என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sarashwathi"
- வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.
- வீரர்களின் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள்.
துர்க்கை நெருப்பின் அழகு.
ஆவேசப்பார்வையுடன் அழகாகத் திகழ்கிறாள்.
வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.
இவளைக் "கொற்றவை" என்றும், "காளி" என்றும் குறிப்பிடுவார்கள்.
வீரர்களின் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள்.
மகிஷன் என்ற எருது வடிவம் கொண்ட அசுரனுடன் துர்க்கை ஒன்பது இரவுகள் போரிட்டாள்.
இவையே "நவராத்திரி" எனப்படுகின்றன.
அவனை வதைத்த பத்தாம் நாள் "விஜயதசமி"
மகிஷனை வதைத்தவள் "மகிஷாசுரமர்த்தினி"
மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவத்தில் இருக்கிறது.
நவ துர்க்கை
1. வன துர்க்கை, 2. சூலினி துர்க்கை, 3. ஜாதவேதோ துர்க்கை, 4. ஜ்வாலா துர்க்கை, 5. சாந்தி துர்க்கை, 6. சபரி துர்க்கை, 7. தீப துர்க்கை, 8. ஆசுரி துர்க்கை, 9. லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.
முதல் மூன்று நாள் நிவேதன வினியோகம் :
1. வெண் பொங்கல், 2. புளியோதரை, 3. சர்க்கரை பொங்கல்.
- உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
- வித விதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.
நவராத்திரியில் சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து,
அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு
தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.
இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன்
வித விதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.
பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.
பெண்கள், சிறுவர் , சிறுமிகளின் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை
நவராத்திரி பண்டிகைக்கே உரிய சிறப்பாகும்.
இந்த உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
அதன் அடிப்படையிலேயே பராசக்தியை நவராத்திரி நாட்களில் வழிபடுகிறோம்.
தவிர, உலகைக் காத்து இரட்சிக்கும் ஜகன்மாதாவுக்கு பக்தர்கள் செய்யும் பூஜையாகவும் அமைகிறது நவராத்திரி விழா.
அன்னையை நவராத்திரி காலத்தில் ஸ்ரீராமன் பூஜை செய்ததாக புராணங்கள் மூலம் தெரிய வருகிறது.
நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலுப்படி அமைத்து, தெய்வ பொம்மைகளை வைத்து மகிழ்வது
தொன்று தொட்டு வரும் வழக்கமாக உள்ளது.
இந்த நாட்களில் கொலு வைத்து வழிபடுவதோடு, ஆண்டு முழுவதும் அம்பிகையை நம் இதயங்களில் நிரந்தரமாக வைத்து வழிபடல் வேண்டும்.
அம்பிகையின் சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
- லட்சுமி ரூபமானது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கக்கூடியவள்.
- ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.
பரப்பிரும்மம் ஒன்றே என்றாலும், உலக மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு
துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் அம்பிகையானவள் தன் மகிமையை வெளிப்படுத்துகிறார்.
முதல் மூன்று நாட்கள் துர்கா சக்தி ரூபமாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் லட்சுமி வடிவாகவும்,
கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி ரூபமாகவும் அம்பாளை சித்தரித்து வழிபடுகிறோம்.
துர்காதேவி துன்பங்களை போக்குபவள்.
லட்சுமி ரூபமானது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கக்கூடியவள்.
நல்லறிவு இருந்தால் தான் பூரண ஆனந்தத்தை அடைய முடியும் என்பதால்,
அந்த அறிவை வேண்டி நவராத்திரி விழாவின் நிறைவாக 3 நாட்கள் சரஸ்வதி தேவியாகப் பாவித்து வழிபடுகிறோம்.
9 நாட்கள் நிறைவடைந்து 10 வது நாளான விஜயதசமி அன்று அம்பிகையானவள்,
ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே
இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது.
அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம்.
ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.
- மறுமையில் நன்மை பெற -துர்க்கையை வழிபடவும்
- மனவிருப்பம் நிறைவேற -சுபத்திரையை பூசிக்கவும்
பகைவனை வெல்ல - காளியை வழிபடவும்.
செல்வம் விரும்பினால் -சண்டியைப் பூசிக்கவும்
அரசர்களை மயக்க -சாம்பவி பூசை செய்யவும்
இன்னல், எளிமை அகல -துர்க்கையை வழிபடவும்
போரில் வெற்றிபெற -துர்க்கையை வழிபடவும்
கொடும் பகைவனை அழிக்க -துர்க்கையை வழிபடவும்
மறுமையில் நன்மை பெற -துர்க்கையை வழிபடவும்
மனவிருப்பம் நிறைவேற -சுபத்திரையை பூசிக்கவும்
நோய் விலக -ரோகிணியை வணங்கவும்
- பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
- அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.
அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.
பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
- நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
- அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு,
அடுத்த 3 நாட்கள் மஞ்சள்
நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.
வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:
முதல் நாள் பச்சை,
இரண்டாம் நாள் மஞ்சள்,
மூன்றாம் நாள் நீலம்,
நான்காம் நாள் கருநீலம்,
ஐந்தாம் நாள் சிவப்பு,
ஆறாம் நாள் கிளிப்பச்சை,
ஏழாம் நாள் இளஞ்சிவப்பு,
எட்டாம் நாள் பச்சை/அரக்கு பார்டர்,
ஒன்பதாம் நாள் வெந்தய கலர்.
- இங்கு, ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.
- இதை நினைவு கூறும் விதத்தில் “ராமலீலா” என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்ளில் ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.
ராமபிரான் இலங்கைக்கு போருக்கு சென்றபோது பேராற்றலும், பலமும் வேண்டி அம்பிக்கையை பூஜித்தார்.
இதை நினைவு கூறும் விதத்தில் "ராமலீலா" என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி அன்று ராவணனின் உருவத்தை பத்து தலைகளுடன் செய்து அதை நெருப்பிட்டு எரிக்கிறார்கள்.
அந்த பொம்மைக்குள் பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை நிரப்பி மைதானங்களில் வைத்து கொளுத்தி விடுவார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு "ராவண தகனம்" என்று பெயர்.
மனதில் உள்ள தீய எண்ணங்களை நீங்கி நல்லருள் பெற வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
- மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர்.
- வன்னி மரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.
மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமி தினத்தன்று வழிபடுவதோடு, அதன் இலைகளையும் பறிப்பர்.
அங்கு வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர்.
இளைஞர்கள் இந்நாளில் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசியைப் பெறுவார்கள்.
பெரியவர்களும் ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெற வேண்டும் என்ற அடிப்படையில்
அந்த இலைகளை கொடுத்து "இதை தங்கமாக நினைத்து பெற்றுக் கொள்ளுங்கள்" என சொல்லி ஆசீர்வதிப்பர்.
மகாராஷ்டிரா மாநில கோவில்களில் வன்னி மரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.
- மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- “தஸ்ராத்” என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.
மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அரசு சார்பில் இங்கு மிகப் பிரமாண்டமான ஊர்வலம் நடத்தப்படும்.
ஒரு காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன் மைசூர் சாமுண்டீசுவரியை ஒன்பது நாட்கள் இரவு நேரத்தில் சென்று வணங்குவது வழக்கம்.
10வது நாளான விஜயதசமி நாளில் போருக்கு புறப்பட்டு செல்வர்.
இதன் மூலம் தேவி அருளால் வெற்றி வாகை சூடி மகிழ்வர்.
இன்றும் மைசூரில் தசரா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
"தஸ்ராத்" என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.
இச்சொல்லே திரிந்து "தசரா" என்று வழங்கப்படுகிறது.
முதல் ஒன்பது நாளும் நவராத்திரியாகவும், பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடுகிறார்கள்.
நவராத்திரியின் போது புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர்.
- அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.
- பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.
பார்வதிதேவி சிவலோகத்தில் இருந்து தன் பிறந்த வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சியாக
மேற்கு வங்கத்தில் காளிபூஜை கொண்டாடப்படுகிறது.
இந்த சமயத்தில் மேற்கு வங்காள பெண்கள் எத்தனை வயது உடையவராக இருந்தாலும்,
அவரவர் பிறந்த வீட்டுக்கு செல்வது வழக்கம்.
அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.
தன் வீட்டில் இருக்கும் ஆபரணங்களையும், இனிப்பு வகைகளையும் மகள் மீது அள்ளி எறிந்து மகிழ்கின்றனர்.
தவிர்க்க முடியாத காரணத்தால் பிறந்த வீட்டிற்கு வர முடியாமல் போனால்,
பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.
இதனால் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டிற்கும் நல்லுறவை உண்டாகும் பாலமாக இந்த விழா திகழ்கிறது.
- இவள் மிகவும் கோபக்காரி. நீதியை காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
- நவராத்திரி ஒன்பதாம் நாள் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.
நவராத்திரி ஒன்பதாம் நாள் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.
தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள்.
முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள்.
இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர்.
இவள் மிகவும் கோபக்காரி.
நீதியை காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது.
அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர்.
அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.
- மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.
- சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
நவராத்திரி எட்டாம் நாள் அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும்.
மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.
கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள்.
சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
மூல மந்திரம்: ஓம் – ஸ்ரீம் – நரஸிம்யை – நம
காயத்ரி: ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!
எட்டாம் நாள் நைவேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்