search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "subsidized rates"

    • விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • தங்களுக்கு தேவையான இடு பொருட்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்து வாங்க முடியும்.

    உடுமலை,செப்.19-

    குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    குடிமங்கலம் வட்டாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து மக்காச்சோளம், உளுந்து, பாசிபயறு, கம்பு, சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராக உள்ளனர்.

    வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய தேவையான அளவு விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மக்காச்சோளம் - 2,112 கிலோ, சோளம் (சி.ஓ.,32) - 1,300 கிலோ, சோளம் (கே-12) -492 கிலோ, உளுந்து (வி.பி.என்.,8) - 750 கிலோ, உளுந்து (வி.பி.என்.,9) - 217 கிலோ, உளுந்து (வி.பி.என்.,11) - 1,500 கிலோ, கொண்டைக்கடலை - 600 கிலோ, நிலக்கடலை (தரணி) - 1,260 கிலோ ஆகிய ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவையும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பயிர்களுக்கு நுண்ணூட்ட உரங்களான பயறு வகை நுண்ணூட்டம், தானிய வகை நுண்ணூட்டம் மற்றும் தென்னை நுண்ணூட்ட உரங்களும், உயிரியல் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகளான மெட்டாரைசியம் அனிசோபிலே, டிரைகோடெர்மா விரிடி, சூடோ மேனாஸ் ஆகியவையும் விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளது.

    நடப்பாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சிறுதானிய பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, கம்பு மற்றும் ராகி செயல்விளக்க திடல் அமைக்க, விதைகள், நுண்ணூட்ட உரங்கள், நுண்ணூட்ட சத்து உரங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்புகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.விவசாயிகள், தங்களுக்கு தேவையான இடு பொருட்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்தும், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டும் பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.   

    • விவசாயிகள் பருவத்திற்கேற்ற பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • நெற்பயிருக்கு தேவைப்படும் உரம் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    அம்மாபேட்டை:

    விவசாயிகள் தற்போ தைய சம்பா பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகங்கள் பற்றி அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் கனிமொழி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்களே முக்கிய காரணிகளாக அமைகிறது. எனவே நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்திற்கேற்ற பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    தற்போதைய சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) நெல் ரகங்களான கோ 52, ஐ.ஆர். 20, ஏடீடி 38, ஏடீடி 54, பிபிடி 5204, வுசுலு 3, தூயமல்லிஆகிய நெல் ரகங்களே இப்பருவத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட ரகங்கள் அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோ கிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் நெற்பயிருக்கு தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பை ரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவை களும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் விதைகள் மற்றும் இடுபொருட்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மலேசியன் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது.
    • சென்னை தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் மூலமாக வரவு வைக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த தளியில் உள்ள தென்னை மகத்துவ மையமானது விவசாயிகளுக்கு தரமான தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்து வினிேயாகம் செய்தல், பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்தல், விஞ்ஞான ரீதியாக தென்னை சாகுபடி முறைகளை செயல் விளக்கம் செய்து காண்பித்தல் மற்–றும் தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தென்னை சார்ந்த தொழில்கள் தொடங்க தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தின் செயல் விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணையில் 23 ஆயிரம் மேற்கு கடற்கரை நெட்டை மற்றும் ஆயிரத்து 300 மலேசியன் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது. ஒரு நெட்டை ரக தென்னங்கன்றின் விலை ரூ.80-க்கும், குட்டை ரக கன்றின் விலை ரூ.90 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் 04252-265430 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அலுவலக வேலை நாட்களில் தென்னங்கன்றுகளை வாங்கிச்செல்லலாம். தென்னங்கன்றுகள் வாங்கிச் செல்லும் போதே பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படுகிறது. குறைந்தது 0.1 ஹெக்டர் முதல் அதிகபட்சமாக நான்கு ஹெக்டேர் வரை அதாவது 15 கன்றுகள் முதல் 700 தென்னங்கன்று வரை ஒரு விவசாயி பெற்று பயன் அடையலாம்.

    ஒரு ஹெக்டேர் குட்டை ரக கன்றுகளுக்கு ரூ.7ஆயிரத்து 500-ம் நெட்டை ரக கன்றுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500-ம் இரண்டு தவணைகளாக பிரித்து விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக சென்னை தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் மூலமாக வரவு வைக்கப்படுகிறது. இதனால் மானிய விலையில் தென்னங்கன்றுகளை பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்று தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ஜி.ரகோத்தமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்கள் முக்கியக் காரணிகளாக அமைகின்றன. எனவே, நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அம்மா பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் கனிமொழி கூறியதாவது:

    தற்போதைய சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏற்றதாக கோ 52, சி.ஆர் – 1009 சப் 1, ஐ.ஆர். 20, ஏ.டீ.டி – 38, ஏ.டீ.டி – 39, பி.பி.டி – 5204, சம்பா சப் – 1, டி.ஆர்.ஒய் – 3 ஆகிய நெல் ரகங்களே பரிந்துரை செய்யப்படுகின்றன.

    இந்த ரகங்கள் அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    மேலும், நெல் பயிருக்குத் தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணு யிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவையும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    எனவே விவசாயிகள் பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    ×