search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivakumar"

    குட்கா ஊழல் வழக்கில் கைதான சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #GutkhaScam #CBI
    சென்னை:

    தமிழகத்தின் மிக முக்கிய ஊழல் வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படும் குட்கா வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உட்பட பல முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் இந்த வழக்கு மிகத்தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படும் இந்த வழக்கில் மாதவராவ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கடந்த மாதம் சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.



    இதையடுத்து, சமீபத்தில் ஜாமீன் கோரி சிவக்குமார் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு குறித்து சிபிஐ தனது பதிலை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதில் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், சிபிஐ தரப்பு பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
    பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு என்று நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Sivakumar #Sabarimala
    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

    இவர்களை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டம் வலுத்த நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். 

    பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. 

    இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்’.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். #GutkhaScam
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தனர். இதற்காக பெரும் தொகை அமைச்சர், டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கப்பட்டது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இதன் அடிப்படையில், சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த செப்டம்பர் 5ந்தேதி குட்கா கிடங்கு உரிமையாளர்கள், மாதவராவ், சீனிவாசராவ், பங்குதாரர் உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ணன் பாண்டியன் ஆகியோரை முதலில் கைது செய்தனர்.

    பின்னர், கடந்த மாதம் 25-ந்தேதி, திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளரும், முன்னால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியுமான சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர், இவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த நிலையில், விசாரணை முடிந்து, இன்று காலையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், சிவக்குமாரை ஆஜர்படுத்தினர். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். #GutkhaScam
    பல்லடத்தில் பொன்னி ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தை திறந்து வைத்த நடிகர் சிவகுமார், டீ, காபி குடிப்பதை யார் கற்றுத்தந்தது என்று பேசியிருக்கிறார். #Sivakumar
    பல்லடத்தில் உள்ள பொன்னி ஆஸ்பத்திரி தனது மருத்துவ சேவையை மேலும் பல சிறப்பு வசதிகளுடன் விரிவாக்கம் செய்து புதிய கட்டிடத்தை 100 படுக்கைகளுடன் நவீன வசதிகளுடன் அமைத்துள்ளது.

    இதன் திறப்புவிழா நடைபெற்றது பொன்னி ஆஸ்பத்திரி டாக்டர் கே.சிவக் குமார் அனைவரையும் வரவேற்றார். புதிய கட்டி டத்தை நடிகர் சிவகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,-

    பல்லடம் நகரில் பெரிய ஆஸ்பத்திரியை பொன்னி ஆஸ்பத்திரி நிர்வாகம் உருவாக்கி உள்ளது.உங்கள் ஆரோக்கியம் உங்களிடம் தான் உள்ளது நமது முன் னோர்கள் பழைய சோறு சாப்பிட்டனர். நாம் காபி, டீ குடிக்கிறோம். யார் கற்றுத்தந்தது இந்த பழக்கம். காலையில் பழைய சோறுடன் மோர் கலக்கி 5 வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் குடல் நோய் நீங்கும். காபி, டீ குடித்தால் பின்னாளில் வயிறு கெட்டுப்போகும். சாப்பிடும்போது தரையில் அமர்ந்து சம்மனம் போட்டு சாப்பிட வேண்டும்,



    குனிந்து கோலமிட வேண்டும், மாவு ஆட்ட வேண்டும், இவையெல்லாம் அடிப்படையான நமது வழக்கங்கள். இவைகளை மறந்துபோனதால் உடல் நலம் கெட்டது.

    இவ்வாறு நடிகர் சிவகுமார் பேசினார்.
    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித் மற்றும் ஷாலினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித், நடிகை ஷாலினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Suriya #Sivakumar

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.

    இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

    நடிகர், இயக்குனர் சேரன் - கலைஞர் பராசக்தியில் புரட்டிப்போட்ட தமிழ்சினிமாவில்தான் இன்னும் நாங்கள் இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம்... இச்சமூக மாற்றத்தில் முக்கிய பங்களித்த அய்யா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    நடிகை கஸ்தூரி - உதய சூரியன் அஸ்தமித்தது. உன் முகம் காண குடுத்துவைக்கவில்லை. அந்நிய நாட்டிலிருந்து அஞ்சலி.

