ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    தென்னை சாகுபடியில் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    சேதுபாவா சத்திரம் வட்டாரத்தில் 7500 எக்டருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.

    இதில் ஆங்காங்கே பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட மரங்கள், காய்க்காத மரங்கள், வயது முதிர்ந்த மரங்கள் காணப்படு கின்றன. இவற்றை வெட்டி அப்பறப்ப டுத்துவதற்கு தென்னை மரம் ஒன்றிற்கு ரூபாய் 1000 வீதம் அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு 32 மரங்களுக்கு மானியம் பெறலாம்.

    தென்னை மரங்களை அப்புறப்படுத்திய பிறகு அவ்விடத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்கு தென்னங்கன்று ஒன்றிற்கு ரூபாய் 40 வீதம் மானியமும் அதிகபட்சமாக ஒரு எக்டரில் 100 தென்னங்கன்றுகளுக்கு மானியம் பெறலாம்.

    தென்னந்தோப்புகளில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தை செயல்படுத்திட முதலாம் ஆண்டு ரூ.8,750/ எக்டர், இரண்டாம் ஆண்டு ரூ.8,750 எக்டர் மானியமாக பெறலாம்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை நேரில் அணுகி அல்லது உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும், 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்பொழுது மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிப்பையடுத்து கோடை உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆகையால் குருவை சாகுபடி பணிகள் சீராக நடைபெற உதவிடு வகையில் வேளாண் கிடங்குகள் மூலமாக 50 சதவீதம் மானியத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குறிப்பாக கடந்தாண்டு சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்து மிகப் பெரிய அளவில் விவசாயிகள் பொருளாதார நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    ஆகையால் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி பணிகளை செய்து முடிக்கும் வகையில் தங்கு தடையின்றி மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதுபோன்று திறந்து விடப்படும் தண்ணீர் ஆறுகளில் மட்டும் சென்று கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும்.

    ஆறுகளில் இருந்து பாசனத்திற்காக பிரியும் சிறு, குறு வாய்க்கால்களிலும் செல்வதற்கான சூழ்நி லையை ஏற்படுத்த வேண்டும்.

    அவ்வாறு தண்ணீர் சென்றால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படும்.

    ஆகையால் சிறு, குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட வேண்டும்.

    மேலும் நிபந்த னை இல்லாமல் வேளாண் கடன்கள் வழங்க வேண்டும்.

    இவைகளை குறையின்றி செய்வதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஃபேம் 2 திட்டத்திற்காக அரசாங்கம் சார்பில் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரி-க்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்தியாவில் ஜூன் 1 ஆம் தேதி முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விலை உயர்த்தப்பட இருப்பது உறுதியாகி விட்டது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு FAME-II (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில், இதுவரை ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரி-க்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தொகை ரூ. 10 ஆயிரமாக குறைக்கப்படுவதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மொத்த மானிய தொகை 15 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இது 40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஃபேம் 2 திட்டத்திற்காக அரசாங்கம் அறிவித்து இருந்த ரூ. 2 ஆயிரம் கோடி தொகை கிட்டத்தட்ட முழுமையாக பயன்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உடனடியாக மானியத்தை ரத்து செய்வது சந்தையில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ரூ. 1500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது வாகன உற்பத்தியாளர்கள் மானியத் தொகையை பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருவதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ. 1500 கோடி நிதி ஆகஸ்ட் மாத வாக்கில் காலாவதியாகும் என்று கூறப்படுகிறது. 

    • 98 பஞ்சாயத்துகளில் வாழ்வாதாரம் மேம்படுத்த திட்டம்
    • விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 98 பஞ்சாயத்துக்களில் விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டைகள், உழுவை எந்திரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் உழவன் செயலி வாயிலாக முன் பதிவு ஆகியவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நில உரிம விவரம் (பட்டா, சிட்டா) ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் போன்ற விவரங்களுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    • நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
    • கோவை வேளாண் பல்கலைகழகம் தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே தென்னை மரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும் வகையில் கோவை வேளாண் பல்கலைகழகம் சார்பில்தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் எளிதாக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து டானிக் மானியத்தில் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது :- தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் கோவை வேளாண் பல்கலைகழகம் தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அதனை கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்/ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×