என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Smartphone"
- ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ரியல்மி வலைதளம் சென்று புதிய விலையில் வாங்கிடலாம்.
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த இரண்டு வேரியண்ட்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வங்கி சலுகைகள் சேர்த்து புதிய நார்சோ ஸ்மார்ட்போனினை ரூ. 3 ஆயிரம் வரை குறைந்த விலையில் வாங்கிட முடியும்.
சமீபத்தில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல்கள் முறையே ரூ. 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போதைய அறிவிப்பின் படி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டை பயனர்கள் ரூ. 17 ஆயிரத்து 999 விலையிலும், டாப் எண்ட் வேரியண்டை ரூ. 18 ஆயிரத்து 999 விலையிலும் வாங்கிட முடியும்.
அந்த வகையில் இரு மாடல்களுக்கும் முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை பயனர்கள் அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளம் சென்று புதிய விலையில் வாங்கிட முடியும்.
- ஒன்பிளஸ் நிறுவன சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது.
- ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களை ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த சில்லறை விற்பனையாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மே 1 ஆம் தேதியில் இருந்து நாடு முழுக்க பெரும்பாலான முன்னணி ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் நிறுவன சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்பிளஸ் டெக்னாலஜி இந்தியா விற்பனை பிரிவு இயக்குநர் ரஞ்சித் சிங்கிற்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தில் விற்பனை தொடர்பாக ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
இந்தியாவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்யும் போது மிக குறைந்த லாபம் கிடைப்பதாகவும், வாரண்டி தொடர்பான சேவைகளில் கால தாமதம் ஏற்படுவதால் வாடிக்கையாளரகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் விற்பனை மோசமாக இருப்பதாக தெரிகிறது.
இதனால் மே 1 ஆம் தேதி முதல் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்வதில்லை என சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர இம்மாத இறுதிக்குள் இந்த பிரச்சினைகள் குறித்து தீர்வு காண இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.
- தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும். குறிப்பிட்ட சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் இந்த அம்சம் சீராக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் சேவையும் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.
இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும், கண்டறிய முடியும். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.
கூடுதலாக பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ என தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது. மேலும், காணாமல் போன சாதனம் தொலைந்து போனாலும் அதனை ஃபைண்ட் மை டிவைஸ் மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.
புதிய ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கின் நோக்கம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போன சாதனங்களின் லொகேஷன் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மற்றும் இதரானவர்கள் லொகேஷன் விவரங்களை இயக்க முடியாது.
- இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் மோட்டோ ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 1.5K pOLED கர்வ்டு டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10+ சப்போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 10MP டெலிபோட்டோ கேமரா, OIS, 50MP செல்ஃபி கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP68 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 125 வாட் வயர்டு மற்றும் 50 வாட் வயர்லெஸ் டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் (68 வாட் சார்ஜர்) விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் ரூ. 27 ஆயிரத்து 999 விலையிலும் 12 ஜி.பி. ரேம் (125 வாட் சார்ஜர்) மாடல் ரூ. 31 ஆயிரத்து 999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் பியூட்டி, லூக்ஸ் லாவெண்டர் மற்றும் மூன்லைட் பியல் நிறங்களில் கிடைக்கிறது.
புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M15 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி M55 5ஜி மாடலுடன் அறிமுகமாக இருக்கிறது. இந்த நிலையில், கேலக்ஸி M15 5ஜி ஸ்மா்ட்போனிற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கேலக்ஸி M15 5ஜி மாடலை வாங்க விரும்புவோர் அமேசான் இந்தியா வலைதளத்தில் இதனை முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வெர்ஷன்களிலும், செலஸ்டியல் புளூ, புளூ டோபேஸ் மற்றும் ஸ்டோன் கிரே என மூன்றுவித நிறங்களிலும் கிடைக்கிறது.
முன்பதிவு செய்வோர் மெமரி மற்றும் நிற வேரியண்டை தேர்வு செய்த பின் முன்பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். பிறகு, ஏப்ரல் 8 ஆம் தேதி மதியம் 12 மணியில் இருந்து நள்ளிரவு 11.59 மணிக்குள் ஸ்மார்ட்போனை வாங்கிடலாம். இந்த ஸ்மார்ட்போனை வாங்க முன்பதிவு செய்வோர் ரூ. 1699 மதிப்புள்ள சாம்சங் 25 வாட் சார்ஜரை ரூ. 299-க்கு வாங்கிட முடியும்.
இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M15 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M15 5ஜி மாடலில் 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், மாலி G57 MC2 GPU, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம்.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யு.ஐ., 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
- இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
- இந்த ஸ்மார்ட்போன் அக்வா ரெட் வேரியண்டிலும் கிடைக்கிறது.
ஐகூ நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் ஐகூ 12 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஐகூ 12 ஸ்மார்ட்போன் லெஜண்ட் மற்றும் ஆல்ஃபா என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அக்வா ரெட் வேரியண்டிலும் கிடைக்கிறது.
புதிய நிறம் தவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஐகூ 12 டெசர்ட் ரெட் ஆனிவர்சரி எடிஷன் ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 52 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 57 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐகூ 12 ஆனிவர்சரி எடிஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்குகிறது. இதனை பயனர்கள் அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் வாங்கிட முடியும். ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 9 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
ஐகூ 12 அம்சங்கள்:
6.78 இன்ச் 2800x1260 பிக்சல் 1.5K LTPO AMOLED ஸ்கிரீன்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்
அட்ரினோ 750 GPU
12 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்
256 ஜி.பி., 512 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS, LED ஃபிளாஷ்
50MP அல்ட்ரா வைடு கேமரா
64MP டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்
- புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை நீக்கும்.
- அதிக சிரமம் இன்றி எளிதாக நீக்கிவிட முடியும்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏ.ஐ. இரேசர் (AI Eraser) எனும் அம்சத்தை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவித்து இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் மேஜிக் இரேசர் என்றே இந்த அம்சம் ஒரு புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை நீக்கும்.
முதற்கட்டமாக இந்த அம்சம் ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12R, ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் ஓபன் மற்றும் ஒன்பிளஸ் நார்டு CE4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு இம்மாதமே வழங்கப்படுகிறது. இது தொடர்பான அப்டேட்கள் விரைவில் வழங்கப்படும்.
புதிய ஏ.ஐ. இரேசர் அம்சம் செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர மேம்பட்ட அல்காரிதம்களை பயன்படுத்துகிறது. இந்த அம்சம் போட்டோ கேலரியில் உள்ள தேவையற்ற பொருட்களை அதிக சிரமம் இன்றி எளிதாக நீக்கிவிட முடியும்.
பயனர்கள் புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற பொருட்கள் அல்லது இடையூறுகளை குறிப்பிட்டதும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவற்றை நீக்கி செயற்கையாக பேக்கிரவுண்டு ஒன்றை உருவாக்கும். இதற்காக உருவாக்கப்படும் பேக்கிரவுண்டு ஒட்டுமொத்த புகைப்படத்துடன் ஒற்று போகும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- காப்புரிமை கோரி விவோ விண்ணப்பித்து இருந்தது.
- இதற்காக உருவாக்கப்படும் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.
விவோ நிறுவனம் உருவாக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டிரோன் கேமரா செட்டப் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் விவோ ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக இந்த சாதனத்திற்கு காப்புரிமை கோரி விவோ விண்ணப்பித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வெளியான தகவல்களில் விவோ உருவாக்கும் புது ஸ்மார்ட்போனில் உள்ள டிரோன் கேமரா, ஆக்டிவேட் செய்ததும் ஸ்மார்ட்போனில் இருந்து தனியே பிரிந்து காற்றில் மிதக்க துவங்கிவிடும். அதன்பிறகு, பயனர்கள் கேமரா எவ்வளவு தூரம் பறக்க வேண்டும் என்றும், கேமரா எந்த கோணத்தில் இருந்து படம்பிடிக்க வேண்டும் என்பதை இதற்காக உருவாக்கப்படும் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.
இந்த சாதனம் எப்போது பொது மக்கள் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இத்தகைய சாதனம் விற்பனைக்கு வந்ததும், ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் முறை முற்றிலுமாக மாறிவிடும். வானில் இருந்து எடுக்கக்கூடிய ஏரியல் ஷாட்களை ஸ்மார்ட்போன் மூலமாகவே எளிதில் எடுத்துவிட முடியும்.
டிரோன் கேமரா கொண்ட புதிய விவோ ஸ்மார்ட்போனில் தலைசிறந்த புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்ட அதிநவீன கேமரா சென்சார்கள் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனினும், இந்த சாதனத்தில் எவ்வளவு பெரிய பேட்டரி வழங்கப்படும் என்பது மர்மமாகவே உள்ளது.
