4,200 லாரிகள் அடையாள வேலைநிறுத்தம்

மதுரையில் இன்று 4,200 லாரிகள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.ரூ.250 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
4,200 லாரிகள் அடையாள வேலைநிறுத்தம்
Published on

மதுரை

நாடு முழுவதும் இயக்கப்படும் லாரிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை விதிக்கப்படும் காலாண்டு வரி 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டதை கண்டித்தும், லாரிகள் இயக்கத்தின் போது சாலைகளில் போலீசார் எவ்வித விசாரணையும் இன்றி ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்வதை யும், அபராதம் விதிப்பதை யும் கைவிட வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மதுரையில் இன்று காலை 6 மணி முதல் லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையை பொறுத்த வரை தினமும் 4,200 லாரிகள் அண்டை மாவட்டத்திற்கும், வெளி மாநிலங்களுக்கும் சரக்கு களை எடுத்துச் சென்று வருகின்றன.

இதற்காக மதுரை நெல் பேட்டை, வடக்குவெளி வீதி, சிம்மக்கல், கீழ மாரட்டு வீதி உள்ளிட்ட இடங்களில் 230 புக்கிங் அலுவல கங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக அலுவல கங்களும் மூடப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் அனுப்பப்படாமல் புக்கிங் அலுவல கங்களில் தேங்கியுள்ளன.

இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சரக்குகளை ஏற்றி இறக்க முடியாதால் சுமார் ரூ. 250 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்கள் தங்களது உணர்வுகளை வெளிப் படுத்துவதற்காக தீபாவளி பண்டிகை நாட்களில் ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள் ளோம். எனவே எங்களது நியாயமான கோரிக்கைக்கு உடனடியாக அரசு செவி சாய்த்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாத்தையா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com