search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scholarships"

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 507 மனுக்கள் பெறப்பட்டது.
    • மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு ஆணை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டாமாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 507 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓரத்தநாடு வட்டத்தை சேர்ந்த 1 மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆணையினையும், தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு ஆணையினையும், பெருமகளூர் இரண்டாம் நிலை பேரூராட்சி கருணை அடிப்படையில் 1 பயனாளிக்கு தூய்மை பணியாளருக்கான பணி நியமன ஆணையினையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் (வருவாய்) சுகபுத்ரா, (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவில் அமைந்திருக்கும் கிழக்கு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை கடந்த 2001-ம் ஆண்டு 25 இளைஞர்களால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை செய்து வருகிறது. மேலும் நோன்பு காலங்களில் வறுமையில் உள்ளவர்களுக்கு "ஜகாத் உதவி",கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளையும் இந்த அமைப்பு செய்தது.

    இந்த நிலையில் இந்த அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் மாணவர்களுக்கான கல்வித்தொகை மற்றும் மருத்துவ நிதி உதவிகள் 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    • இலவச தொழிற்பயிற்சியில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
    • வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    பூதலூர்:

    செங்கிப்பட்டி-பூதலூர் சாலை புதுப்பட்டியில் இயங்கி வரும் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் இளைஞர்ளுக்கான உதவித் தொகையுடன் லேத் ஆபரேட்டர், சிஎன்சி ஆபரேட்டர், டர்னிங் ஆகிய இலவச தொழிற்பயிற்சிகள் 3 மாத காலம் நடைப்பெற்றது.

    தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சியில் தேர்ச்சிப் பெற்ற 51 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

    முதல் கட்ட பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரியின் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், கல்லூரியின் செயலர் ஜெனட் ரம்யா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் குமரன், பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் மோகன், திறன் மேம்பாட்டுக் கழக பயிற்சியாளர் பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள்.

    இந்த இலவச தொழிற்பயிற்சியில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 8-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் லேத் ஆபரேட்டர் பயிற்சியிலும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்சின்சி ஆபரேட்டர் டர்னிங் பயிற்சியிலும் சேரலாம்.

    இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் அவர்களுக்குரிய உதவித்தொகை வரவு வைக்கப்படும்.

    பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் வேலைவாய்ப்புப் பெற்றுத் தர வழிவகை செய்யப்படும் என்று கல்லூரி தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தெரிவித்தார்.

    • ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை பூா்த்தி செய்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புப் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான மாணவா்கள் 2022-23 ம் ஆண்டு கல்வி உதவித் தொகை பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகலாம்.

    இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் பின்னா் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5, போன் நம்பா்:044-29515942 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொது–மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார்.
    • ரூ.94 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அருந்தவபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்யாண–சுந்தரம் எம்.பி., அம்மா–பேட்டை ஒன்றியக்–குழு தலைவர் கே.வீ.கலைச் செல்வன், துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் குமார், அருந்தவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் தலைமை வகித்து பொது–மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, உள்பட 345 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முடிவில் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை ஊரக வளர்ச்சித்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் அருந்தவபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
    • மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்

    தேனி:

    அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.

    மேலும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச கல்வி திட்டத்தின்கீழ் நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை டிசம்பர் 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் டிசம்பர் 15-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். ஜனவரி 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை 31.10.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • 31.10.2022 வரை மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    சிறுபான்மையினர் இன மாணவ- மாணவிகளுக்கு இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022 -2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை (புதியது மற்றும் புதுப்பித்தல்) விண்ணப்பிக்க இந்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இைைணய தளத்தில் 31.10.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதியது மற்றும் புதப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவ- மாணவிகள் அனைவரும் 31.10.2022 வரை மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண். 0421 - 2999130 மற்றும் மின்ன ஞ்சல் முகவரி dbcwotpr@gmail.com - ல் விவரம் பெற்றுக் கொள்ளலாம் எனவும், மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையின மாணவ மாணவிகள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிறுவனங்களில் பள்ளிப் படிப்புக்கு தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
    • அக்டோபா் 31-ந் தேதி வரையில் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசால் சிறுபான்மையினா்களாக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா்கள்,கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்தவா்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிறுவனங்களில் பள்ளிப் படிப்புக்கு தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

    இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை பெறவும், பதிவை இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ளவும் அக்டோபா் 15 ந் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை) பட்டப் படிப்புகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் தகுதியான மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் புதிதாகவும், புதுப்பிக்கவும் அக்டோபா் 31-ந் தேதி வரையில் மேற்கண்ட இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணிலும் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம். ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
    • தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.

    ஊட்டி,

    ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினாா்.

    இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.

    இதைத் தொடா்ந்து, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஊட்டி காந்தல் பகுதியைச் சோ்ந்த தாரணி, பந்தலூா் பகுதியைச் சோ்ந்த வி.மோனிஷா, தனசஞ்சய், குன்னூா் உலிக்கல் பகுதியைச் சோ்ந்த காளிராஜ் ஆகிய 4 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.

    பின்னா், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

    • மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அரசு பள்ளிகளில் 6முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்படி மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்தனர். இதில் 25 சதவீத மாணவிகளின் வங்கிக்கணக்குகள் மாணவிகள் பெயரில் அல்லாது பெற்றோர் பெயரிலும், ஜாய்ன்ட் அக்கவுண்டாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:-

    கல்லுாரி தரப்பில் மாணவிகள் பெயர், பாடப்பிரிவு, கல்லூரி செயல்படும் மாவட்டம், சேர்ந்த ஆண்டு ஆகிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. பள்ளி தரப்பில் தமிழ்வழியில் பயின்றதற்கான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது வங்கி சார்பில் வங்கிக்கணக்குகள், ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.இதில், மாணவிகள் பலர் தங்கள் பெற்றோரின் பெயரில் உள்ள கணக்குகளை இணைத்துள்ளனர். எங்கள் கல்லூரியில் 298 பேரின் விவரங்கள் பதிவேற்றப்பட்டதில், 53 பேரின் விண்ணப்பங்களில் சிக்கல் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் கனரா வங்கி சார்பில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதே வங்கியில் மாணவிகள் பெயரில் கணக்கு துவங்கி, அப்டேட் செய்யும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதனை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • ஆசிரியர் அலமேலு நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் கமால் பாட்சா நினைவாக மலேசியாதொழிலதிபர் டத்தோ முகமது யூசுப் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு (2021-2022) 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு 7-வது ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மலேசியா டி.எம்.ஒய்.கம்பெனி நிறுவனர் டத்தோ முகமது யூசுப் சார்பில் பள்ளி வளாகத்தில் தொழிலதிபர் பீர் முகம்மது தலைமையில் நடந்தது.

    தினைக்குளம் ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது கான், செயலாளர் முகம்மது ரபீக், தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்த பிளஸ்-2 மாணவர் நிசாந்த், ஜெரிஸ், ஜெயசூர்யா 10-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் நஸ்ரின், நசீமா பாத்திமா, பவதாரணி ஆகியோருக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.44 ஆயிரத்தை தொழிலதிபர் பீர் முகம்மது வழங்கினார்.

    விழாவில் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜாஹிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அலமேலு நன்றி கூறினார். இதற்கான ஒழுங்கிணைப்பு பணிகளை ஆசிரியர் மணிவண்ணன், ஜமாத் செயலாளர் முகம்மது ரபீக் ஆகியோர் செய்தனர்.

    • படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    • www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரைபடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்லாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×