search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shashi tharoor"

    • பா.ஜ.க.வுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் கட்சி செயல்பாடுகளை மாற்றுவேன்.
    • செயலற்று கிடக்கம் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவுக்கு புத்துயிரூட்டுவேன்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேயும், கேரளாவை சேர்ந்தவருமான சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சசி தரூர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். கட்சியின் அடித்தட்டு நிர்வாகிகளுக்கு உண்மையிலேயே அதிகாரம் வழங்க வேண்டும். நான் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்துக்கான வேட்பாளர் ஆவேன். நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், உதய்பூர் சிந்தனை அமர்வில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை அப்படியே முழுமையாய் செயல்படுத்துவேன்.

    உட்கட்சி ஜனநாயகத்தை இன்னும் வலுப்படுத்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்துவேன். 25 ஆண்டுகளாக செயலற்று கிடக்கும் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவுக்கு புத்துயிரூட்டுவேன். கட்சி விவகாரங்களிலும் ஆட்சி விவகாரங்களிலும் பா.ஜ.க.வின் அதிகார மயமாக்கலுக்கு எதிரான நம்பகமான மாற்றை காங்கிரஸ் வழங்க வேண்டும். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் கட்சியின் தற்போதைய செயல்பாடுகளை மாற்றிக் காட்டுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
    • தனக்கும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் நடப்பது நட்பு போட்டி என்று சசிதரூர் கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காந்தி குடும்பத்து ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. மேலும் சசிதரூரை போட்டியில் இருந்து வாபஸ் பெற பலர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி மறுத்துள்ளார். தங்கள் குடும்பம் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் தேர்தல் நியாயமாக நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சூழலில் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக சசிதரூர் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல்கள் வந்தன.

    இந்த தகவலை சசிதரூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனக்கும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் நடப்பது நட்பு போட்டி. இதில் இருந்து நான் விலகப்போவது இல்லை. ஓட ஆரம்பித்து விட்டேன். இனி நிறுத்தப்போவதில்லை. இறுதி வரை போராடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

    • இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.
    • நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன்.

    சென்னை :

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த நிர்வாகியும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தமிழக காங்கிரசில் உள்ள தேசிய கமிட்டி உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்பதற்காக நேற்று சென்னை வந்தார்.

    சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து சசிதரூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சரிந்துள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன். புத்துயிர் ஊட்டுவேன். இதுவரை அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. இதில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன். தனக்கு பிரசாரம் மேற்கொள்ள நேரம் குறைவாக உள்ளது. இதனால் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆதரவு கேட்டு வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சசிதரூர் சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார்.

    • தேர்தலில் நான் போட்டியிடுவதை மூத்த நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை.
    • சிலர் ராகுல் காந்தியை சந்தித்து எனது வேட்பு மனுவை வாபஸ் பெறக்கூறுமாறு தெரிவித்து உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருகிற 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரளாவை சேர்ந்த சசிதரூரும் போட்டியிடுகிறார்கள். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபோல பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சசிதரூருக்கு அவரது சொந்த மாநிலமான கேரளாவில் கூட ஆதரவு இல்லை. கேரள மாநில காங்கிரஸ் தலைவரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுபற்றி சசிதரூர் கூறியதாவது:-

    தேர்தலில் நான் போட்டியிடுவதை மூத்த நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை. அவர்களில் சிலர் ராகுல் காந்தியை சந்தித்து எனது வேட்பு மனுவை வாபஸ் பெறக்கூறுமாறு தெரிவித்து உள்ளனர்.

    அதற்கு அவர் மறுத்து விட்டார். தலைவரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை.
    • தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்க மாட்டேன்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி.சசிதரூர் போட்டியிடும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சுதாகரன், மற்றொரு வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் வந்த சசிதரூர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    எனது வேட்பு மனுவை வாபஸ் பெற வலியுறுத்துமாறு, ராகுல் காந்தியிடம் சில கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை அவரே என்னிடம் தெரிவித்தார். கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி இருக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருவதை அவர் (ராகுல் காந்தி) எனக்கு நினைவு கூர்ந்தார். இந்த தேர்தலில் போட்டியிட்டவர்களை வாபஸ் பெறச் சொல்ல மாட்டேன் என்று என்னிடம் அவர் குறிப்பிட்டார்.

    கட்சியின் பெரிய தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை, உண்மையில், நான் நாக்பூர், வார்தா மற்றும் ஐதராபாத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்தேன். அவர்கள்தான் என்னைப் போட்டியிடச் சொல்கிறார்கள், பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள். நான் அவர்களிடம் பின்வாங்க மாட்டேன் என்று உறுதியளித்தேன்.

