search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strike"

    • மதுரையில் இன்று 4,200 லாரிகள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
    • ரூ.250 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    மதுரை

    நாடு முழுவதும் இயக்கப்படும் லாரிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை விதிக்கப்படும் காலாண்டு வரி 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டதை கண்டித்தும், லாரிகள் இயக்கத்தின் போது சாலைகளில் போலீசார் எவ்வித விசாரணையும் இன்றி ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்வதை யும், அபராதம் விதிப்பதை யும் கைவிட வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் காரணமாக லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

    மதுரையில் இன்று காலை 6 மணி முதல் லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையை பொறுத்த வரை தினமும் 4,200 லாரிகள் அண்டை மாவட்டத்திற்கும், வெளி மாநிலங்களுக்கும் சரக்கு களை எடுத்துச் சென்று வருகின்றன.

    இதற்காக மதுரை நெல் பேட்டை, வடக்குவெளி வீதி, சிம்மக்கல், கீழ மாரட்டு வீதி உள்ளிட்ட இடங்களில் 230 புக்கிங் அலுவல கங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக அலுவல கங்களும் மூடப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் அனுப்பப்படாமல் புக்கிங் அலுவல கங்களில் தேங்கியுள்ளன.

    இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சரக்குகளை ஏற்றி இறக்க முடியாதால் சுமார் ரூ. 250 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    லாரி உரிமையாளர்கள் தங்களது உணர்வுகளை வெளிப் படுத்துவதற்காக தீபாவளி பண்டிகை நாட்களில் ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள் ளோம். எனவே எங்களது நியாயமான கோரிக்கைக்கு உடனடியாக அரசு செவி சாய்த்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாத்தையா தெரிவித்துள்ளார்.

    • மின்சாரத்திற்கு 1 யூனிட்டிற்கு 1 ரூ.53பைசா என மின் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
    • காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகமாக இருப்பதால் ஓ.இ.மில்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

    மங்கலம்:

    ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சங்கமானது மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நேற்று முதல் வருகிற 30-ந்தேதி வரை நூல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.

    அதன்படி திருப்பூர் மாவட்டம் மங்கலம் சுற்று வட்டார பகுதிகளான சாமளாபுரம், மங்கலம்,சோமனூர், பள்ளிபாளையம், பூமலூர், 63 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஓ.இ.,மில்கள் உற்பத்தி நிறுத்தத்தை துவங்கியுள்ளன.

    இது குறித்து ஓ.இ., மில் உரிமையாளர்கள் கூறுகையில், தமிழக அரசு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு ஓ.இ., மில் தொழிற்சாலை களின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு 1 யூனிட்டிற்கு 1 ரூ.53பைசா என மின் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த மின்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    மின் கட்டண உயர்வினால் ஓ.இ., மில் தொழிற்சாலை நடத்த முடியாத நிலையில் உள்ளது. தீபாவளி பண்டிகை காலங்களில் ஓ.இ.மில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி செல்ல ஆயத்தமாகி கொண்டுள்ளனர்.ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மின்கட்டண உயர்வை ரத்து செய்து ஓ.இ.மில்.தொழிற்சாலைகளை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு ஓ.இ.மில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேசன் ( ஓஸ்மா) சங்கத்தலைவர் அருள்மொழி கூறுகையில், மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்காததால் நாளொன்றுக்கு ரூ.10 கோடி மதிப்பில் நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு உடனடியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகமாக இருப்பதால் ஓ.இ.மில்கள் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

    காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தால் மட்டுமே ஓ.இ.மில்கள் நஷ்டமின்றி தொழில் செய்ய முடியும்.மேலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் செய்வதால் மார்க்கெட்டில் நூல் கொள்முதல் ஆவதில்லை. ஆகவே நிலைமை சீராகும் வரை வருகிற 30-ந்தேதி வரை ஓ.இ.மில்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என்றார்.

    • அடையாள உண்ணாவிரதம் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் நடை பெற்றது.
    • லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக 80 சதவீத லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    திருவொற்றியூர்:

    டிரைலர் உரிமையாளர்கள், மற்றும் அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் என மொத்தம் 37 சங்கங்கத்தினர் 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய பார்க்கிங் யார்டு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதையொட்டி அடையாள உண்ணாவிரதம் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் நடை பெற்றது.

