search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முப்பெரும் தேவியர்-துர்க்கை
    X

    முப்பெரும் தேவியர்-துர்க்கை

    • வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.
    • வீரர்களின் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள்.

    துர்க்கை நெருப்பின் அழகு.

    ஆவேசப்பார்வையுடன் அழகாகத் திகழ்கிறாள்.

    வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.

    இவளைக் "கொற்றவை" என்றும், "காளி" என்றும் குறிப்பிடுவார்கள்.

    வீரர்களின் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள்.

    மகிஷன் என்ற எருது வடிவம் கொண்ட அசுரனுடன் துர்க்கை ஒன்பது இரவுகள் போரிட்டாள்.

    இவையே "நவராத்திரி" எனப்படுகின்றன.

    அவனை வதைத்த பத்தாம் நாள் "விஜயதசமி"

    மகிஷனை வதைத்தவள் "மகிஷாசுரமர்த்தினி"

    மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவத்தில் இருக்கிறது.

    நவ துர்க்கை

    1. வன துர்க்கை, 2. சூலினி துர்க்கை, 3. ஜாதவேதோ துர்க்கை, 4. ஜ்வாலா துர்க்கை, 5. சாந்தி துர்க்கை, 6. சபரி துர்க்கை, 7. தீப துர்க்கை, 8. ஆசுரி துர்க்கை, 9. லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

    முதல் மூன்று நாள் நிவேதன வினியோகம் :

    1. வெண் பொங்கல், 2. புளியோதரை, 3. சர்க்கரை பொங்கல்.

    Next Story
    ×