search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி வழிபாடு"

    • அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.
    • தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊர் அருகே கூத்தனூர் என்னும் கிராமத்தில்

    அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.

    இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவி நான்கு திருக்கரங்களுடனும், அருள் ஞானமுத்திரை ஆகியவற்றுடனும்

    தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    இங்கு சரஸ்வதி பூஜை நாளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

    அந்நாளில் பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    கூத்தனூரில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோ மீட்டர் வரை வியாபித்துள்ள

    அரசலாற்றுக் கரையில் தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியங்கள் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

    இங்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தைகள் கல்வி மேன்மைக்கு வழிபாடு செய்யவும்,

    அவரவர் பாப கர்ம வினையிலிருந்து விடுபடவும் திரிவேணி சங்கம நீராடலுக்கும்,

    கணவன் மனைவி பிரிவிலிருந்து மீளவும் இது மிகச்சிறந்த பிராத்தனைத்தலம் என்று தலபுராணம் கூறுகிறது.

    மேலும் கம்பர் காலத்தில் அவைப்புலவர்களில் ஒருவராக இருந்த ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில் இது எனவும்

    இக்காரணம் தொட்டே இது கூத்தனுர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுவதுண்டு.

    இங்கு குடியிருக்கும் சரஸ்வதி தேவி பேச முடியாதவரையும் பேச வைக்கும் அருள் உள்ளம் கொண்டவள்.

    வாக்கு வன்மை யும் காவியம் இயற்றும், புலமையும் தருபவள்.

    நவராத்திரியின் போது பக்தர்கள் அம்மனைத் தொட்டு மலர்களால் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    • ஆதி பராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.
    • தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

    கல்வி, இசை, புகழ், செல்வம் தானியம், வெற்றி, பூமி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.

    ஆதி பராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.

    லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும்.

    சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும்.

    பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும்.

    எனவேதான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள்.

    தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.

    இதற்கு காரணம், தேவியால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக,

    பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகிய மும்மூர்த்திகளும் உருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர்.

    எனவே, சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.

    • குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
    • புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களை கட்டும்.

    குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா பெரும் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த சமயத்தில் ஊர் முழுவதும் உள்ள ஆட்ட கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு தெருவெங்கும் நடனமாடி

    திருவிழா நடத்த வேண்டிய தொகையை வீடுகள் தோறும் காணிக்கையாக பிச்சையெடுப்பர்.

    புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களை கட்டும்.

    கொண்டாடி விட்டு 10ம் நாள் விஜயதசமியன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    இந்த நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும்.

    இதை தவிர ஆடிக்கொடை திருவிழா, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி

    போன்ற தினங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    அம்மை நோய் கண்டவர்கள் நலமடைய இங்கே பிரார்த்திக்கின்றனர்.

    மேலும் ஊனமுற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் சொத்துக்கள் இழந்தவர்கள்,

    வியாபார விருத்தியடைய விரும்புபவர்கள் ஆகியோரும் மாவிளக்கு பூஜை,

    அங்க பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல் வேல் அம்பு குத்தல் என தங்களால் இயன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பலனடைகின்றனர்.

    • எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.
    • இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    அழகிய கடற்கரை கிராமமான குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம்

    திருநெல்வேலியிலிருந்து 68 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

    இயற்கை எழில் கொஞ்சும் கடலோர கிராமமான குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவிலேயே

    மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும் அம்மன் அருள்மிகு முத்தாரம்மன்.

    குலசை முத்தாரம்மன் என்றால் மிக பிரசித்தம்.

    தலப்பெருமை:

    பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.

    ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு

    மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக

    வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.

    • உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
    • வித விதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.

    நவராத்திரியில் சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து,

    அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு

    தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.

    இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன்

    வித விதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.

    பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.

    பெண்கள், சிறுவர் , சிறுமிகளின் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை

    நவராத்திரி பண்டிகைக்கே உரிய சிறப்பாகும்.

    இந்த உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.

    அதன் அடிப்படையிலேயே பராசக்தியை நவராத்திரி நாட்களில் வழிபடுகிறோம்.

    தவிர, உலகைக் காத்து இரட்சிக்கும் ஜகன்மாதாவுக்கு பக்தர்கள் செய்யும் பூஜையாகவும் அமைகிறது நவராத்திரி விழா.

