search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதை நெல்"

    • 36.47 டன் எடையுள்ள விதை நெல் குவியலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது.
    • விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில், விதை விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    திருப்பூர்: 

    ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையில், தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியாா் நெல் விதை உற்பத்தி, விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு, பவானி, கோபி, தாராபுரம், காங்கயம் பகுதியைச் சோ்ந்த அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

    இதில் விதை விற்பனை உரிமம், விதை இருப்பு விலை, உண்மை நிலை விதைகளுக்கான ஆவணங்கள், முளைப்புத்திறன் பரிசோதனை முடிவு அறிக்கை உள்ளிட்டவற்றை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது விதை இருப்புக்கும், புத்தக இருப்புக்கும் உள்ள வேறுபாடு, உண்மை நிலை விதைகளுக்கான விதையின் ஆதார ஆவணங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து, 36.47 டன் எடையுள்ள விதை நெல் குவியலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.

    இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி கூறியதாவது, விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும்போது, விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அதில் விதையின் பெயா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயா்-முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். விதை விற்பனை தொடா்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் மற்றும் விதைக் கட்டுப்பாடு ஆணையத்தின்படி விதிமீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில், விதை விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். 

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.அறிக்கை
    • 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை அதிகாரிகள் கன்னிப்பூ சாகுபடியில் தரிசாக போட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டசபை தொகுதி உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக திருப்பதிசாரம் அரசு நெல் ஆராய்ச்சி விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையம் வாயிலாக நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாய பண்ணையின் கீழ் 40 ஏக்கர் பாசன நிலம் உள்ளது. இதில் நடப்பாணடில் 23 ஏக்கர் நிலத்தில் மட்டுமே விதைகள் உற்பத்தி செய்ய நெல் பயிரிடப்பட்டது. மீதமுள்ள 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை அதிகாரிகள் கன்னிப்பூ சாகுபடியில் தரிசாக போட்டுள்ளனர்.

    இது அதிர்ச்சியையும், விவசாயிகளுக்கு இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் விதை நெல் வாங்க வருகின்ற விவசாயிகளுக்கு விதைகள் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்யும்போது காப்பீடு பெறுவதற்கு தேவையான தர சான்றிதழ்கள் பெற காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    மாதந்தோறும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விவசாயிகளை அழைத்து கூட்டம் நடத்தி விவசாய நிலங்களை தரிசாக போடக்கூடாது என்றும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். ஆலோசனைகள் வழங்குகின்ற அலுவலர்கள் தற்போது விவசாயிகளுக்கு விதைகள் வழங்க முடியாத அவலநிலையை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விதை நெல் தட்டுப்பாடு ஏற்படாத நிலையை உருவாக்கி விவசாயிகளை பாதுகாக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல் விதைகள், உயிர் உரங்கள் உள்ளிட்டவற்றின் மானிய விவரம் குறித்து கூறப்பட்டது.
    • நெல் பயிரில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் கிராம அளவில் வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு பயிற்சி மூலங்குடி கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சிக்கு மூலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேல் தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை அலுவலர் செல்வி அனுஷா முன்னிலை வகித்தார்.

    நிகழச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ராஜா கலந்து கொண்டு, நெல் பயிரில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    தொடர்ந்து பேசிய விதைச்சான்று அலுவலர் சதீஷ் விதை பண்ணை அமைக்கும் வழிமுறைகள், தரமான விதை உற்பத்தி பற்றி விளக்கினார்.

    நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிகண்டன், விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் உள்ளிட்டவற்றின் மானிய விவரம் குறித்து விளக்கம் அளித்தார்.

    முடிவில் விவசாயி குமரேசன் நன்றி கூறினார் தெரிவித்தார்.

    • சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் ஏறக்குறைய 2200 ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது.
    • இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு , அரசு மானிய விலையில் விதை நெல் வழங்க, புத்திரகவுண்டன்பாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் ஏறக்குறைய 2200 ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு , அரசு மானிய விலையில் விதை நெல் வழங்க, புத்திரகவுண்டன்பாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் கூறியதாவது:- சம்பா பருவத்தில் நெல் நடவு செய்ய ஆடி 18-க்கு பின், நாற்று விடும் பணியை விவசாயிகள் தொடங்குவது வழக்கம். சம்பா பருவத்திற்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, கோ -51, ஏ.டி.ட்டி-45, ஏ.டி.ட்டி-53, டி.கே.எம் -13 மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, சீரக சம்பா , தங்க சம்பா ஆகிய ரகங்கள் ஏத்தாப்பூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் துவரை, உளுந்து நிலக்கடலை விதைகளும் விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. விதை நேர்த்தி செய்வதற்கு தேவையான உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் , பொட்டாஸ், ஜிங் பாக்டீரியா மற்றும் அனைத்து பயிர்களுக்கும் தேவையான நுண்ணூட்ட சத்துக்களும், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ், ட்ரைகோடெர்மா ஆகியவைகளும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், ஆதார் மற்றும் சிட்டா நகலுடன் ஏத்தாப்பூரிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையும், கருமந்துறை துணை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களையும் அணுகலாம் என்றார்.

