search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice Seed"

    • 36.47 டன் எடையுள்ள விதை நெல் குவியலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது.
    • விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில், விதை விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    திருப்பூர்: 

    ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையில், தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியாா் நெல் விதை உற்பத்தி, விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு, பவானி, கோபி, தாராபுரம், காங்கயம் பகுதியைச் சோ்ந்த அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

    இதில் விதை விற்பனை உரிமம், விதை இருப்பு விலை, உண்மை நிலை விதைகளுக்கான ஆவணங்கள், முளைப்புத்திறன் பரிசோதனை முடிவு அறிக்கை உள்ளிட்டவற்றை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது விதை இருப்புக்கும், புத்தக இருப்புக்கும் உள்ள வேறுபாடு, உண்மை நிலை விதைகளுக்கான விதையின் ஆதார ஆவணங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து, 36.47 டன் எடையுள்ள விதை நெல் குவியலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.

    இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி கூறியதாவது, விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும்போது, விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அதில் விதையின் பெயா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயா்-முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். விதை விற்பனை தொடா்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் மற்றும் விதைக் கட்டுப்பாடு ஆணையத்தின்படி விதிமீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில், விதை விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். 

    • சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் ஏறக்குறைய 2200 ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது.
    • இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு , அரசு மானிய விலையில் விதை நெல் வழங்க, புத்திரகவுண்டன்பாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் ஏறக்குறைய 2200 ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு , அரசு மானிய விலையில் விதை நெல் வழங்க, புத்திரகவுண்டன்பாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் கூறியதாவது:- சம்பா பருவத்தில் நெல் நடவு செய்ய ஆடி 18-க்கு பின், நாற்று விடும் பணியை விவசாயிகள் தொடங்குவது வழக்கம். சம்பா பருவத்திற்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, கோ -51, ஏ.டி.ட்டி-45, ஏ.டி.ட்டி-53, டி.கே.எம் -13 மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, சீரக சம்பா , தங்க சம்பா ஆகிய ரகங்கள் ஏத்தாப்பூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் துவரை, உளுந்து நிலக்கடலை விதைகளும் விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. விதை நேர்த்தி செய்வதற்கு தேவையான உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் , பொட்டாஸ், ஜிங் பாக்டீரியா மற்றும் அனைத்து பயிர்களுக்கும் தேவையான நுண்ணூட்ட சத்துக்களும், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ், ட்ரைகோடெர்மா ஆகியவைகளும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், ஆதார் மற்றும் சிட்டா நகலுடன் ஏத்தாப்பூரிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையும், கருமந்துறை துணை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களையும் அணுகலாம் என்றார்.

    • நெல் ரகங்களுக்கு தேவையான வல்லுநர் விதை கருவிதையிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
    • வயலாய்வு மேற்கொண்டு வயல் தரத்தை உறுதி செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.

    திருப்பனந்தாள்:

    ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளால் விரும்பி விளைவிக்கப்படும் நெல் ரகங்களுக்கு தேவையான வல்லுநர் விதை கருவிதையிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

    நடப்பு சம்பா பருவத்தில் சி.ஆர்.1009 (சாவித்திரி) ஏ.டி.டீ.-51 மற்றும் ஏ.டி.டீ.-52 ஆகிய நீண்டகால ரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

    இவற்றை பூக்கும் பருவத்தில் விதைச்சான்றுத் துறையினர் முதலாம் வயலாய்வு மேற்கொண்டு வயலில் தென்பட்ட ஒருசில கலவன்களை நீக்கி வயல் தரம் பேணிவந்த நிலையில் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் முகமது பாருக் தலைமையில் விதைச்சான்று அலுவலர்கள் செல்வமணி, ஜெகதீஸ்வர், பிரபு, மற்றும் அரவிந்த் ஆகியோர் ஆராய்ச்சி நிலையத்தின் மரபியல் துறை வல்லுநர்களுடன் இணைந்து 2 ஆம் வயலாய்வு மேற்கொண்டு வயல் தரத்தை உறுதி செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.

    இவைரக வாரியாக முறையாக அறுவடை செய்யப்பட்டு உலர்த்தி, சுத்திப்பணிகள் செய்து, பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பொன்னிற மஞ்சள் சான்று அட்டை பொருத்தி வல்லுநர் விதையாக விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட வல்லுநர் விதைகளை கொண்டு அடுத்த ஆண்டு சம்பா பருவத்தில் தமிழ்நாடு அரசின் மாநில அரசு விதைப்பண்ணைகளில் ஆதாரநிலை விதைகளாக உற்பத்தி செய்து விதைகளை பெருக்கி வெள்ளைநிற சான்றட்டை பொருத்தி அதற்கு அடுத்த ஆண்டு விவசாயிகளின் வயல்களில் சான்றுநிலை விதைகளாக உற்பத்தி செய்து நீலநிற சான்று அட்டை பொருத்தி பின்வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு சான்றுபெற்ற விதைகளாக அளிக்கப்படுகிறது.

    அரசின் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மான்ய விலையில் அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×