    அன்னையை நவராத்திரி காலத்தில் ஸ்ரீராமன் பூஜை செய்ததாக புராணங்கள் மூலம் தெரிய வருகிறது.

    நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலுப்படி அமைத்து, தெய்வ பொம்மைகளை வைத்து மகிழ்வது

    தொன்று தொட்டு வரும் வழக்கமாக உள்ளது.

    இந்த நாட்களில் கொலு வைத்து வழிபடுவதோடு, ஆண்டு முழுவதும் அம்பிகையை நம் இதயங்களில் நிரந்தரமாக வைத்து வழிபடல் வேண்டும்.

    அம்பிகையின் சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    • ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் நவராத்திரி வழிபாடு.
    • வீரம், செல்வம், கல்வி என்ற முப்பெரும் சக்திகள்.

    யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்

    தீதுநன்மை எல்லாம் காளி தெய்வ லீலையன்றோ

    பூதம் ஐந்துமானாய் காளி பொறிகள் ஐந்துமானாய்

    துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய்

    -என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முப்பெரும் தேவியர்களும் ஒன்றாகி நாம் ஒவ்வொருவருடைய துன்பங்களையும், தொல்லைகளையும் போக்கி இன்ப வாழ்வு வழங்க நவராத்திரி விழாவையே நாம் கொண்டாடுகிறோம்.

    மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு

    நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும், இச்சா சக்தி. துர்க்கை- வெற்றியின் தேவதை, வீரத்தின் தெய்வம் சிவப்பிரியை. மகிசன் என்னும் அரக்கனை 9 இரவுகள் போரிட்டு வெற்றி கண்டவள். கிரியா சக்தி- திருமகள் விஷ்ணுபிரியை, செல்வத்தின் உறைவிடமே இவரின் இருப்பிடம். ஞானசக்தி-சரஸ்வதி பிரம்மாவின் பிரியை, ஆயகலைகளுக்கும், கல்விக்கும் அதிபதி. வீரம், செல்வம், கல்வி என்ற முப்பெரும் சக்திகள் தான் இந்த உலகத்தையே ஆள்கின்றனர்.

    இந்த முப்பெரும் சக்திகளின் வழிபாடான, நவராத்திரியை தான் 9 நாட்கள் நாம் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். வருடத்தில் 4 நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி, புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரி மகா நவராத்திரி என்றும் சாரதா நவராத்திரி என்றும் கூறுவர். தை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை ஷியாமளா நவராத்திரி என்றும், சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

    வருடத்தில் 4 நவராத்திரிகள் இருந்தாலும், இரண்டு நவராத்திரிகளை கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று தேவிபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் குளிர்காலம் ஆரம்பமாகின்ற மாதம், அதேபோல சித்திரை மாதம் கோடையின் துவக்க காலம். இந்த இரு மாதங்களும் எமதர்மனின் கோரை பற்கள். இந்த இரு மாதங்களில் தான் நோய்கள் அதிகமாக பரவும் என்று அக்னி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பருவ காலம் மாறும்போது நோய்கள் அதிகம் பரவும். எனவே இந்த இரு மாதங்களில் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று நீண்ட              ஆரோக்கியமாக வாழ அருள் தரக்கூடியள் தான் அகிலாண்ட நாயகியான அம்பிகை. அதனால் தான் புரட்டாசி, சித்திரை மாதங்களில் வரக்கூடிய நவராத்திரியை கொண்டாட வேண்டும் என்று நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றோம்.

    காலப்போக்கில் எல்லா நவராத்திரியும் மறைந்துபோய் புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி மட்டும் வழக்கத்தில் உள்ளது. நவராத்திரி விழாவை தெய்வங்களும், தேவர்களும் கூட கொண்டாடி பலன் அடைந்துள்ளனர். ராமபிரான் நவராத்திரி பூஜை செய்து தான் சீதை இருக்கக்கூடிய இடத்தை கண்டறிந்தார் என்று தேவி பாகபதம் தெரிவிக்கிறது. கண்ணபிரானுக்கு வந்த துன்பம் நவராத்திரி பூஜை செய்ததால் தான் நீங்கியது. இந்த நவராத்திரி பூஜை செய்ததால் தான் பஞ்சபாண்டவர்கள் பாரதப்போரில் வென்றார்கள் என்று நம்முடைய புராணங்கள் பதிவு செய்துள்ளன.