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 80 சதவீத லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே டிரைலர் லாரி டிரைவர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த காளி, ஆசைத்தம்பி ஆகியோர் டிரைவர் உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் போராட்டம் அறிவித்திருப்பதால் வெளியூர் டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கால கட்டத்தில் போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு பண்டிகை காலம் முடிந்த பின் போராட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இதே போல் பல்வேறு தரப்பிலும் தீபாவளியையொட்டி போராட்டம் வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்ததால் நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக டிரைலர் உரிமையாளர் சங்க நிர்வாகி எம்.எம். கோபி தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் டிரைலர் லாரிகள் வழக்கம்போல் ஓடத் தொடங்கின.

    • மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு
    • 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்

    கோவை,

    தமிழகத்தில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் 600-க்கும் மேற்பட்ட ஒபன் எண்ட் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 400 ஆலைகள் உள்ளன.

    ஒபன் எண்ட் நூற்பாலைகளில் இருந்து தினமும் 25 லட்சம் கிரே நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் பாட்டில், பனியன் கம்பெனி கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதற்காக அங்கு சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து ஒபன் எண்ட் நூற்பாலைகள் தற்போது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளன. இது நாளை மறுநாள் (7-ந்தேதி) தொடங்குகிறது.

    இதுதொடர்பாக ஒபன் எண்ட் நூற்பாலைகள் சங்க தலைவர் அருள்மொழி கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் கழிவுப்பஞ்சில் இருந்து நூல்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் இருந்து தினமும் சுமார் 25 லட்சம் கழிவு நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் மற்றும் பனியன் கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன்மூலம் தினமும் ரூ. 60 கோடி மதிப்பில் வர்த்தகம் நடக்கிறது. எங்கள் நிறுவனங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் பல லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில் ஒபன் எண்ட் நூற்பாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலை கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளது. அதாவது ஒரு கிலோ ரூ.97 என்ற நிலையில் இருந்த கழிவு பஞ்சின் விலை தற்போது ரூ.117 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தமிழக அரசு மின்கட்டணத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளது.

    இதனால் நாங்கள் தொடர்ந்து தொழிலை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும், இறக்கு மதியாகும் பஞ்சுக்கான 11 சதவீதம் வரியை நீக்க வேண்டும்,

    தமிழகஅரசு மின்கட்டணம் மற்றும் நிலைக்கட்டண உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். சூரியஒளி மின்சாரத்துக்கு கட்டணம் விதிக்கக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்வதென முடிவெடுத்து உள்ளோம்.

    ஒபன் எண்ட் நூற்பாலைகளின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் வருகிற 7-ந்தேதி தொடங்கு கிறது. இது வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும். மேலும் சந்தை நிலவரம் சீராகும்வரை உற்பத்தி நிறுத்தத்தை தொடருவது என திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட ஆலைகள் தொழில் நஷ்டம் காரணமாக மூடப்பட்டு உள்ளன. மற்ற மில்களிலும் 50 சதவீத அளவில் மட்டுமே உற்பத்தி நடக்கிறது. ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக தினமும் 40 லட்சம் கிலோ நூல்உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் நாள்தோறும் ரூ.60 கோடி வர்த்தகம் பாதிக்கும்.

    மேலும் எங்கள் நிறுவனத்தில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுக வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையி ழக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    குஜராத், பஞ்சாப், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஒபன் எண்ட் நூற்பாலைகளுக்கு மானியவிலையில் மின்சாரம் தரப்படுகிறது. மேலும் தொழில் வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒபன் எண்ட் நூற்பாலைகளின் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் ஜவுளி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது சங்க துணைத்தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • திருச்சி கிராப்பட்டியில் அரசு விடுதி மாணவர்கள். தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி திடீர் மறியல்
    • இட்லியை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டதால் பரபரப்பு

    திருச்சி,

    திருச்சி கிராப்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 120 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அவர்கள் பல முறை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக சென்று மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை.

