search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் தலைவர் தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
    • காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.

    பாராளுமன்றத்துக்கு 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.

    தற்காலிக தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ராகுலை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை.

    இதற்கிடையே காங்கிரசில் அதிருப்தி தலைவர்களாக உருவான ஜி-23 தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு பதிலாக புதிதாக ஒருவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    அதன் பேரில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நாடு முழுவதும் சென்று காங்கிரசாரிடம் ஆதரவு திரட்டினார்கள்.

    இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 68 இடங்களில் கடந்த திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளில் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 9,500-க்கும் மேற்பட்ட வர்கள் வாக்களித்தனர். 96 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    மாநில தலைநகரங்களில் நடந்த ஓட்டுப்பதிவுக்கு பிறகு ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இன்று காலை 10 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.

    • 5 ஏஜெண்டுகள் முன்னிலையில் அனைத்து மாநில வாக்குகளும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு கலைக்கப்பட்டன.
    • இன்று பிற்பகலில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பிறகு முடிவு அறிவிக்கப்படுகிறது.

    பாராளுமன்றத்துக்கு 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.

    தற்காலிக தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ராகுலை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை.

    இதற்கிடையே காங்கிரசில் அதிருப்தி தலைவர்களாக உருவான ஜி-23 தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு பதிலாக புதிதாக ஒருவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன் பேரில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நாடு முழுவதும் சென்று காங்கிரசாரிடம் ஆதரவு திரட்டினார்கள்.

    இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 68 இடங்களில் கடந்த திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளில் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 9,500-க்கும் மேற்பட்ட வர்கள் வாக்களித்தனர். 96 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    மாநில தலைநகரங்களில் நடந்த ஓட்டுப்பதிவுக்கு பிறகு ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

    இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 5 ஏஜெண்டுகள் முன்னிலையில் அனைத்து மாநில வாக்குகளும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு கலைக்கப்பட்டன.

    பிறகு அவை 100, 100 கட்டுகளாக கட்டப்பட்டன. அந்த பணி முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகலில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பிறகு முடிவு அறிவிக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மொத்தம் உள்ள 711 பேரில் 62 பேர் வாக்களிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளித்தது.
    • அகில இந்திய தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் நிறைந்த பொறுப்பு வழங்கப்பட்டும் இத்தனை பேர் வாக்களிக்க வராதது கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 711 வாக்காளர்கள் உள்ளனர்.

    அவர்கள் வாக்களிப்பதற்காக சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. ஆர்வமுடன் பலர் வரிசையில் நின்று வாக்களித்து சென்றார்கள்.

    மாலை 4 மணி வரை 649 பேர் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 711 பேரில் 62 பேர் வாக்களிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளித்தது.

    அகில இந்திய தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் நிறைந்த பொறுப்பு வழங்கப்பட்டும் இத்தனை பேர் வாக்களிக்க வராதது கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    தமிழ்நாட்டை சேர்ந்த சில நிர்வாகிகள் வெளிமாநிலங்களில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கேரள மாநில பொறுப்பாளராக இருக்கும் அகில இந்திய செயலாளர் முன்னாள் எம்.பி. விசுவநாதன் சென்னைக்கு வந்து வாக்களித்தார். ப.சிதம்பரம் டெல்லியில் வாக்களித்தார். தாம்பரம் சிவராமன் ஹசீனா சையத் ஆகியோர் ஆந்திராவில் வாக்களித்துள்ளார்கள்.

    இதுதவிர ராகுல் நடைபயணத்தில் இருக்கும் சி.டி.மெய்யப்பன், ஜோதிமணி, காயத்ரி ராஜ் முரளி, டாக்டர் நிர்மல், வக்கீல் சுதா, ஜோதி மகேந்திரன் ஆகியோர் பெல்லாரியில் வாக்களிததுள்ளார்கள்.

    இவர்களையும் சேர்த்தால் 38 பேர் வாக்களிக்கவில்லை. அவர்களிடம் விளக்கம் கேட்க தமிழக காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    • காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க முடியும்.
    • நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை வெளிபடுத்துகிறோம்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிட்டனர். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வாக்களித்தனர், கர்நாடகா மாநிலத்தில் ராகுல்காந்தி தமது வாக்கை பதிவு செய்தார்.