    தீய சக்திகள் மேலோங்கும் போது மக்களை காப்பாற்றிட அம்மனை வேண்டினால் அகிலாண்ட நாயகியாக அன்னை சண்டிகையாக 9 வடிவங்கள் எடுத்து தீமைகளை அழித்து நன்மை செய்வாள் என்று தேவி மகாமத்யம் அழகாக விவரிக்கிறது. இதுபோன்ற நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபாடு செய்கிறோம்.

    முதல் நாள்- தேவி மகேஸ்வரி பாலா

    இரண்டாம் நாள்- கவுமாரி ராஜராஜேஸ்வரி

    மூன்றாம் நாள்- கல்யாணி

    நான்காம் நாள்- மகாலட்சுமி, ரோகிணி

    ஐந்தாம் நாள்- வைஷ்ணவி மோகினி

    ஆறாம் நாள்- இந்திராணி

    ஏழாம் நாள்- மகா சரஸ்வதி சுமங்கலி

    எட்டாம் நாள்- நரசினி

    ஒன்பதாம் நாள்- லிலிதா பரமேஸ்வரி

    இவ்வாறு 9 நாட்களும் அம்பிகையை இவ்வாறு அலங்கரித்து அழைக்கப்படுகிறாள்.

    நவராத்திரி பெருவிழாவின் 9-வது நாள் மகாநவமி அன்று நாம் செய்யும் தொழிலையும், கல்வியையும், கலையையும் மதிக்கும் வண்ணம் அதற்கு நாம் வழிபாடு செய்கின்றோம். விஜயதசமி நாளில் தான் அம்பிகை, மகிஷாசுரன், அரக்கர்கள், சிம்ப, நிசும்பன் அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள்.

    பாண்டவர்கள் தங்களுடைய வெற்றிக்காக தங்களுடைய ஆயுதங்களை துர்க்கா தேவி முன்னிலையில் தான் வழிபட்டனர். நவராத்திரியின் 9 நாட்களில் பூஜை விரதத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பூஜை, விரதத்தை கடைபிடிக்காதவர்கள் அஷ்டமி நாளிளாவது விரதம் இருக்கலாம். நவராத்திரியில் திருமகளை துதித்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களையும் தந்து முக்தி கிடைக்கும்.

    புரட்டாசி மாத நவராத்திரியின் போது கொலு வைப்பது என்பது பரம்பரையாக செய்யப்பட்டு வரக்கூடிய பக்தி நிகழ்வு. எல்லாருடைய நட்பையும் பெருகச்செய்வது தான் இந்த கொலுவின் முக்கிய நோக்கமே. நவராத்திரி கொண்டாடுவதால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மீது குழந்தைகள் வரை அனைவருக்குமே பங்குண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை உணர்வு, பக்தியும் அதிகரிக்கிறது.

    நவராத்திரியினால் ஆன 9 இரவுகள் தனி சக்தியாக விளங்கக்கூடிய ஜகன் மாதா 10-வாது நாள் இறைவனாகிய சிவபெருமானை வணங்கி சிவசக்தியாக, அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமானுடன் ஐக்கிய ரூபினியாக மாறுகிறார். இதுதான் நவராத்திரி புராண வரலாறு.

    • கன்னிப்பெண்களுக்கு திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.
    • 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்து வழிபட்டால் நினைக்கும் பலன்கள் கிடைக்கும்.

    * சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், வேலையில் மேன்மை அடைய வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச்செழிப்பு பெருகும்.

    * தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, மஞ்சள், குங்குமம், தாம்பூலம், புத்தாடை போன்ற பலவிதமான மங்கலப்பொருட்களை தானமாக அளிக்க வேண்டும். நவராத்திரி பூஜை நாட்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து சுமங்கலிப் பெண்களுக்கு அன்னதானம் செய்து, புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால், கன்னிப்பெண்களுக்கு திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.

    * நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்து வழிபட்டால், மனதில் நினைக்கும் பலன்கள் கிடைக்கும். நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.

    * புரட்டாசியில் வரும் நவராத்திரியை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், ஆண்டுதோறும் நான்கு விதமான நவராத்திரிகள் வரும். பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகா வராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகியவை அவை. இந்த நான்கு நவராத்திரிகளையும் முறையாகக் கடைப்பிடிக்கும் பெண்கள், அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள், புரட்டாசி நவராத்திரியைப் பக்தியுடன் கடைப்பிடிக்கலாம்.

