search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் - 30ம் தேதி மனுதாக்கல் செய்கிறார் சசி தரூர்
    X

    சசி தரூர்

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் - 30ம் தேதி மனுதாக்கல் செய்கிறார் சசி தரூர்

    • காங்கிரஸ் தலைவராக ராகுலை தேர்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • அசோக் கெலாட்டை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் களம் இறங்க உள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ம் தேதி தொடங்கியது.

    30-ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால் சோனியா, ராகுல் சார்பில் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் நிறுத்தப்படுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் களம் இறங்க உள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 30ம் தேதி காலை 11 மணிக்கு சசி தரூர் மனு தாக்கல் செய்ய உள்ளார் என அக்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×