    • விதை நெல் திருவையாறு வேளாண்மை விற்பனை மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • 50 சதவீத மானியத்தில் பெற்று நாற்று விட்டு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சினேகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:-

    குறுவை, சாகுபடிக்கு நாளை மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே நடப்பு குறுவை, பட்டத்திற்கு தேவையான விதை நெல் திருவையாறு வேளாண்மை விற்பனை மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கால தாமதம் இல்லாமல் விதை நெல்லை 50 சதவீத மானியத்தில் பெற்று நாற்று விட்டு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், மண்வெட்டி, கடப்பாரை, இருப்புசட்டி, கதிர் அரி வாள், களைகொத்து ஆகியவை 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல் ரகங்களுக்கு தேவையான வல்லுநர் விதை கருவிதையிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
    • வயலாய்வு மேற்கொண்டு வயல் தரத்தை உறுதி செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.

    திருப்பனந்தாள்:

    ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளால் விரும்பி விளைவிக்கப்படும் நெல் ரகங்களுக்கு தேவையான வல்லுநர் விதை கருவிதையிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

    நடப்பு சம்பா பருவத்தில் சி.ஆர்.1009 (சாவித்திரி) ஏ.டி.டீ.-51 மற்றும் ஏ.டி.டீ.-52 ஆகிய நீண்டகால ரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

    இவற்றை பூக்கும் பருவத்தில் விதைச்சான்றுத் துறையினர் முதலாம் வயலாய்வு மேற்கொண்டு வயலில் தென்பட்ட ஒருசில கலவன்களை நீக்கி வயல் தரம் பேணிவந்த நிலையில் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் முகமது பாருக் தலைமையில் விதைச்சான்று அலுவலர்கள் செல்வமணி, ஜெகதீஸ்வர், பிரபு, மற்றும் அரவிந்த் ஆகியோர் ஆராய்ச்சி நிலையத்தின் மரபியல் துறை வல்லுநர்களுடன் இணைந்து 2 ஆம் வயலாய்வு மேற்கொண்டு வயல் தரத்தை உறுதி செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.

    இவைரக வாரியாக முறையாக அறுவடை செய்யப்பட்டு உலர்த்தி, சுத்திப்பணிகள் செய்து, பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பொன்னிற மஞ்சள் சான்று அட்டை பொருத்தி வல்லுநர் விதையாக விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட வல்லுநர் விதைகளை கொண்டு அடுத்த ஆண்டு சம்பா பருவத்தில் தமிழ்நாடு அரசின் மாநில அரசு விதைப்பண்ணைகளில் ஆதாரநிலை விதைகளாக உற்பத்தி செய்து விதைகளை பெருக்கி வெள்ளைநிற சான்றட்டை பொருத்தி அதற்கு அடுத்த ஆண்டு விவசாயிகளின் வயல்களில் சான்றுநிலை விதைகளாக உற்பத்தி செய்து நீலநிற சான்று அட்டை பொருத்தி பின்வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு சான்றுபெற்ற விதைகளாக அளிக்கப்படுகிறது.

    அரசின் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மான்ய விலையில் அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விதை நெல் விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • புதிய விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பம் செய்வோர் இணையதளம் வாயிலாகவும், ஈரோடு, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவும் உரிய ஆவணங்களை கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    தாராபுரம் :

    விதை நெல் விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் மாயகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தாராபுரம் வட்டாரத்தில் விற்பனை உரிமம் பெற்ற 132 விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விதை விற்பனை நிலையங்கள் அனைத்தும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். தவறும்பட்சத்தில விதை வினியோகம் செய்தவர் மீது விதைகள் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    புதிய விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பம் செய்வோர் இணையதளம் வாயிலாகவும், ஈரோடு, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவும் உரிய ஆவணங்களை கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்கள் முக்கியக் காரணிகளாக அமைகின்றன. எனவே, நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அம்மா பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் கனிமொழி கூறியதாவது:

    தற்போதைய சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏற்றதாக கோ 52, சி.ஆர் – 1009 சப் 1, ஐ.ஆர். 20, ஏ.டீ.டி – 38, ஏ.டீ.டி – 39, பி.பி.டி – 5204, சம்பா சப் – 1, டி.ஆர்.ஒய் – 3 ஆகிய நெல் ரகங்களே பரிந்துரை செய்யப்படுகின்றன.

    இந்த ரகங்கள் அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    மேலும், நெல் பயிருக்குத் தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணு யிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவையும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    எனவே விவசாயிகள் பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    ×