    விடுதி வார்டனும், துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இன்று திருச்சி - மதுரை சாலையில் கிராப்பட்டி மேம்பாலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட மோசமான காலை உணவான இட்லியுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டுகட்டாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தரமற்ற உணவுகளால் விடுதியில் பயின்ற 3 மாணவர்கள் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், இதுபோன்று மற்ற மாணவர்களுக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் மாணவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

    பின்னர் மாணவர்கள் இட்லி குண்டாவை தூக்கிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இதை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விடுதி மாணவர்களின் போராட்டத்தினால் திருச்சி - மதுரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது. 

    • குன்னூர்-ஊட்டி சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அருவங்காடு,

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் குன்னூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊட்டி செல்வது வழக்கம்.

    ஆனால் இந்த ரோடு தற்போது வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் வாகனங்கள் பழுது அடைவதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

    குன்னூர்-ஊட்டி சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர் சுதாகர் தலைமையில், குன்னூர் லெவல்கிளாஸ் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    அப்போது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட வி.சி.க நிர்வாகிகள் 32 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    • வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
    • போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    திருப்பூர்:

    காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் பங்கேற்கிறது. போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஓரிரு நாளில் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூடி போராட்டத்தில் பங்கேற்பது, லாரிகளை நிறுத்துவது குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

    • வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்க உள்ளது.
    • கனரக லாரிகள் மீதான 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்

    கோவை,

    கோவை மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி லாரிகள் இயங்காது என்று கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கனரக லாரிகள் மீதான 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

    அரசுக்கு சொந்தமான மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும், காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித் துள்ளது.

    அதன்படி கோவையில் நவம்பர் 9-ந் தேதி காலை 6 மணி முதல மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்ம் நடத்தப்படும் என்று கோவை லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்கள், சிறிய வாகன உரிமையாளர்கள், இலகுரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    எனவே தொழிற்சாலைகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் முருகேசன், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே இன்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி தெற்கு தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வருகின்றனர்.

    இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைந்துள்ளது. இதனால் காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் தற்காலிகமாக இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கி வந்துள்ளார்.ஆனால் இந்த இணைப்பின் மூலம் வரும் தண்ணீர் 200 குடியிருப்பிற்கு போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக தங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என கூறி, அப்பகுதி பொது மக்கள் அரியலூர் - தா.பழூர் சாலையில் கீழ மைக்கேல் பட்டி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீசார், காரைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுத்து போதிய அளவில் தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் அரியலூர் - தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • வ.உ.சி மைதானத்தில் 20-ந்தேதி தொடங்கியது
    • 100-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்

    கோவை,

    கோவை மாநகராட்சியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த 20-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    அவர்களின் போராட்டம் தற்போது 5-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வ.உ.சி மைதானத்தில் இன்று காலை திரண்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 

    • மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் திடீர் மறியல்
    • கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை


    விராலிமலை,


    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த் அன்னவாசல் அருகே குமியான்மலை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கேட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர். அதில் சிலருக்கு மட்டும் உரிமைத்தொகை கிடைத்த நிலையில் பணம் கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தனர்.


    ஆனாலும் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. இதனால் இ-சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள். இதையடுத்து மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.


    எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி  காட்டுப்பட்டி, உருவம்பட்டி, சேரானூர், மரிங்கிப்பட்டி, பின்னங்குடி, ஆணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் 


    பின்னர் சம்பவ இடத்திற்கு குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் புதுக்கோட்டை பரம்பூர் சாலையில்  குடுமியான்மலை கடைவீதியில் சாலை மறியல் செய்தனர்.


    தகவல் அறிந்த குடுமியான்மலை வருவாய் ஆய்வாளர் சரோஜா, பரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ரவி, கிளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமர் அன்னவாசல் போலீஸ்  இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


    அப்போது உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 மணி நேரத்திற்கு மேலாக, போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


    • கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் பெண்கள் ஆத்திரம்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை.இது தொடர்பாக.பயனாளிகளிடம் கேட்டபோது இ சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும் ,பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள்.மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பாக திடீர் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் ராமசாமி, காவல்துறை அதிகாரிகள் சாலை மறியல் செய்தவர்களிடம் உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலை மார்க்கத்தில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×