    மாலை 4.30 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அக்டோபர் 19-ந்தேதி (நாளை மறுநாள்) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் கேரளா மாநிலத்தில திருவனந்தபுரத்தில் தமது வாக்கை பதிவு செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கட்சித் தலைவரை ஜனநாயக முறையில் தேர்வு செய்யும் நிகழ்வில் பங்கேற்றிருப்பது என்பது ஒட்டுமொத்த காங்கிரஸுக்கும் பெருமையளிக்கும் தருணம் என்றார்.

    காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க முடியும் என்றும், நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை வெளிபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சியில் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதிபட கூறினார். இதனிடையே, ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படியே வாக்களித்தனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் திரிவேதி குறிப்பிட்டார். இதுபோன்ற தேர்தல் வேறு எந்த கட்சியிலும் நடந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • வாக்குப்பதிவுக்காக சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • நாளை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதால் நாளை (திங்கள்) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் இருவரும் களத்தில் மோதுகிறார்கள்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில தலைவர்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள். இந்தியா முழுவதும் 9,300 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. வாக்களிக்க தேவையான ஓட்டுப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல், ஓட்டு சீட்டுகள் டெல்லியில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் 711 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவுக்காக சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ஓட்டுச்சீட்டு வழங்கப்படும். அந்த ஓட்டுச்சீட்டில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் இருவரது பெயரும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றுள்ளது.

    ஓட்டுச்சீட்டில் கவுண்டர் பாயிலில் வாக்காளர் பெயர், வரிசை எண், பதவி உள்ளிட்ட விபரங்கள் நிரப்பப்பட்டு தேர்தல் அதிகாரி கையெழுத்து போட்டு வாக்காளரிடம் வழங்கப்பட்டுவிடும்.

    ஓட்டுச்சீட்டை பெற்றுக்கொண்டு மறைவிடத்துக்கு சென்று யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவரது பெயருக்கு எதிரில் 'டிக்' செய்து பெட்டியில் போட வேண்டும்.

    தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் அதிகாரியாக பிரதாப் பானுசர்மா, உதவி தேர்தல் அதிகாரிகளாக கேரளாவை சேர்ந்த சனல், கர்நாடக எம்.எல்.ஏ. அஞ்சலி ஆகியோர் வந்துள்ளார்கள். பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை இரவே டெல்லி கொண்டு செல்லப்படும்.

    20-ந்தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும். அப்போது பதிவான வாக்குகள் அனைத்தையும் மொத்தமாக கொட்டி 100 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டப்படும். அதன்பிறகு பிரித்து வேட்பாளர் வாரியாக பிரித்தெடுத்து எண்ணப்படும்.

    எந்த மாநிலத்தில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தது என்பது தெரியாமல் இருக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 4 ஓட்டு பெட்டிகள் நாளை வருகின்றன.
    • நாளை மறுநாள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை மறுநாள் (17-ந்தேதி) நடக்கிறது.

    தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளார்கள். இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஓட்டு பெட்டிகளும், ஓட்டு சீட்டுகளும் டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் வாக்குரிமை பெற்றவர்கள் ஆவார்கள்.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் 710 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்கள் வாக்களிப்பதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது.

    தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 4 ஓட்டு பெட்டிகள் நாளை வருகின்றன. நாளை மறுநாள் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 180 வாக்குகள் வீதம் பிரிக்கப்படுகிறது.

    தேர்தல் அதிகாரிகளாக வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் செயல்படுவார்கள். வாக்களிக்க வருபவர்கள் சத்தியமூர்த்தி பவன் அரங்கில் அமர வைக்கப்படுவார்கள்.

    ஒவ்வொருவருக்கும் 'கியூ ஆர்' கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க செல்ல வேண்டும். முதலில் அவரது பெயர், ஊர், பொறுப்பு உள்ளிட்ட பெயர் விபரம் சரிபார்க்கப்படும்.

    பின்னர் ஒரு ஓட்டுச் சீட்டு வழங்கப்படும். ஓட்டு சீட்டில் முதல் பெயராக மல்லிகார்ஜூன கார்கே பெயர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் அச்சிடப்பட்டு உள்ளது. 2-வது பெயராக சசிதரூர் பெயர் உள்ளது.

    வாக்குச்சீட்டின் அடியில் எந்த மாநிலம், வாக்காளர் பெயர், வரிசை எண், இடம் ஆகிய விபரங்கள் கேட்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும். பின்னர் அந்த கவுண்டர் பாயிலை வாக்காளரிடமே கிழித்து கொடுத்து விடுவார்கள்.