    இதுவரை எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் எனக்கு பலத்தை அளிக்கிறது. எனது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் இளம் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள். அனைவரின் ஆதரவும் எனக்கு தேவை, யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.

    யார், யாருக்கு வாக்களிப்பாளர்கள் என்பது யாருக்கும் தெரியாது. தங்கள் விருப்பம் மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப வாக்களிக்கலாம். யார் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவரை தயார்படுத்தலாம். இவ்வாறு சசிதரூர் தெரிவித்தார்.

    • நேரு-காந்தி குடும்பம் வெளிப்படையாகவே ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது.
    • வேட்பாளர்கள் இடையேயான கருத்து பரிமாற்றம், கட்சிக்கும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேயுடன் நேரடியாக மோதுகிற முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கும், பா.ஜ.க. அரசு எந்திரத்தை கையாள்வதற்கும் ஏற்ற வகையில் சில முன்னுரிமை திட்டங்களை கோடிட்டு காட்டி இருக்கிறேன்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவிவாதம் நடத்தலாம் என்ற யோசனையை திறந்த மனதுடன் ஏற்கிறேன்.

    எங்களுக்கு இடையே சித்தாந்த ரீதியில் வேறுபாடுகள் இல்லை. மாறாக நாங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள நோக்கங்களை அடைவதற்கு எப்படி செல்ல போகிறோம் என்பதுதான் இங்கே கேள்வி.

    வேட்புமனு தாக்கல் கடைசி நாளுக்கும், வாக்குப்பதிவு நாளுக்கும் இடையே ஏறத்தாழ 2½ வாரங்கள்தான் இடைவெளி உள்ளது. எனவே, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை (வாக்காளர்கள்) சென்றடைவது என்பது நடைமுறையில், பயண ரீதியில் மிகக் கடினமானது.

    அந்த வகையில், ஒரு பொது மேடையில் வேட்பாளர்கள் தோன்றி கட்சிக்கான தங்களது யோசனைகளை, தொலைநோக்குப் பார்வையை ஆக்கபூர்வமான விதத்தில் பரிமாறிக்கொள்ளலாம். இது பிரதிநிதிகளுக்கு சென்றடைய வசதியாக இருக்கும்.

    அதே நேரத்தில், ஓட்டு போடாதவர்களை- அதாவது மற்ற காங்கிரஸ் தொண்டர்களையும், ஊடகங்களையும், பொதுமக்களையும் இது நிச்சயமாக அதிகளவில் கவரும்.

    வேட்பாளர்கள் இடையேயான கருத்து பரிமாற்றம், கட்சிக்கும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

    உதாரணத்துக்கு இங்கிலாந்தில் நடந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் போட்டியை கூறலாம். தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக தலைவர் பதவிக்கு டஜனுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வெளிப்பட்டதை பார்த்தோம். அதே போன்ற ஒரு சூழலை பிரதிபலிப்பது காங்கிரஸ் கட்சியின் மீதான ஆர்வத்தை தேசிய அளவில் அதிகரிக்கும். அதிக வாக்காளர்கள் கட்சியை நோக்கி வர ஊக்குவிக்கும்.

    நேரு-காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைமை பதவிக்கு வந்தால், அந்த குடும்பம் ஒரு முக்கிய இடத்தை தொடர்ந்து பிடிக்குமா என கேட்கிறீர்கள்.

    நேரு-காந்தி குடும்பம் வெளிப்படையாகவே ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. அது எப்போதும் தொடரும். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இதயங்களில் அவர்களுக்கு சிறப்பான இடம் உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளதால் எந்த சந்தேகமும் இல்லை.
    • தேர்தலை நேர்மையாக நடத்த சோனியா காந்தி குடும்பத்தினர் விருப்பம்.

    நாக்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் போட்டியிடுவது மட்டும் உறுதியாகி உள்ளது.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தீக்சாபூமி நினைவு சின்னத்தை இன்று பார்வையிட்ட சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார். செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தினருக்கு பிடித்த வேட்பாளர் மல்லிகார்ஜூன் கார்க்கேவா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சசிதரூர் தெரிவித்துள்ளதாவது:

    காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் (சோனியா, ராகுல், பிரியங்கா) சந்தித்துப் பேசினேன். கட்சித் தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யாரும் இல்லை என்றும், அப்படிப்பட்ட வேட்பாளர் யாரும் இருக்க மாட்டார் என்றும் அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவர்கள் நல்ல நேர்மையான தேர்தலை நடத்த விரும்புகிறார்கள்.