    இயக்குனர் ராம் - அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் நிலப்பரப்பை, தமிழர் மனதை, தமிழ்த் தேசத்து அரசியலைத் தன் குரலாலும் தமிழாலும் பகுத்தறிவாலும் தீர்மானித்த நிர்மாணித்த அபூர்வமான ஒரு வரலாற்று நாயகன் கலைஞர். அவர் எப்படி காலமாக முடியும்? வரலாறு இருக்கும் வரை அவரும் இருப்பார். சூரியனுக்கு தமிழ் வணக்கங்கள்.

    நடிகர் விஷால் - Deeply saddened 2 hear dat our iconic leader #KalaignarKarunanidhi ayya is no more An irreplaceable leader.nobody cn match his contribution n politics and http://cinema.My  deepest condolences 2 his family n his http://followers.RIP .i request Tn govt 2 allot marina beach

    நடிகை ரம்யா கிருஷ்ணன் - A person that departs from this earth never truly leaves, for they are still alive in our hearts, through us, they live on. My condolences. #RIPKalaingr

    நடிகர், இயக்குனர் சசிகுமார் - #RIPKalaignar Great leader and tamil writer #karunanidhi ayya ! Will be remembered forever..

    நடிகை வரலட்சுமி சரத்குமார் - A one man army..Fighter.. Writer..Politician..A man with many faces..75 years...No man can achieve what he did..I'm sure even after this he will continue to live on in all our hearts...#Respect #Karunanidhi #RIP sir.. strength to his family..A true #Leader in very way..@mkstalin

    இசையமைப்பாளர் அனிருத் - End of a legendary era. Heartfelt condolences.  #RIPKalaignar

    நடிகர் ஜெயம் ரவி - The end of greatness Pride of Tamilnadu! My heartfelt condolences to the entire family. RIP Ayya #KalaignarKarunanidhi

    நடிகர் சதீஷ் - கலைஞர் காலமானார்.... இல்லை அவர் இருந்தவரை தமிழுக்கும் தமிழர்க்கும் “பொற்காலமானார்” #சொர்க்கம்இனிதமிழ்பயிலும்

    இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா - #TamilNadu has lost a great leader of our times. We people and Our #Tamil language will miss #Kalaignar #Karunanidhi my deepest condolences to the entire family members.

    இயக்குனர் கார்த்திக் நரேன் - கலை துறையும் இந்த நாடும் தங்களை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் அய்யா. ஆழ்ந்த இரங்கல். #RIPkalaingar

    நடிகர் அதர்வா - Deeply Saddened to hear about the fall of such a great leader, who fought every battle till the very End. May his soul rest in Peace and all strength to his family. #RIPkalaingar

    இயக்குனர் வெங்கட் பிரபு - அவரின் தமிழ் பற்றுக்கு நிகர் அவர் மட்டுமே. என்றும் நம் மனதில் அஸ்தமிக்காத சூரியன். #riplegend #ripkalaingar

    இசையமைப்பாளர், பாடகர் கங்கை அமரன் - தென்பாண்டித் தமிழே! என் சிங்காரக் குயிலே! இசைபாடும் காவியம்!. இது ரவிவர்மாவின் ஓவியம்! பாசமென்னும் காவியம்! உனைப் பாடவேண்டும் பாயிரம்!

    இன்னும் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

    Not Spell Check
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சிவகுமார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.

    இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் சிவகுமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், பெரியார், ராஜாஜிக்கு பிறகு 95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

    2. பெரியார் - எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.

    3. அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர்.

    4. அரசியலில் சாதித்ததற்கு இணையாக - கலை இலக்கியத்திலும் 60 ஆண்டுகளுக்கு மேல் சாதனை புரிந்தவர்.

    5. 1950களில் தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர்.

    6. குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா - போன்றவை அவரது புலமைக்குச்சான்றானது.

    7. பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் - அவர் வசனம் பேசி நடித்தேன்.

    8. என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார்.

    9. சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் - கார்த்தி - முதல் படம் பருத்திவீரன் பார்த்து ஆசி கூறியவர்.

    10. தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும். 

    அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் / பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் காஞ்சி வீரன்சை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சிவக்குமார் கூறியுள்ளார். #PattaiyaKelappu #CSG #TNPL2018
    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் வெற்றியை பெற்றது.

    திண்டுக்கல்லை அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த 22-வது ‘லீக்’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணி முதலில் ‘பேட்டிங்’ செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் கார்த்திக் 44 பந்தில் 76 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), முருகன் அஸ்வின் 17 பந்தில் 34 ரன்னும் (4 சிக்சர்), கேப்டன் கோபிநாத் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாபா அபராஜித் 2 விக்கெட்டும், சுனில்சாம், அவுசிக் சீனிவாஸ், திவாகர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய காஞ்சி வீரன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

    காஞ்சி வீரன்ஸ் அணியில் அதிக பட்சமாக அருண் 19 பந்தில் 27 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), விஷால் வைத்யா 18 பந்தில் 24 ரன்னும் (4 பவுண்டரி), திவாகர் 24 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    முருகன் அஸ்வின், சம்ருத்பட், சிவக்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹரீஷ் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர்

    இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    5 ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு முதல் வெற்றியை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வந்தோம். இந்த ஆட்டத்தில் 3 பகுதிகளிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) நன்றாக செயல்பட்டோம். இதனால் வெற்றியை பெற முடிந்தது.

    மிடில் ஓவர்களில் தடுமாறுவது கிரிக்கெட்டில் நடக்க கூடியதுதான். சில நேரங்களில் விக்கெட்டை நிலைநிறுத்த சில ஓவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். என்றாலும் இறுதியில் நல்ல ஸ்கோரை குவித்து விட்டோம்.

    ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்ததால் காஞ்சி வீரன்ஸ் அணியினர் நன்றாக ஆடி நெருங்கி வந்தனர். எங்களது பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சி வீரன்ஸ் சந்தித்த 5-வது தோல்வியாகும். தோல்வி குறித்து அந்த அணி வீரர் சுனில் சாம் கூறும்போது, “இந்த ஆடுகளத்தில் 181 ரன்னை சேஸ் செய்ய இயலும். ஆனால் தொடகத்தில் ரன் அவுட் முறையில் விக்கெட்டுகளை இழந்தோம். இது பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் எங்களது பீல்டிங் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்” என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை வருகிற 3-ந் தேதி எதிர்கொள்கிறது.

    காஞ்சி வீரன்ஸ் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 5-ந் தேதி சந்திக்கிறது.

    இன்று நடைபெறும் 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டூட்டி பேட்ரியாட்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளியும், திருச்சி வாரியர்ஸ் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளியும் பெற்றுள்ளன. ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும். #PattaiyaKelappu #CSG #TNPL2018
    மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் சிவகுமார், பாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் என்று கூறியிருக்கிறார். #Balakumaran #Sivakumar
    இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

    பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிவகுமாரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது,

    பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள். சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தை தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர் பாலகுமாரன். 150 நாவல்கள் எழுதுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது. 

    பாலகுமாரன் எழுத்துக்களுக்கு பிரபல பத்திரிகைகள் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார். கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர் தான் திரைக்கதை வசனம். காதலன், ஜென்டில்மேன், ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத்துக்களை அர்பணித்துள்ளார்.

     

    பாலகுமாரனுக்கு 45 வயதில் தான் ஆன்மிக ஆர்வம் வந்தது. அப்போது திருவண்ணாமலைக்கு செல்ல ஆரம்பித்த அவர் அதன் பின்னர் ஆன்மீகத்திலேயே பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர் பட்டினத்தார் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஆன்மீக நூல் ஒன்றை எழுதியுள்ளார். என்னை பொறுத்த வரை பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு மனைவி உண்டு, காதல் மனைவி உண்டு. சூர்யா மற்றும் கௌரி என்று இரு குழந்தையும் உண்டு. அவரை முழுமையாக வாழ்ந்த மனிதராக தான் நான் பார்க்கிறேன். சித்தர்களின் வார்த்தைகள் படி ஆன்மா மட்டுமே நிரந்தரம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்றார்.
    ×