என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 9-ந் தேதி லாரிகள் ஸ்டிரைக்
    X

    கோவையில் 9-ந் தேதி லாரிகள் ஸ்டிரைக்

    • வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்க உள்ளது.
    • கனரக லாரிகள் மீதான 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்

    கோவை,

    கோவை மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி லாரிகள் இயங்காது என்று கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கனரக லாரிகள் மீதான 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

    அரசுக்கு சொந்தமான மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும், காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித் துள்ளது.

    அதன்படி கோவையில் நவம்பர் 9-ந் தேதி காலை 6 மணி முதல மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்ம் நடத்தப்படும் என்று கோவை லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்கள், சிறிய வாகன உரிமையாளர்கள், இலகுரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    எனவே தொழிற்சாலைகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் முருகேசன், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×