    வாக்குச் சீட்டுடன் வாக்களிக்க மறைவான இடத்துக்கு செல்ல வேண்டும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் முத்திரை மூலம் யாருக்கு ஓட்டுப்போட விருப்பமோ, அந்த பெயருக்கு எதிரே உள்ள இடத்தில் முத்திரை வைத்து ஓட்டுப்பெட்டியில் போட வேண்டும்.

    பின்னர் அந்த பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்படும். டெல்லியில் வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து மாநிலங்களிலும் இருந்து கொண்டு செல்லப்படும் வாக்குச் சீட்டுகளை ஒன்றாக கொட்டி கலந்து அதன்பிறகு எண்ண தொடங்குவார்கள். 20-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    • காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 17-ந்தேதி நடக்கிறது.
    • 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல், 17-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும், முன்னாள் மத்திய மந்திரி சசிதரூருக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    இருவரும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    வாக்குப்பதிவு ஏற்பாடுகள்

    இந்த தேர்தலில் சென்னை உள்பட அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைநகரங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் 17-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மேலும் டெல்லியில் உள்ள கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்திலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இதற்கான விரிவான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஓட்டு பெட்டிகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த தேர்தலில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் தங்கள் வாக்கினை சொந்த மாநிலங்களில் அல்லது டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்தான் (இரண்டில் ஒன்றை அவர்கள் விருப்பபப்படி தேர்வு செய்து) செலுத்த வேண்டும் என்று கட்சி மேலிடம் நேற்று அறிவித்துள்ளது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஓட்டு போடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாரபட்சமின்றி இருக்கவும், தேர்தல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த தகவல்களை கட்சி மேலிடம் சார்பில் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    • பா.ஜ.க.வுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் கட்சி செயல்பாடுகளை மாற்றுவேன்.
    • செயலற்று கிடக்கம் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவுக்கு புத்துயிரூட்டுவேன்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேயும், கேரளாவை சேர்ந்தவருமான சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சசி தரூர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். கட்சியின் அடித்தட்டு நிர்வாகிகளுக்கு உண்மையிலேயே அதிகாரம் வழங்க வேண்டும். நான் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்துக்கான வேட்பாளர் ஆவேன். நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், உதய்பூர் சிந்தனை அமர்வில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை அப்படியே முழுமையாய் செயல்படுத்துவேன்.

    உட்கட்சி ஜனநாயகத்தை இன்னும் வலுப்படுத்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்துவேன். 25 ஆண்டுகளாக செயலற்று கிடக்கும் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவுக்கு புத்துயிரூட்டுவேன். கட்சி விவகாரங்களிலும் ஆட்சி விவகாரங்களிலும் பா.ஜ.க.வின் அதிகார மயமாக்கலுக்கு எதிரான நம்பகமான மாற்றை காங்கிரஸ் வழங்க வேண்டும். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் கட்சியின் தற்போதைய செயல்பாடுகளை மாற்றிக் காட்டுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.
    • நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன்.

    சென்னை :

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த நிர்வாகியும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தமிழக காங்கிரசில் உள்ள தேசிய கமிட்டி உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்பதற்காக நேற்று சென்னை வந்தார்.

    சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து சசிதரூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சரிந்துள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன். புத்துயிர் ஊட்டுவேன். இதுவரை அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. இதில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன். தனக்கு பிரசாரம் மேற்கொள்ள நேரம் குறைவாக உள்ளது. இதனால் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆதரவு கேட்டு வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சசிதரூர் சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார்.

    • தேர்தலில் நான் போட்டியிடுவதை மூத்த நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை.
    • சிலர் ராகுல் காந்தியை சந்தித்து எனது வேட்பு மனுவை வாபஸ் பெறக்கூறுமாறு தெரிவித்து உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருகிற 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரளாவை சேர்ந்த சசிதரூரும் போட்டியிடுகிறார்கள். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபோல பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சசிதரூருக்கு அவரது சொந்த மாநிலமான கேரளாவில் கூட ஆதரவு இல்லை. கேரள மாநில காங்கிரஸ் தலைவரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுபற்றி சசிதரூர் கூறியதாவது:-

    தேர்தலில் நான் போட்டியிடுவதை மூத்த நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை. அவர்களில் சிலர் ராகுல் காந்தியை சந்தித்து எனது வேட்பு மனுவை வாபஸ் பெறக்கூறுமாறு தெரிவித்து உள்ளனர்.