    • 9 நாட்கள் பகலும் இரவும் தொடர்ந்து பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும்.
    • இடைவிடாமல் எரியும் அகண்ட தீபம் ஏற்றி வைத்து அம்பாளை ஆராதனை செய்யலாம்.

    நவராத்திரியில் நான்கு வகை உண்டு. ஆனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் 9 நாட்களை `ஆஷாட நவராத்திரி' என்றும், புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் ஒன்பது நாட்களை `சாரதா நவராத்திரி' என்றும், தை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரக்கூடிய நவராத்திரியை `மகா நவராத்திரி' என்றும், பங்குனி மாதத்திற்கு பின் அமாவாசைக்கு அடுத்து வரும் நவராத்திரியை `வசந்த நவராத்திரி' என்றும் சொல்வார்கள்.

    நவராத்திரி கொண்டாடும் வழக்கம் குறித்து கூறும்பொழுது புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் எமதர்ம ராஜாவின் இரண்டு கோரைப் பற்கள் என்று கூறுவார்கள். அனைத்து ஜீவராசிகளும் இந்த பற்களில் அகப்பட்டு துன்பம் இல்லாமல் இருக்க, நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அக்னி புராணம் கூறுகிறது.

    நான்கு நவராத்திரிகள் இருந்தாலும், பல இடங்களில் பிரசித்தியாக கொண்டாடப்படும் நவராத்திரியாக, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் பகலும் இரவும் தொடர்ந்து பூஜை செய்து விரதம் இருப்பது இந்த விழாவின் சிறப்பாகும்.

    சுரதன் என்ற மன்னன், தான் ஆட்சி செய்த தேசத்தை நல்ல முறையில் ஆண்டு வந்தான். எல்லாவிதமான தர்மங்களும் தெரிந்த அந்த மன்னனை, மக்கள் அனைவரும் போற்றினர். அந்த நேரத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு பிரதேசத்தில் இருந்து ஒரு பிரிவினர், சுரத மன்னனின் நாடு மீது படையெடுத்து வந்தனர். சுரத மன்னன் நல்ல வீரனாகவும், போர்த் திறமை மிக்கவனாகவும் இருந்தாலும், சூழ்ச்சியின் காரணத்தால் அந்தப் போரில் தோல்வியடைந்தான்.

    தன் மந்திரிகளே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்ததை அறிந்து வருந்திய மன்னன், தன் நாட்டை விட்டு காட்டிற்குச் சென்றான். அப்போது காட்டில் தவம் செய்து கொண்டிருந்த சுமேதஸ் என்ற மகரிஷியைச் சந்தித்தான். அவரிடம் தன்னுடைய நிலையைச் சொல்லி வருந்தினான். அந்த மகரிஷி மன்னனிடம், `சில நாட்கள் நீ இங்கேயே தங்கி இரு' என்றார்.

    அப்படி அவ்விடத்தில் மன்னன் தங்கியிருந்த நேரத்தில், சமாதி என்ற வியாபாரி ஒருவனும் அங்கு வந்து சேர்ந்தான். அவனும் மகரிஷியிடம் `நான் நல்ல முறையில் வியாபாரம் செய்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னை சேர்ந்த மற்றவர்கள் செய்த சூழ்ச்சியால் அனைத்து செல்வத்தையும் இழந்தேன். என் மனைவி, பிள்ளைகளும் என்னை மதிக்கவில்லை. அதனால் கடன் அதிகமாகி மனம் வருந்தி தனித்து இந்த காட்டை வந்தடைந்தேன்' என்றான்.

    பின்னர் மன்னனையும், வியாபாரியையும் பார்த்து, `உங்கள் இருவருக்கும் துயரங்கள் தீர, அற்புதமான தேவியின் மந்திரத்தை உபதேசிக்கிறேன். இந்த வனத்தில் இருந்து ஜெபியுங்கள்' என்றார் மகரிஷி. அவர்களும் தேவியின் அந்த மகா மந்திரத்தை வனத்தில் இருந்து நீண்ட காலம் ஜெபம் செய்தனர். தேவியின் உருவத்தை மண்ணில் செய்து வைத்து வழிபட்டனர்.

    அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்து தேவி அங்கே தோன்றி, `உங்கள் இருவருக்கும் என்ன வேண்டும்?' என்று கேட்டாள். அவர்களும் தங்கள் நிலையை சொல்லி வரம் கேட்டனர். அரசனைப் பார்த்து, `நீ இழந்த ராஜ்ஜியத்தை அடைவாய். அடுத்த ஜென்மத்தில் மனுவாக பிறப்பாய்' என்று வரம் கொடுத்தாள். வியாபாரியை பார்த்து `சம்சார பந்தம் உன்னை விட்டு விலகும். நீ இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று, நிறைய தான தர்மங்கள் செய்து மோட்சத்தை அடைவாய்' என்றாள்.

    அதன்படி சுரத மகாராஜா தன் நாட்டையும், வியாபாரி மோட்சத்தையும் அடைந்தனர். அவர்கள் மண்ணில் அம்மன் உருவை செய்து வைத்த வழிபட்டதன் காரணமாகவே, இன்றும் நாம் நவராத்திரி வேளையில் பொம்மைகளால் கொலுவைத்து வழிபாடு செய்கிறோம்.

    விரதம் இருப்பது எப்படி?

    13 அத்தியாயங்களும், 700 சுலோகங்களும் கொண்டது, தேவி மகாத்மியம். இதை `சப்த சதி' என்றும் சொல்வார்கள். நவராத்திரியில் இதை முறையாக பாராயணம் செய்வது மிக விசேஷமானது.

    யம் யம் சிந்தயதே காமம்

    தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்

    இதை படிப்பதால் எதை கேட்கிறோமோ அதை அம்பாள் கொடுப்பதாக ஐதீகம்.

    நவராத்திரி ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும், அம்பாளை வழிபாடு செய்வார்கள். 9 நாட்களும் தினமும் சுத்தமாக உபவாசம் இருந்து அம்பாளை அர்ச்சனை செய்வதும், நவாவரண பூஜை செய்வதும், சப்த சதி என்னும் தேவி மகாத்மியத்தை பாராயணம் செய்வதும், சுவாசினி பூஜை செய்வதும், கன்னியா பூஜை செய்வதும், தினமும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்வதும், சவுந்தர்ய லஹரி படிப்பதும் மிக விசேஷமானதாகும்.

    தினமும் பூஜை செய்ய முடியாவிட்டால் அஷ்டமி அன்றும், மகா நவமி அன்றும் மட்டுமாவது பூஜிப்பது சிறப்பான பலனைத்தரும். நவராத்திரி ஒவ்வொரு நாளும், ஒரு சுஹாசினி மற்றும் ஒரு கன்னியான குழந்தையை வீட்டுக்கு வரவைத்து, அவர்களை அம்மனாக பாவித்து வஸ்திரம், மாலை, வளையல் போன்ற மங்கலகரமான பொருட்களைக் கொடுத்து, அவர்களை சாப்பிட வைத்து அம்பாளாக நமஸ்கரிக்க வேண்டும்.

    நவராத்திரி ஒன்பது நாளும் பூஜை அறையில் தெய்வ அருள் தொடர்ந்து இருக்க இடைவிடாமல் எரியும் அகண்ட தீபம் ஏற்றி வைத்து அம்பாளை ஆராதனை செய்யலாம். அவரவர் வசதிக்கேற்ப மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினோறு படிகளில் மண் பொம்மைகளை வைத்து வழிபாடு செய்யலாம். பிளாஸ்டிக் பொம்மைகளை தவிர்ப்பது உத்தமம்.

    அம்பாளை இந்த ஒன்பது நாளும் அந்தந்த தினத்திற்கு சொல்லிய கோல மிட்டு, சுண்டல் செய்து, அந்தந்த தினத்திற்குரிய பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்தும், அந்தந்த தினத்திற்குரிய பாடல்களைப் பாடியும், அம்பாளை வழிபாடு செய்தால், நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும், அந்த குடும்பத்தில் உண்டாகும்.

    நவராத்திரி அன்று எந்தவித பூஜைகளும் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அபிராமி அந்தாதியில் வரும் `வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை, பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த, ஐயன் திருமனை யாள்அடித் தாமரைக்கு அன்புமுன்பு, செய்யும் தவமுடை யார்க்கு உளவாகிய சின்னங்களே' என்ற பாடலையாவது, ஒன்பது நாளும் தொடர்ந்து சொல்லி வர அம்பாளின் அருள் கிடைக்கும்.

    சகல சித்திகளையும் தரக்கூடிய `ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே' என்ற நவராதிரி மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.

    ×