    காந்தி குடும்பம் நடுநிலையாகவும், கட்சி பாரபட்சமற்றதாகவும் இருக்கும். சிறந்த முறையில் இந்த தேர்தலை நடத்தி கட்சியை பலப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். கட்சித் தலைவர் (சோனியாகாந்தி) என்னிடம் உறுதியளித்துள்ளதால் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வரைபடம் வெளியானதும், அதனை பாரதிய ஜனதா கட்சியினர் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர்.
    • சசிதரூர் இதுபோல சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் சசிதரூர் எம்.பி.யும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் கட்சி தொண்டர்களுக்கு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார்.

    இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் கட்சியை சீர்படுத்தவும், வெற்றிக்கோட்டை நோக்கி அழைத்து செல்லவும் என்னென்ன செய்வேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

    அதோடு அந்த வாக்குறுதி பட்டியலில் இந்திய வரைபடமும் இடம் பெற்றிருந்தது. அந்த வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் லடாக் பகுதிகள் இடம் பெறவில்லை.

    இந்த வரைபடம் வெளியானதும், அதனை பாரதிய ஜனதா கட்சியினர் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர். பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா இதுகுறித்து கூறும்போது, இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என விரும்பும் சசிதரூர், இந்தியாவை துண்டாட நினைக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை அறிந்த சசிதரூர், தனது தேர்தல் அறிக்கையில் இருந்த தவறான இந்திய வரைபடத்தை உடனே நீக்கிவிட்டார். மேலும் தவறான பதிவு வெளியிட்டதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு கொண்டார்.

    தனது பிரச்சார குழுவினர் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், இதற்காக வருந்துவதாகவும் அவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

    சசிதரூர் இதுபோல சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோல அவர் பலமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    2019-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் போதும் சசிதரூர் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடம் பெறாமல் இருந்தது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    • இந்த தேர்தலில் போட்டியிட சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரியும், அக்கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர் வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து பிற்பகல் அக்கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 


    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை அவர் வழங்கினார். அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


    இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (திரிபாதி பிரிவு) தேசியத் தலைவராக அவர் பணியாற்றி உள்ளார். திரிபாதி போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி உறுதியாகி உள்ளது.

    • டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார்.
    • திக்விஜய் சிங் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

    காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க மறுத்ததால் அந்த பதவிக்கான தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட்டை நிறுத்த மேலிடம் முடிவு செய்தது. கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்-மந்திரியாக்கவும் சோனியா முடிவு செய்தார்.

    இதற்கு கெலாட் உடன்படவில்லை. முதல்-மந்திரி பதவியை விட்டு விலக மறுத்தார். அவரது ஆதரவு 90 எம்.எல்.ஏ.க்கள் போட்டி கூட்டம் நடத்தினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்தார்.

    அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவர் தேர்தலில் நிறுத்த அவர் முடிவு செய்தார். இது தொடர்பாக சோனியா காந்தி மூத்த நிர்வாகிகளுடன் 2 தினங்களாக ஆலோசனை நடத்தினார்.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய்சிங், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், மீராகுமார் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திடீர் திருப்பமாக திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இதை அவர் அதிகார பூர்வமாக இன்று தெரிவித்தார்.

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார். அப்போது அவர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார். நாளை மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் திக் விஜய் சிங் தெரிவித்தார்.

    அதிருப்தி குழு தலைவர்களில் ஒருவரான சசிதரூரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். அவரும் நாளை மனு தாக்கல் செய்கிறார்.

    இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான களத்தில் திக் விஜய் சிங், சசிதரூர் போட்டியிடுகிறார்கள்.

    • ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சி மோதலால் அசோக் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல்.
    • காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர் நாளை வேட்புமனு தாக்கல்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்ட நிலையில், இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவரை எதிர்த்து கேரள எம்பி சசிதரூரும் களம் இறங்கி உள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் ராஜஸ்தான் காங்கிரசிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சோனியா காந்தி, கெலாட் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த தேர்தலில் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது.  நாளை காலை 11 மணிக்கு சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இன்று காலை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னதாக அவர் கேரள மாநிலத்தில் ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வந்தார். வேட்புமனு தாக்குதலுக்காக நேற்று கேரளாவில் இருந்து அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ஒரே விமானத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலும் டெல்லி சென்றுள்ளார்.

    • காங்கிரஸ் தலைவராக ராகுலை தேர்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • அசோக் கெலாட்டை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் களம் இறங்க உள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ம் தேதி தொடங்கியது.

    30-ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால் சோனியா, ராகுல் சார்பில் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் நிறுத்தப்படுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் களம் இறங்க உள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 30ம் தேதி காலை 11 மணிக்கு சசி தரூர் மனு தாக்கல் செய்ய உள்ளார் என அக்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×