    அதற்கு அவர் மறுத்து விட்டார். தலைவரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை.
    • தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்க மாட்டேன்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி.சசிதரூர் போட்டியிடும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சுதாகரன், மற்றொரு வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் வந்த சசிதரூர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    எனது வேட்பு மனுவை வாபஸ் பெற வலியுறுத்துமாறு, ராகுல் காந்தியிடம் சில கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை அவரே என்னிடம் தெரிவித்தார். கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி இருக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருவதை அவர் (ராகுல் காந்தி) எனக்கு நினைவு கூர்ந்தார். இந்த தேர்தலில் போட்டியிட்டவர்களை வாபஸ் பெறச் சொல்ல மாட்டேன் என்று என்னிடம் அவர் குறிப்பிட்டார்.

    கட்சியின் பெரிய தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை, உண்மையில், நான் நாக்பூர், வார்தா மற்றும் ஐதராபாத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்தேன். அவர்கள்தான் என்னைப் போட்டியிடச் சொல்கிறார்கள், பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள். நான் அவர்களிடம் பின்வாங்க மாட்டேன் என்று உறுதியளித்தேன்.

    இதுவரை எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் எனக்கு பலத்தை அளிக்கிறது. எனது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் இளம் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள். அனைவரின் ஆதரவும் எனக்கு தேவை, யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.

    யார், யாருக்கு வாக்களிப்பாளர்கள் என்பது யாருக்கும் தெரியாது. தங்கள் விருப்பம் மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப வாக்களிக்கலாம். யார் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவரை தயார்படுத்தலாம். இவ்வாறு சசிதரூர் தெரிவித்தார்.

    • நேரு-காந்தி குடும்பம் வெளிப்படையாகவே ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது.
    • வேட்பாளர்கள் இடையேயான கருத்து பரிமாற்றம், கட்சிக்கும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேயுடன் நேரடியாக மோதுகிற முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கும், பா.ஜ.க. அரசு எந்திரத்தை கையாள்வதற்கும் ஏற்ற வகையில் சில முன்னுரிமை திட்டங்களை கோடிட்டு காட்டி இருக்கிறேன்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவிவாதம் நடத்தலாம் என்ற யோசனையை திறந்த மனதுடன் ஏற்கிறேன்.

    எங்களுக்கு இடையே சித்தாந்த ரீதியில் வேறுபாடுகள் இல்லை. மாறாக நாங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள நோக்கங்களை அடைவதற்கு எப்படி செல்ல போகிறோம் என்பதுதான் இங்கே கேள்வி.

    வேட்புமனு தாக்கல் கடைசி நாளுக்கும், வாக்குப்பதிவு நாளுக்கும் இடையே ஏறத்தாழ 2½ வாரங்கள்தான் இடைவெளி உள்ளது. எனவே, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை (வாக்காளர்கள்) சென்றடைவது என்பது நடைமுறையில், பயண ரீதியில் மிகக் கடினமானது.

    அந்த வகையில், ஒரு பொது மேடையில் வேட்பாளர்கள் தோன்றி கட்சிக்கான தங்களது யோசனைகளை, தொலைநோக்குப் பார்வையை ஆக்கபூர்வமான விதத்தில் பரிமாறிக்கொள்ளலாம். இது பிரதிநிதிகளுக்கு சென்றடைய வசதியாக இருக்கும்.

    அதே நேரத்தில், ஓட்டு போடாதவர்களை- அதாவது மற்ற காங்கிரஸ் தொண்டர்களையும், ஊடகங்களையும், பொதுமக்களையும் இது நிச்சயமாக அதிகளவில் கவரும்.

    வேட்பாளர்கள் இடையேயான கருத்து பரிமாற்றம், கட்சிக்கும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

    உதாரணத்துக்கு இங்கிலாந்தில் நடந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் போட்டியை கூறலாம். தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக தலைவர் பதவிக்கு டஜனுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வெளிப்பட்டதை பார்த்தோம். அதே போன்ற ஒரு சூழலை பிரதிபலிப்பது காங்கிரஸ் கட்சியின் மீதான ஆர்வத்தை தேசிய அளவில் அதிகரிக்கும். அதிக வாக்காளர்கள் கட்சியை நோக்கி வர ஊக்குவிக்கும்.

    நேரு-காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைமை பதவிக்கு வந்தால், அந்த குடும்பம் ஒரு முக்கிய இடத்தை தொடர்ந்து பிடிக்குமா என கேட்கிறீர்கள்.

    நேரு-காந்தி குடும்பம் வெளிப்படையாகவே ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. அது எப்போதும் தொடரும். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இதயங்களில் அவர்களுக்கு சிறப்பான இடம் உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×