அசத்தலான கேமரா சிஸ்டம், ஸ்மார்ட்போன் துறையில் முற்றிலும் புதிய முயற்சியாக இந்த மாடல் வெளியாகும் போதிலும், இதன் பேட்டரி திறன் தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களை விட குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. மேலும், அடிக்கடி டிரோன் கேமராவை இயக்கும் போது ஸ்மார்ட்போனின் சார்ஜ் வேகமாக குறையவும் வாய்ப்புகள் அதிகம் தான்.
- இதில் 12 ஜி.பி. விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இதில் 70 வாட் அல்ட்ரா சார்ஜ் வசதி உள்ளது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் 5FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 12 ஜி.பி. விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹை ஒ.எஸ். 14, 108MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது லென்ஸ், ஏ.ஐ. லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 70 வாட் அல்ட்ரா சார்ஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் 2436x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
8 ஜி.பி., 12 ஜி.பி. ரேம்
256 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹை ஒ.எஸ். 14
டூயல் சிம் ஸ்லாட்
108MP பிரைமரி கேமரா
2MP லென்ஸ், ஏ.ஐ. கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
32MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யு.எஸ்.பி. டைப் சி
6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
70 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ரிவர்ஸ் சார்ஜிங்
டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொமெட் கிரீன் மற்றும் மீடியோரைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 4 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது.
- தனக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில், ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் நிரம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- பார்சலை திருப்பி கொடுக்க முயன்றபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கடந்த 28-ந்தேதி பிளிப்காட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு ஆர்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அவர் தனக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில், ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் நிரம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அந்த பார்சலை திருப்பி கொடுக்க முயன்றபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் எக்ஸ் தளத்தில் ஸ்மார்ட்போன் அட்டையுடன் கூடிய பெட்டியையும், அதில் ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டார்.
அவரது இந்த பதிவு வைரலாகியது. இதைத்தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனம் அவருக்கு பதிலளித்தது. அதில் நீங்கள் ஆர்டர் செய்ததை தவிர வேறு எதையும் அனுப்புவதற்கு நாங்கள் விரும்ப மாட்டோம். இந்த நிகழ்வுக்காக மிகவும் வருந்துகிறோம். உங்களுக்கு மேலும் உதவி செய்ய தயவு செய்து உங்கள் ஆர்டர் விபரங்களை வழங்கவும் என தெரிவித்துள்ளது.
A #Ghaziabad resident claims he ordered Mobile phone worth Rs22,000 through @Flipkart but instead received stones! Victim claims courier refuses to take back the parcel. So much so for #onlineshopping #onlinefraud @_Kalyan_K #India #mobilephone #infinix @InfinixIndia pic.twitter.com/OkfnMRQ7ma
— AbhishekPatni (@Abhishek_Patni) March 29, 2024
- இந்த ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
போக்கோ நிறுவனம் முற்றிலும் புதிய C61 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் 90Hz HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் G36 பிராசஸர், விர்ச்சுவல் ரேம் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரீமியம் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் போக்கோ C61 ஸ்மார்ட்போனில் வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 8MP ஏ.ஐ. டூயல் கேமரா செட்டப், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
போக்கோ C61 அம்சங்கள்:
6.71 இன்ச் 1650x720 பிக்சல் HD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர்
IMG பவர் வி.ஆர். GE8320 GPU
4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்
64 ஜி.பி., 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 14
டூயல் சிம் ஸ்லாட்
8MP பிரைமரி கேமரா, இரண்டாவது கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
10 வாட் சார்ஜிங்
போக்கோ C61 ஸ்மா்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மார்ச் 28 ஆம் தேதி துவங்குகிறது. முதல் நாள் விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த மாடல் ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும்.
- போக்கோ C51 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
- இந்த மாடலில் இரட்டை கேமராக்கள் வழங்கப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் (மார்ச் 26) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இது தொடர்பான டீசர்களில் புதிய போக்கோ C61 ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய போக்கோ C51 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
போக்கோ C61 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மார்ச் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் டீசர்களின் படி புதிய போக்கோ C61 ஸ்மார்ட்போன் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட HD+ டிஸ்ப்ளே, 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கிளாஸ் பேக் மற்றும் கேமராவை சுற்றி கோல்டன் ரிங் டிசைன் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. போக்கோ C61 ஸ்மார்ட்போன் ரெட்மி A3 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Radiate confidence with a golden ring and glass back design. ✨
— POCO India (@IndiaPOCO) March 22, 2024
Launching on 26th March,12:00 PM on @Flipkart
Know more? https://t.co/7HqmsPUx7u#POCOC61 #BeyondStunning #POCOIndia #POCO #MadeOfMad #Flipkart pic.twitter.com/WoeBlRmxBQ
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்