search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apply online"

    • மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • மாணவ-மாணவிகள், விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக, பள்ளிகளில் பயிலும் மாணவ-மாண விகள் விளையாட்டுத் துறை யில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மாண வர்களுக்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வரு கின்றன. மேலும் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்ப லூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, திருச்சி, திரு நெல்வேலி ஆகிய இடங்க ளில் மாணவிக ளுக்கான விளை யாட்டு விடுதி செயல்பட்டு வருகின்றன.

    மேலும் சென்னை, ஈரோட்டில் மாணவர்க ளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதியும், சத்துவாச்சேரி வேலூரில் மாணவர்க ளூக்கான முதன்மை நிலை விளையாட்டு விடுதியும் செயல்பட்டு வருகின்றன.

    இந்த விளையாட்டு விடுதிகளில் 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24-ந்தேதி அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் விளையாட்ட ரங்கங்களில் நடைபெற உள்ளது

    மாணவர்களுக்கான தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல் போன்ற விளையாட்டுக்களில் தேர்வு நடைபெறும். மாணவி களுக்கான தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபடி, டென்னிஸ், ஜீடோ, ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல், மேசைப்பந்து போன்ற விளையாட்டுக்க ளில் தேர்வு நடைபெறும்.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளை யாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள், விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய கடைசி நாள் வருகிற 23-ந் தேதியாகும். விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் சேர விரும்பும் மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வருகிற 24-ந்தேதி காலை 7 மணிக்கு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. 

    • சேலம் மாவட்டத்தில் தாலுகா வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இந்த பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்படுகிறது.

    சேலம்:

    தமிழக அரசு 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் தாலுகா வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் எடப்பாடி-2, கெங்கவல்லி-2, காடையாம்பட்டி-3, மேட்டூர்-12, ஓமலூர் -8, பெத்தநாயக்கன் பாளையம்-11, சேலம்-15, சேலம் தெற்கு-28, சேலம் மேற்கு-8, சங்ககிரி-7, தலைவாசல்-5, வாழப்பாடி-12, ஏற்காடு-6 ஆகிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இந்த பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்படுகிறது. https://cra.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 7-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பம் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பதாரர்கள் தேர்வு முறை மற்றும் இதர விவரங்களை சேலம் மாவட்ட நிர்வாக இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 

    • நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.
    • இந்த சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 181 விற்பனையாளர் மற்றும் 19 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 181 விற்பனையாளர் மற்றும் 19 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் http://www/drbnamakkal.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற நவம்பர் 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    இதன்படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை குறித்து யூடியூப் தளத்தில் கூட்டுறவு துறை மூலம் TN COOP DEPT என்ற சேனலில் உள்ள காணொலியில் வழங்கப்பட்டு உள்ளது. எனவே விண்ணப்ப தாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் ெகாள்ள லாம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனா ளிகள் உதவித்தொகை, கணவ னால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை மற்றும் ஆதர வற்ற விதவை உதவித்தொகை பெற விரும்பும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

    ஆதார் அட்டை, கலர் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எண், குடும்ப அட்டை, செல்போன் எண் ஆகிய உரிய அசல் ஆவணங்களுடன் அருகில் உள்ள இ - சேவை மையத்திற்கு சென்று ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெறு மாறு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித் துள்ளார் .

    • படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    • www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரைபடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்லாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசுக்கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • தடையின்மைச்சான்று பெற தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான தடையின்மைச்சான்று பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பம் செய்ததின் பேரில் தடையின்மை சான்று வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது சென்னை முதன்மைச் செயலர் , வருவாய் நிர்வாக ஆணையரின் 7.6.2022-ம் நாளிட்ட கடிதத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற, தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, எதிர்வரும் காலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×