search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓபன் எண்ட் மில்கள் தொடர்வேலைநிறுத்தம் நாளை மறுநாள் தொடங்குகிறது
    X

    ஓபன் எண்ட் மில்கள் தொடர்வேலைநிறுத்தம் நாளை மறுநாள் தொடங்குகிறது

    • மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு
    • 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்

    கோவை,

    தமிழகத்தில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் 600-க்கும் மேற்பட்ட ஒபன் எண்ட் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 400 ஆலைகள் உள்ளன.

    ஒபன் எண்ட் நூற்பாலைகளில் இருந்து தினமும் 25 லட்சம் கிரே நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் பாட்டில், பனியன் கம்பெனி கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதற்காக அங்கு சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து ஒபன் எண்ட் நூற்பாலைகள் தற்போது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளன. இது நாளை மறுநாள் (7-ந்தேதி) தொடங்குகிறது.

    இதுதொடர்பாக ஒபன் எண்ட் நூற்பாலைகள் சங்க தலைவர் அருள்மொழி கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் கழிவுப்பஞ்சில் இருந்து நூல்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் இருந்து தினமும் சுமார் 25 லட்சம் கழிவு நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் மற்றும் பனியன் கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன்மூலம் தினமும் ரூ. 60 கோடி மதிப்பில் வர்த்தகம் நடக்கிறது. எங்கள் நிறுவனங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் பல லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில் ஒபன் எண்ட் நூற்பாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலை கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளது. அதாவது ஒரு கிலோ ரூ.97 என்ற நிலையில் இருந்த கழிவு பஞ்சின் விலை தற்போது ரூ.117 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தமிழக அரசு மின்கட்டணத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளது.

    இதனால் நாங்கள் தொடர்ந்து தொழிலை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும், இறக்கு மதியாகும் பஞ்சுக்கான 11 சதவீதம் வரியை நீக்க வேண்டும்,

    தமிழகஅரசு மின்கட்டணம் மற்றும் நிலைக்கட்டண உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். சூரியஒளி மின்சாரத்துக்கு கட்டணம் விதிக்கக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்வதென முடிவெடுத்து உள்ளோம்.

    ஒபன் எண்ட் நூற்பாலைகளின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் வருகிற 7-ந்தேதி தொடங்கு கிறது. இது வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும். மேலும் சந்தை நிலவரம் சீராகும்வரை உற்பத்தி நிறுத்தத்தை தொடருவது என திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட ஆலைகள் தொழில் நஷ்டம் காரணமாக மூடப்பட்டு உள்ளன. மற்ற மில்களிலும் 50 சதவீத அளவில் மட்டுமே உற்பத்தி நடக்கிறது. ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக தினமும் 40 லட்சம் கிலோ நூல்உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் நாள்தோறும் ரூ.60 கோடி வர்த்தகம் பாதிக்கும்.

    மேலும் எங்கள் நிறுவனத்தில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுக வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையி ழக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    குஜராத், பஞ்சாப், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஒபன் எண்ட் நூற்பாலைகளுக்கு மானியவிலையில் மின்சாரம் தரப்படுகிறது. மேலும் தொழில் வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒபன் எண்ட் நூற்பாலைகளின் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் ஜவுளி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது சங்க துணைத்தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×